பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாறாக ரவுடிகள் என்றால் அடித்துதான் விரட்ட வேண்டும்

ஒரு கல்வி கூடம் எந்த சட்டத்துக்கும் கட்டுபட மாட்டோம், வகுப்பு நடத்த விடமாட்டோம், வீண் அட்டகாசம் செய்வோம் அரசியல் செய்வோம் என அரசின் வரிபணத்தில் இல்லா அட்டகாசம் செய்தால் நல்ல குடிமகனுக்கு கோபம் வரத்தான் செய்யும் வாய்ப்பின்றி வழியின்றி பலலட்சம் மாணவர் இத்தேசத்தில் இருக்க வெட்டி அரசியல் செய்யும் அந்த கல்லூரி வம்பர்களை போட்டு சாத்தாமல் கொஞ்சவா செய்வார்கள் ஒருவகையில் பார்த்தால் நடந்திருப்பது நல்ல விஷயமே, சில விஷயங்களுக்கு மென்மையான அணுகுமுறை தீர்வாகா முள்ளை முள்ளால் எடுக்க […]

Pa Raghavan அவர்கள் இறவான் என்றொரு புத்தகம் எழுதியிருக்கின்றார்

இசை என்பது ஆண்டவனின் வடிவம், இசையால் வசமாக இதயமெது என்பது சத்தியமான வார்த்தைகள் இசை ஆண்டவனையே உருகவைக்கும், இயற்கையே நல்ல இசைக்கு கட்டுபடும். தான்சேன், குன்னகுடி வைத்தியநாதன் இன்னும் பல இசைமேதைகளின் வாழ்வில் ஆச்சரிய சம்பவங்கள் உண்டு இசையில்லா மதம் என எதுவுமில்லை, ஆத்மா எங்கெல்லாம் வெளிபடவேண்டுமோ அங்கெல்லாம் இசையன்றி எதுவும் சாத்தியமில்லை என்பதால் இசை எல்லா மதங்களிலும் உண்டு பைபிளில் தாவீது அரசனின் பாடலும் சங்கீதமும் மகா பிரசித்தியானவை இயற்கையோடு ஒன்றிய பண்டை மதமான இந்துமதம் […]

வீழ்ந்துவிட்டார் என்பது சரியல்ல‌

ரகுமானின் இசை 1990கள் போல் இல்லை அவர் வீழ்ந்துவிட்டார் என்பது சரியல்ல‌ ஒவ்வொரு கலைஞனின் படைப்பும் மனமும் சிந்தனையும் காலம் மாற மாற மேம்படும், அப்படி நடந்தால் மட்டுமே அவன் கலைஞன், இல்லையென்றால் கட்டிய கட்டமே கட்டும் கொத்தனார் ஆகிவிடுவான் கலைஞனுக்கு வளர்ச்சி என்பது அவன் கலையில் ஏற்படும் சிந்தனை மாற்றமே ரகுமான் கச்சேரியில் வாசிக்கும் சிறுவனாக வாழ்வினை தொடங்கினார், மேற்கத்திய இசையுடன் இங்கு அறிமுகமாகி அனைவரையும் ஆட்டி வைத்தார் அந்த மும்பை திரையுலகம் அவரை அழைத்தபொழுது […]

பிராமணர் இங்கு ஆண்டான் , ஆட்சி செய்தான், சூத்திரனை அடக்கி வைத்தான் என்பதெல்லாம் அபத்தம்

பிராமணர் இங்கு ஆண்டான் , ஆட்சி செய்தான், சூத்திரனை அடக்கி வைத்தான் என்பதெல்லாம் அபத்தம்மாறாக அன்று வாழ்வாங்கு வாழ்ந்த இனங்களில் செட்டி இனம் இருந்தது, அன்றே உலகளாவிய வியாபாரமும் இன்னும் பல விஷயங்களும் அவர்களுக்கு சாதகமாயின‌கிழக்காசியா முழுக்க அவர்கள் கப்பல்கள் ஓடின, அவர்களும் ஓடினார்கள் செல்வமாய் குவித்தார்கள், வெள்ளையன் ஆட்சியிலும் அவர்கள் செல்வம் குவிந்ததுஏகபட்ட்ட செட்டிகளை காட்டமுடியும் என்றாலும் நம்பெருமாள் செட்டியும் ஒருவர்ஆம் அவர் அன்று சொந்தமாக ரயிலே வைத்திருந்தார்அவர் அன்றே பெரும் புள்ளி, கட்டட தொழில் […]

இதெல்லாம் பிராமண சூழ்ச்சி என ஒரே சத்தம்

ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது, குடியுரிமை சட்டம் பிராமணரால் கொண்டுவரபட்டது இதெல்லாம் பிராமண சூழ்ச்சி என ஒரே சத்தம் அவர்கள் அறிவு ஆழ்கடலில் புதைக்கபட்டாயிற்று, அதற்கு கைதட்டுபவர் மூளை சந்திராயன் மூலம் நிலவில் சிதறிகிடக்கின்றது பிராமணன் இந்தியாவில் 6% மட்டுமே, அவன் எப்படி 94% மக்களை மீறி ஆட்சி அமைக்க முடியும்? இந்த 534 எம்பிக்களில் எத்தனை பிராமணன் உண்டு? ராஜ்யசபாவில் எத்தனை பிராமணன்? மோடி பிராமணர் அல்ல, அமித்ஷா பிராமணர் அல்ல ஒப்புதல் வழங்கிய குடியரசு தலைவரும் […]

பிறந்தநாள் வாழ்த்துகள் “Mozart of Madras”, “Tansen of Tamilnadu”

ஒரு மனிதனுக்கு கலை திறமை வருவது அபூர்வம், அதிலும் தன் கலையில் மகா உச்சம் தொடும் மனிதர்களும் அபூர்வம் அந்த அபூர்வ மனிதர்களில் தலைகனமோ, ஆர்ப்பாட்டமோ இன்றி மிக எளிமையான மனிதர்கள் மகா மகா அபூர்வம் கலையினை ஒரு தவமாக செய்தாலன்றி அந்த யோக நிலை கிட்டாது அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட கலைஞன் ஏ.ஆர் ரகுமான். 28 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கி பின் உலகெல்லாம் வீசிகொண்டிருக்கும் சென்னை இசை அவர். இனி அவர் […]

டெல்லி எரிவது ஒன்றும் புதிதல்ல‌

டெல்லி எரிவது ஒன்றும் புதிதல்ல‌ சுதந்திர இந்தியாவில் அங்கு எல்லாமும் எக்காலமும் நடந்தது சஞ்சய் காந்தி ஆடிய வெறியாட்டமும், இந்திரா படுகொலையினை தொடர்ந்து எழுந்த கலவரமும் அழியா சுவடுகள் அந்த காங்கிரஸ் இன்று ஏதோ உத்தம புத்திரர் போல சீறுவது காலத்தின் கோலம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் கருணாநிதி காலத்தில் காவல்துறை புகுந்து வெறியாட்டம் ஆடியதை மறந்துவிட்டு அய்யய்யோ டெல்லி பல்கலையில் காவல்துறை புகுந்ததா என கண்ணீர்விடும் உபிக்களுக்கு ஒரு காலமும் பாவமன்னிப்பே கிடையாது

டிரம்ப் அமெரிக்கர்களின் ஹீரோ ஆகிவிட்டார்

டிரம்ப் அமெரிக்கர்களின் ஹீரோ ஆகிவிட்டார், சந்தேகமில்லை அமெரிக்கா அவரை கென்னடிக்கு பின் ஆகசிறந்த துணிச்சலான தலைவராக வாய்பிளந்து பார்த்து கொண்டிருக்கின்றது ஆம் 1980ல் ஈரானின் அமெரிக்க தூதரகம் தாக்கபட்டு 52 பேர் இரு வருடம் சிறைபிடிக்கபட்டு அமெரிக்காவுக்கு முகத்தில் கரி பூசபட்டது, லெபனானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது இன்னும் என்னவெல்லாமோ நடந்தது அன்று ஈரானிடம் ஜிம்மி கார்ட்டரின் அமெரிக்கா தோற்றது, அது வரலாறு இன்று பாக்தாத் அமெரிக்க தூதரகத்தில் அதே காட்சியினை ஈரான் நடத்தமுயன்றபொழுது சுலைமானியினை போட்டு […]

ஏகாதசி

அந்த விஷ்ணுபெருமானுக்கு வேலையே அட்டகாசம் செய்யும் அசுரர்களை அழிப்பது. அப்படி முரண் என்றொரு அசுரன் அட்டகாசம் செய்துகொண்டிருந்தான், அவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஈரான் ஈராக் போல நீண்ட யுத்தம் நடந்தது அந்த யுத்ததில் ஓய்வெடுத்த பகவானை நள்ளிரவில் கொல்ல வந்த அசுரனை பகவானின் உடலில் இருந்து வந்த தேவதை அந்த அசுரனை ஒழித்துகட்டினாள். அந்த சக்திக்கு ஏகாதசி என பெயர் கொடுத்து சில வரங்களும் கொடுத்தார் அதாவது அந்நாளில் விரதம் இருந்து வணங்குபவர்கள் சொர்க்கம் அடைவார்கள் என்பதாகும், ஏகாதசி […]

தனியார் கிறிஸ்தவ ஆங்கில பள்ளியில்தான் படிக்க வைத்தார் என பகிரங்கமாக சொல்கின்றார் ஸ்டாலின்

ஜோசப் பனிமய பங்குராஜ் என்றொரு கல்விதந்தை இருந்தார், அப்படி சொன்னால் புரியாது ஜேபிஆர் என்றால் புரியும் சத்யபாமா பல்கலைகழக நிறுவணர் அவர்தான். அதிதீவிர எம்ஜி.ராம்சந்தர் விசுவாசி, ஏதோ ஒரு இடத்தில் ஆதிசங்கரர் பாட தங்க மழை பொழிந்ததாம் அப்படி ராம்சந்தர் புண்ணியத்தில் பெரும் ஆளாக உருவானவர் அந்த ஜே.பி.ஆர் அந்த ஜேபிஆர் ஒரு இடத்தில் இப்படி பேசினார் “எனக்கு தமிழ்பற்று கிடையாதுப்பா, ஏன்னா எனக்க்கு தமிழ் இலக்கியம் தெரியாது. ஏதோ பேச தெரியும் அவ்வளவுதான். எனக்கு கொள்கை […]