தம்பி நினைவிருக்கின்றதா
தம்பி நினைவிருக்கின்றதா, அன்று திராவிட நாடு கோரிக்கையினை கைவிடும் பொழுது அண்ணண் என்ன சொன்னேன்? தேர்தலில் வென்று இனி ஆட்சி அமைப்போம் நீ மந்திரி என்றீர்கள் ஆட்சி பதவி தவிர நீ வேறு எதை சிந்தித்தாய்? தம்பி திராவிட நாட்டு கோரிக்கையினை கைவிடுகின்றோமே அன்றி அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன. ஒன்றுபட்ட நாட்டில் மாநிய சுயாட்சி வேண்டும், மொழி உரிமை வேண்டும், அது வேண்டும் இது வேண்டும் என எப்படி நீட்டி முழக்கினோம் ஆம் அண்ணா அதற்கென்ன? […]