பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுக எப்படிபட்ட அயோக்கிய கட்சி என்பது அப்பொழுது விளங்கும்

ஆம் அதை சொல்லத்தான் வேண்டும், திமுக எப்படிபட்ட அயோக்கிய கட்சி என்பது அப்பொழுது விளங்கும் 1957 , 58ல் திமுக நாம் தமிழர் போல ஒப்புக்கு இருந்து வம்பு பேசிகொண்டிருந்தது, உருப்படியாக என்றுமே எதையுமே செய்யாதது போல அன்றும் ஒன்றும் சிந்திக்காமல் ஏதோ சொல்லிகொண்டிருந்தார்கள் அப்பொழுதுதான் 5 லட்சம் தமிழக மக்களை திருப்பி அனுப்ப சிறிமாவோ பண்டாரநாயக்கா இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய டெல்லி வந்தார் மிகபெரும் சதியோடு வந்து ஈழதமிழரும் சிங்களரும் இணைந்தே அவர்களை வெளியேற்றுகின்றோம், 5 […]

பழைய கண்ணீர் கொடும் வரலாற்றை மறைக்கின்றது

இன்று ஈழதமிழருக்கு இந்திய குடியுரிமை கொடுக்கவேண்டும் என கொக்கரிக்கும் கூட்டம் , பழைய கண்ணீர் கொடும் வரலாற்றை மறைக்கின்றதுஅதாவது 17ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து தமிழர்களை இலங்கை தோட்ட தொழிலுக்கு கொண்டுசென்று மலையகத்தில் குடியேற்றினான் வெள்ளையன், அவர்களாலே அங்கு தேயிலை செழித்து இலங்கை மகா உச்சத்தில் இருந்ததுஅவர்கள் இங்கிருந்து சென்ற தாழ்த்தபட்ட சாதி மக்கள் என்பதால் ஈழமக்கள் அவர்களை அருகில் சேர்க்கவில்லை, அன்றெல்லாம் தமிழக தமிழனை அவர்களுக்கு பிடிக்காது, இன்றும் பிடிக்காதுஅவர்கள் அறிவார்ந்த தமிழராம், நாமெல்லாம் நாய்தமிழர், […]

அந்த இணைப்பு மட்டும் நடந்திருந்தால் இவ்வளவு அழிவு ஈழத்தில் நடந்திருக்காது

இந்தியாவினை பிடித்த வெள்ளையருக்கு கல்கத்தாவே தலைநகரமாக இருந்தது, முதல் கோட்டையினை அங்குதான் கட்டினர் முதல் வெற்றியினை கிளைவ் அங்குதான் பெற்று ஆட்சியில் அமர்ந்தான், கிழக்கு பகுதி வாணிக மையம் உட்பட பல அனுகூலங்கள் இருந்ததால் கல்கத்தாவினை தலைநகரமானது 1911 வரை அது அப்படித்தான் நீடித்தது, பின் பரந்த இந்தியா ஆப்கனை கைபற்றும் முயற்சி என பல காரணங்களுக்காக அது டெல்லிக்கு மாற்றபட்டது அது இந்நாள்தான், இந்த டிசம்பர் 12ல்தான் டெல்லி இந்தியாவின் தலைநகர் ஆனது இன்றோடு 107 […]

வங்க வெற்றி இங்கு மறைக்கபட்டது

வங்கப்போரின் வெற்றி தேசத்தின் பெருமையினை உலகுக்கு சொன்னது, தேசம் முழுக்க பெரும் எழுச்சியும் இந்திய உணர்வும் பொங்கிற்று 1947ல் இருந்த அந்த எழுச்சி தமிழகத்திலும் வந்தது, இது திராவிட இயக்கங்களுக்கு பெரும் கவலையினை கொடுத்தது, தமிழர் தங்களை இந்தியராக கருதிவிடுவரோ என்ற பேரச்சம் ஏற்பட்டது அவர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் இருந்தது, அண்ணாவுக்கு பின்னரான அந்த சட்டமன்ற தேர்தல் 1971 மார்ச்சுக்கு பதிலாக 1972ல் நடந்திருக்குமானால் வங்க வெற்றியில் இங்கு காங்கிரஸே ஆட்சிக்கு வந்திருக்கும் ஈட்டிக்கு தப்பியவனாக சுதாரித்து […]

பள்ளிகட்டு சபரிமலைக்கு பெரியார் கொள்கை காலுக்கு மெத்தை..

பள்ளிகட்டு சபரிமலைக்கு பெரியார் கொள்கை காலுக்கு மெத்தை.. பெரியார் குத்து தப்பய்யா பெரியார் கோஷ்டி வேண்டாம்யா திராவிட கோஷ்டி அய்யய்யோ திராவிடம் என்பது பொய்யய்யோ… சாமியே மன்னிப்பாய்.. மன்னிப்பாய் சாமியே. (இவர் சபரிமலைக்கு செல்லும் நேரம் அந்த அம்மணி காதலுடன் திருச்செந்தூர் கன்னியாகுமரி ஆலயம் செல்வது இவரை வெறுப்பேற்றவா என கேட்டால் நம்மிடம் பதில் இல்லை..).

வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் வெடித்திருக்கின்றது

வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் வெடித்திருக்கின்றது, ராணுவம் அங்கு விரைந்து சென்றிருக்கின்றது ஆக அந்நியநாட்டுக்காரன் அங்கு எவ்வளவுபேர் இருக்கின்றான் என்பதை நாமெல்லாம் கண் கூடாக பார்க்கும் நேரமிது எப்பாடுபட்டேனும் என்ன விலை கொடுத்தேனும் அப்பகுதியினை மீட்டே ஆகவேண்டும், அந்நியர் பிடியில் நம் பகுதி சிக்கி இருக்கின்றது என்பதே உண்மை கார்கில் போல இங்கு ஒரு யுத்தம் நடத்தவேண்டிய அவசியம் வந்திருக்கின்றது, யுத்தத்தை ஆதரித்து நம் பகுதியினை மீட்க வேண்டியது இந்தியரான நம் கடமை வந்தே மாதரம்.. ஜெய் ஹிந்த்

குடியுரிமை சட்டத்தை திருத்திவிட்டார்களாம்

“குடியுரிமை சட்டத்தை திருத்திவிட்டார்களாம், இனி பல்லாயிரம் பேர் நாட்டை விட்டு கிளம்புவார்கள். சந்தடி சாக்கில் நாமும் நம் சீட கோடிகளும் அவர்களோடு நைசாக நாட்டை விட்டே ஓடிவிடலாம் பரமசிவனே.. உன் கருணையே கருணை.. மொத்த கூட்டத்தையும் நாட்டை விட்டு கொண்டு செல்வது எப்படி என சிந்தித்திருந்தேன், நீயே வழிகாட்டிவிட்டாய், ஆதார் அட்டையினை கிழித்துபோட்டால் நாங்களும் நாடற்றவர்களே..”

இளமை திரும்புதே..புரியாத புதிராச்சே…

அடுத்தால ரஜினி ஜோடி நாங்கதான் எப்படியும் இன்னும் 30 படம் ரஜினி நடிப்பார், எங்களுக்கும் வாய்ப்பு நிச்சயம் வரும். அந்த ஸ்ரீவித்யா, சுஜாதா எல்லாம் இப்போழுது இல்லை, அதனால் அடுத்த சீனியாரிட்டி வாய்ப்பு எங்களுக்குத்தான்.. “இளமை திரும்புதே..புரியாத புதிராச்சே…”

அந்நிய நாட்டவருக்கான தீர்வு என்ன என யாராவது பேசுவார்களா?

இவ்வளவு பேசுகின்றார்கள், சரி மத்திய அரசு இந்துவெறி ஆட்சியாகவே இருந்து தொலையட்டும், இங்கிருந்து வெளியேற்றபட போகும் அந்நிய நாட்டவருக்கான தீர்வு என்ன என யாராவது பேசுவார்களா? இது பூரண இஸ்லாமிய குடியரசு என சொல்லும் இஸ்லாமிய நாடுகள் அவர்களை ஏற்க தயாரா? இம்ரான்கான் ஏற்க தயாரா? செல்வத்தில் கொழிக்கும் அரபு நாடுகள் அவர்களை ஏன் ஏற்க கூடாது? துருக்கி , எகிப்து முதலான பலம் வாய்ந்த இஸ்லாமிய நாடுகள் ஏன் ஏற்க கூடாது? உஸ்பெக் முதல் நைஜீரியா […]

கார்த்திகை தீபம் ஏற்றிவிட்டனர் கிறிஸ்தவர்கள்

பைபிளில் சொன்னபடி கார்த்திகை தீபம் ஏற்றிவிட்டனர் கிறிஸ்தவர்கள். சில பாரம்பரியங்கள் அப்படித்தான், மாற்றமுடியாதவை. இவர்களை கிறிஸ்தவம் மாற்ற வந்தால் அவர்கள் கிறிஸ்துவத்தையே இந்துதுத்வமாக மாற்றிகொண்டிருக்கின்றார்கள் விரைவில் சமஸ்கிருத மந்திரத்துடன் சாம்பிராணி சூடத்துடன் பூசை நடக்கும் நாள் தொலைவில் இல்லை, பின்னாளில் தெய்வங்களும் மாற்றபடலாம் எதிலிருந்து வந்ததோ அதற்கே திரும்புகின்றது விஷயம்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications