பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வடமாராட்சி தாக்குதல்

அந்த வடமாராட்சி தாக்குதலில் புலிகள் கொல்லபடும் நிலையில் இருந்தனர், ஏராளாமன மக்கள் சாகும் நிலை இருந்தது, இனி புலிகள் தமிழரை காக்க முடியாது என்ற நிலை அது இந்தியா முற்றுகையினை விலக்க சொன்னது, ஜெயவர்ததனே கேட்கவில்லை, ராஜிவ் கப்பல் நிறைய உதவிபொருளை அனுப்பினார், இலங்கையோ திருப்பி அனுப்பியது ஐ.நா அனுமதி இன்றி விமானம் மூலம் உதவி பொருளையும் பாதுகாப்பிற்காக மிக் விமானத்தையும் அனுப்பி இலங்கையினை மிரட்டியது இந்தியா, அதன் பின்பே இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் வந்தது,அமைதியும் […]

சிதறல்கள்

அடுத்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல்_பரிசு பாரத பிரதமர் மோடி க்கு கொடுக்க வேண்டும் : தமிழிசை உலகில் தீவிரவாதத்தால் பாதிக்கபட்ட மூன்றாம் நாடு என உலக ஆய்வு இந்தியாவினை சொல்கின்றது ஈரானும் ,ஆப்கனும் முதல் இரண்டாம் இடமாம் இந்தியா மூன்றாம் இடமாம் அப்படி இந்தியாவில் என்ன தீவிரவாதம் என்றால், ஆளும் கட்சியே மத தீவிரவாத கட்சி, அது மசூதி இடித்து, பலரை கொளுத்தி மாட்டை போற்றி மனிதரை கொன்று என பட்டியல் நீள்கின்றது ஆக இந்தியா காவி […]

போஸ்டர் அடித்தவனை….

இந்த போஸ்டர் அடித்த அந்த சாதியினர் சொல்வது என்னவென்றால் எங்கள் சாதியினையும் எங்கள் கூட்டமைபினையும் “அறிவுகெட்ட சாதி” என ஒரு பட்டியல் இடுங்கள் என்பதன்றி வேறல்ல‌ இந்த முற்சாதி, பிற்சாதி வரிசையில் அறிவுகெட்ட சாதி என ஒன்றை உருவாக்கி எங்களை சேருங்கள் என கெஞ்சுகின்றார்கள் முன்பு தாழ்த்தபட்ட சாதி, தீண்டதகாத சாதி இருந்தது போல நாங்கள் “மடையர் சாதி”, “அறிவுகெட்ட சாதி ” என சொல்லுங்கள் என உருகிகேட்கின்றார்கள், பரிதாபம் பின் என்ன? இந்திய தேசியத்திற்காக வாழ்வினை […]

சிதறல்கள்

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்பது போல எச்.ராசாவும், எஸ்.வீ சேகரும் கைது , சிறைக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள் இது புரியாமல் ஆளாளுக்கு பேசி ஒன்றும் ஆகபோவதில்லை. இது அதிமுக ஆட்சி என்றல்ல, திமுக என்றாலும் நிலை நிச்சயம் இதுவேதான் ஆம், சோ ராமசாமி கிழியாய் கிழித்தபொழுதும் அவர்மேல் துரும்பினை போட கூட யோசித்த கட்சி திமுக.. இங்குள்ள சிக்கல் அப்படி… —————————————————————————————————————————————- கருணாஸை பிடித்து உள்ளே போட்ட அரசு ஏன் எச்.ராசாவினை பிடிக்கவில்லை என ஆளாளுக்கு […]

சிதறல்கள்

சர்ச்சை பேச்சு பேசிய கருணாஸ் கைது சினிமாவில் வசனம் பேசியது போல் பொதுகூட்டத்திலும் பேசிவிட்டார், சட்டையினை கழற்றிவிட்டு சண்டைக்கு வாடா என காவல்துறையினை அழைக்காமல் நிஜத்தில் உள்ளே சென்றுவிட்டார் எனினும் அந்த கூட்டத்தின் எடப்பாடிக்கே தன் மீது பயம் என்றும், தன் மேல் கைவைத்தால் இன்னும் பல ரகசியங்களை வெளியிடுவேன் என மிரட்டினார் அந்த ரகசியம் வருமா வராதா என தெரியாது, எனினும் கருணாஸ் அமைச்சராகி பழனிச்சாமியின் வலது பக்கம் அமர்ந்துவிட்டால் ரகசியம் இருப்பதாகவே அர்த்தம் ஆம் […]

மாபெரும் ரபேல் ஊழல்

இந்த அரசு வந்ததில் இருந்தே அம்பானிக்கு ஆதரவான சார்பினை எடுப்பது உலகம் அறிந்தது, அம்பானியின் ஜியோ இன்று எதிரிகளை ஒழித்து தனிபெரும் சக்தியாக உருவெடுத்திருப்பது அதற்கு ஒரு சான்று இன்னும் ஏராளமான சான்றுகள் உண்டு, ஆனால் மகா முக்கியமான பாதுகாப்பு விஷயத்திலும் அம்பானியினை நுழைத்திருக்கின்றார்கள் என்பதுதான் ஏற்றுகொள்ள முடியா விஷயம் இந்த மோடி வந்த உடன் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தார், நல்ல திட்டம்தான். ஆனால் அப்படி யார் வந்து இங்கு எதை உருவாக்கினார்கள் […]

சிதறல்கள்

September 22, 2018 எல்லையில் இஸ்ரேலிய பாணியில் மின் அலை வேலி அமைத்துவிட்டோம் இனி ஒரு பயலும் ஊடுருவமுடியாது என்றார் ராஜ்நாத் சிங் ஆனால் பாகிஸ்தானியரோ அவர்கள் போக்கில் வந்து ஒரு ராணுவ வீரரையும் சில போலிஸ்காரர்களையும் கொடூரமாக கொன்றிருக்கின்றார்கள் ஆக இவர்கள் மின் வேலி எல்லாம் சும்மா கட்டுகதை, தமிழிசை போலத்தான் உச்ச தலமை வரை பேசிதிரிகின்றார்கள் மின்வேலி அமைத்துவிட்டோம் வந்துபார் என சீண்டியது இவர்கள்தான் வேறுயாருமல்ல‌ நாட்டுக்காக உயிரை நீத்த அந்த தியாகிகளுக்கு அஞ்சலி […]

போர்கப்பல் எம்டன்

அது ஐரோப்பாவில் நாங்களும் குறிப்பிடதக்க நாடு என ஜெர்மன் களமிறங்கிய காலம், அன்றைய அண்ணாச்சி பிரிட்டனின் பெரும் கை அவர்களது கடல்படை. யுத்தத்தில் பிரிட்டனை வெல்லவேண்டுமனால் பெரும் வலிமையான கடல்படை இல்லாமல் அது சாத்தியமில்லை என்பது ஜெர்மனுக்கு புரிந்தது. முதல்கட்டமாக கட்டபட்டதுதான் அந்த பிரமாண்ட கப்பல், அதனை உருவாக்கும் பொழுதே மகா தந்திரமாக உருவாக்கினார்கள். அதாவது ஒரு சாதாரண கப்பலாக வெளியே தெரியும், ஆனால் நொடிக்குள் ஒரு போர்கப்பலாக தன்னை மாற்றி கடும் ஆட்டம் ஆடும். சகலமும் […]

சிதறல்கள்

மணிரத்தினத்தின் “செக்க சிவந்த வானம்” எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது மணி நிச்சயம் அர்ஜூனன் சந்தேகமில்லை, ஆனால் அவரின் தேரோட்டிகள் வசனகர்த்தாக்களும் கதை விவாதக்காரர்களும் என்பதுதான் விஷயம் அப்படி பாலகுமாரன், சுஜாதா என இருந்தவரை மணியால் நினைத்த குறியினை அடிக்க முடிந்தது, காரணம் தேரோட்டிகள் அப்படி மிக நுணுக்கமான ரசனையாளர்களாக அவருககு உதவினர் ஆனால் அவர்கள் இல்லா மணி தடுமாற ஆரம்பித்தார், அது ராவணா, கடல், ஒகே கண்மணி இந்த படுமொக்கையான காற்றுவெளியிடை வரை தெரிந்தது நல்ல தேரோட்டி கிடைக்காவிட்டால் […]

அயன் லேடி

சினிமா ஒன்றே மூலதனமான கட்சி அதிமுக, ஜெயா இல்லா நிலையில் இனி பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அவர்களுக்கு சினிமா அடையாளம் தேவை அதற்காக பழனிச்சாமியோ, பன்னீரோ மேக் அப் போட்டு ராமசந்திரன் போல ஆடினால் நன்றாயிராது, ஜெயக்குமாருக்கும் ரஜினி படத்தின் வில்லன் கேரக்டர் கிடைக்கவில்லை இதனால் என்ன செய்யலாம் என பரிதவித்தவர்களுக்கு ஜெயாவின் கதையினை சினிமாக எடுத்து பாராளு மன்ற தேர்தலையொட்டி ஓடவிட்டால் என்ன? என்ற எண்ணம் வந்தாயிற்று இதனால் ஜெயா வாழ்க்கை அயன் லேடி என […]