பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அன்னார் சொல்லவருவது என்ன?

போராட்டம் முடிவுக்கு வந்ததால் இன்று மெர்குரி படம் திரைக்கு வருகின்றது தாத்தா பாரதிராஜாவே, யழவு வீட்டில் எதற்கு திரைப்படம் என இப்பொழுது கேளும் முன்பு யழவு வீட்டில் எதற்கு ஐபிஎல் என கேட்க தெரிந்ததல்லவா? அப்படியே இப்பொழுதும் கேட்டுவிடும், இல்லாவிட்டால் நன்றாய் இருக்காது ஆமாம் பலாத்கார விஷயங்களை அரசியலாக்காதீர் : மோடி அதானே, எங்காவது பழைய‌ மசூதி இருந்தால் அதை அரசியல் ஆக்கலாம். பசுமாடு கிடைத்தால் அதை அரசியல் ஆக்கலாம். இது போக இன்னும் அரசியல் செய்ய […]

மோடிக்கு லண்டனில் இந்தியர் சிலர் எதிர்ப்பு

மோடிக்கு லண்டனில் இந்தியர் சிலர் எதிர்ப்பு , ஆசிபா விவகாரம் உட்பட பல விஷயங்களுக்காக ஆர்ப்பாட்டம். ஒஹோ, இதனை எல்லாம் பிரிட்டன் அரசு அனுமதிக்கின்றதா சரி. அந்த தெரசா மே இங்கு வரட்டும், சிரியர்களை கொல்லாதே என நாமும் கொடிபிடித்து விடலாம் அமெரிகாவோடு சேர்ந்து ஆபக்ன, ஈராக், சிரியா என பிரிட்டன் செய்யாத அட்டகாசமில்லை சிரியாவில் கொல்லபட்ட குழந்தைகளில் ரத்தத்தில் பிரிட்டனுக்கும் பங்கு உண்டு அதை எல்லாம் சொல்லாதவர்கள்தான், பிரிட்டனில் இருந்துகொண்டு மோடியினை எதிர்க்கின்றார்களாம் நல்லவர்கள் பிரிட்டனால் […]

“நாடக போராளிகளை” தமிழகம் சும்மா விடுவதாக இல்லை

அடேய் பாரதிராஜா சீமாண்டியார் கோஷ்டிகளா, ஒழுங்கு மரியாதையாக காவேரியில் நீர் வரும்வரை புது சினிமா வரகூடாது என தியேட்டர் வாசலில் கதற வேண்டும் புரிகின்றதா? அமீர், மன்சூர் அலிகான், கவுதமன் என ஒரு பயலும் தவறாமல் ஆஜராகி போராட வேண்டும் தமிழனுக்கு சோறு முக்கியமா? திரைப்படம் முக்கியமா என நீங்கள் கேட்டு குட்டிகரணம் அடிக்க வேண்டும் தமிழன் என்றால் ஒழுங்கு மரியாதையாக செய்யுங்கள் தமிழனுக்கு பொறந்தவன் படம் பார்க்க வரகூடாது என இப்பொழுது சொல்லுங்கள் . அப்படி […]

நடராஜன் அதிகார பொறுப்பில் இருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்கும் : வைகோ

நடராஜன் அதிகார பொறுப்பில் இருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்கும் : வைகோ 1989ல் கலைஞர் புலிகளுக்கு உதவுகின்றார் என மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியவரில் நடராஜன் பெயரும் உண்டு, அமைதிபடை காலத்தில் ஜெயாவுடன் ராஜிவ் கூட்டணி வைத்தபொழுது நடராஜனே சூத்திரதாரி காங்கிரஸ் கூட்டணிக்காக ராஜிவின் நட்புக்காக அமைதிபடை மோதலை கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நடராசன் ஜெயா ஆட்சியில் இருந்தபொழுதெல்லாம் நடராஜன் சொத்துகுவிப்பிலும் அதிகாரத்திலும் கவனம் செலுத்தினாரே அன்றி ஈழத்தில் அல்ல‌ இங்கு சசிகலா குவித்த கோடி பணங்களை எண்ணிகொண்டிருந்த நடராஜன் […]

நிம்மி லீக்ஸ்…

பேராசிரியை விவகாரம்: துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை “அண்ணே, அந்த ஊமைச்சி வீடு எங்கண்ணே இருக்கு? விலாசம் இருக்காண்ணே விலாசம்..”   ஆடியோ வெளிவந்தது, அதில் “நான் கவர்னர் மீட்டிங்கில் இருந்தேன். அந்த ஹையர் அத்தாரிட்டி கவர்னர் அல்ல” என்றுதான் கணக்கு பண்ணும் பேராசிரியை நிம்மி சொல்லியியிருந்தார் அதற்குள் ஓடோடிவந்து நிம்மி முகத்தை கூட நபார்த்ததில்லை என கவர்னர் சொல்கின்றார் என்றால் எவ்வளவு பதற்றம்? நல்ல வேளையாக பதற்றத்தில் “நான்  நிம்மி முகத்தை மட்டும் பார்க்கவில்லை” என சொல்லி […]

ஆனாலும் எச்.ராசா அலம்பல் அதிகம்

மதுரை முத்து, வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் இன்னும் ஏராளமானோரை வளர்த்து விட்டுவிட்டு இப்பொழுது எச்.ராசாவினை கண்டிக்க கிளம்ப என்ன இருக்கின்றது? அவர்கள் பேச்சாத பேச்சுக்களா? ஆபாசங்களா? நிறைய உரக்க முழங்கி பேசும்பொழுது சில எதிரொலிகள் கேட்காமல் போகாது, இப்பொழுது கேட்கின்றது. காலசக்கரம் சுழல்கின்றது. அதுவரை நாகரீகமான தமிழகத்தில் “ராஜாஜி காந்தி மகனை மகளைகாட்டி மயக்கினார் “என்றும், “நேருவும் பண்டாராநாயகவும் தனிமையில் என்ன பேசினார்கள்?” என்ற தரங்கெட்ட வார்த்தைகள் எல்லாம் அங்கிருந்தே வந்தன‌ நாகரீகமான தமிழ் சமூகத்து வீழ்ச்சி […]

எவ்வளவு அட்டகாச அரசியல் செய்யலாம்?

“தெலுங்கு செட்டியார் கல்லூரி வசமாக சிக்கி இருக்கின்றது, அந்த நிர்மலாவும் தெலுங்கச்சி என்கின்றார்கள் எவ்வளவு அட்டகாச அரசியல் செய்யலாம்? இப்பொழுது பார்த்து ஐபில் போராட்டத்தில் போலிசை அடித்தான் என நம்மை முடக்கிவிட்டார்களே, எல்லாம் இந்த தும்பிகளால் வந்த சிக்கல் …..த்தா எவனாவது அண்ணன் கிண்ணென்னு சொல்லிட்டு வந்தீங்க அவ்வளவுதான், நல்ல வாய்ப்பு போச்சேடா”  

மனுஷன் தமிழ்நாட்டுல கவர்னரா இருப்பானா…ஓடியே போயிரணும் சாமி…

“அப்பவே சொல்லித்தான் அனுப்புனானுக, இந்த தமிழ்நாடு ஒரு மாதிரின்னு, அது இப்போதான் புரியுது என்னா அடி.. எப்படி எல்லாம் தினுசு தினுசா அடிக்கிறானுக‌ யாரையும் நம்ப முடியல்ல, எவன் எப்போ எவனோட சேருவான்னே தெரியல்ல, பார்க்க அப்பாவியா இருந்தாலும் பூரா பயலும் பெரிய வில்லனுக. டார்க் ரூம் டார்ச்சர் மாதிரியே இருக்கு டெல்லிக்கு கூப்பிட்டிருக்காங்க, அவங்க கால் கைல விழுந்தாவது கோவா மாதிரி இடத்துக்கு போயிரணும் மனுஷன் தமிழ்நாட்டுல கவர்னரா இருப்பானா…ஓடியே போயிரணும் சாமி… முன்னாள் ராணுவ […]

நிர்மலா தேவி விவகாரத்தில் சர்ச்சைகுள்ளாயிருப்பது யார்? சாட்சாத் ஆளுநர்

நிர்மலா தேவி விவகாரத்தில் சர்ச்சைகுள்ளாயிருப்பது யார்? சாட்சாத் ஆளுநர் விசாரணை குழுவினை அமைத்திருப்பது யார்? அதே ஆளுநர் அவரை நோக்கி வரும் குற்றசாட்டுக்கு அவரே கமிஷன் அமைத்தால் தீர்ப்பு எப்படி வரும்? ராஜபக்சேவிடம் முள்ளிவாய்க்காலை விசாரிக்க கொடுத்தது போலவும், பாலஸ்தீனியர் சிக்கலை இஸ்ரேலை விசாரிக்க சொன்னது போலவும் , சசிகலா தீர்ப்பை குமாரசாமி மறுபரீசிலனை செய்வது போலவும் இருக்கின்ற விஷயம் இது ஆளுநர் அமைத்த கமிஷனில் எப்படி அவரை நோக்கிவரும் குற்றசாட்டுக்கு நியாயம் கிடைக்கும்? இதில் சிபிஐ […]