பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சப்தஸ்தான ஆலயங்கள்

சப்தஸ்தான ஆலயங்கள் 01 : திருவையாறு ஐயாறப்பன் ஆலயம் “மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி, போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன், யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது, காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன். கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்” என அப்பர் பாடிய தலம் இது. தமிழகச் சிவாலயங்களில் முக்கியமானதும் மிக மிக சூட்சுமமானதுமானது திருவையாறு ஆலயம். மகா தொன்மையானதுமான ஆலயம் தஞ்சை […]

அட்ட வீரட்டான தலங்கள்

அட்ட வீரட்டான தலங்கள் : 01 திருக்கண்டியூர். பொதுவாக கார்த்திகை மாதம் என்பது அதர்மத்தை அழிக்க வந்த, மாயைகளை அழிக்க வந்த அவதாரங்களுக்கான மாதம். இதனாலே கார்த்திகை மாதம் முருகப்பெருமான் வழிபாடுகள் அதிகம் உண்டு, சுவாமி ஐயப்பன் சாஸ்தாவின் வழிபாடும் அதிகம் உண்டு. பிரம்மா, விஷ்ணு இருவரின் அகங்காரத்தை திருவண்ணாமலையில் சிவபெருமான் அழித்தார் என்பதால் கார்த்திகை தீப கொண்டாட்டமும் உண்டு. அப்படியான கார்த்திகை மாதம் முழுக்க அதர்மக்காரர்கள், அதர்மம் பெருக மூல காரணமான மாய மயக்கங்கள், அகங்காரங்கள் […]

முருகப்பெருமான் ஆலயங்கள்

முருகப்பெருமான் ஆலயங்கள். கந்தன்குடி. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளத்தில் இருந்து திருநள்ளாறு செல்லும் சாலையில் அமைந்துள்ளது அந்த கந்தன்குடி ஆலயம். முருகப்பெருமான் குடிகொண்டுள்ள ஆலயங்களில் இந்த கந்தன்குடி ஆலயமும் மகா முக்கியமானது. இந்த ஆலயம் அமைந்த வரலாறு சுவாரஸ்யமானது. அது இரு வரலாறுகளுடன் தொடர்புடையது. முதலில் அந்த அம்பரன், அம்பன் எனும் அசுரர்கள் கதையினை கொண்ட வரலாறு உண்டு. துர்வாச முனிவர் அவசரமான காரியம் ஒன்றிற்காக சென்றபோது அசுர பெண் ஒருத்தி அவர்மூலம் குழந்தை ஒன்றை […]

இந்து மரபு போதிக்கும் நெறிமுறை( Do’s & Dont’s)

எலுமிச்சை பழத்தை வெட்டி அதில் விளக்கிடுவது சரியா ? கோவில்களில் எலுமிச்சை பழத்தை வெட்டி அதில் விளக்கிடுவது சரியா என்றால் நிச்சயம் அதை தவிர்க்க வேண்டும், இந்து மரபு போதிக்கும் நெறிமுறை அப்படியானது இந்து புராணங்கள் எலுமிச்சை கனியினை சாகம்பரி தேவியே உருவாக்கினாள் என்கின்றது, சாகம்பரி என்பதற்கு கனிகள் மற்றும் காய்கறிகளால் காப்பவள் என பொருள் அதாவது நிசும்பன் எனும் அசுரன் பெரும் வரம் வாங்கி அடாதன அத்தனையும் செய்து பஞ்சத்தையும் வருவித்து மக்களுக்கு ஏதும் உண்ண […]

புண்ணியநாள் வழிபாடுகள்

மாசி மகம் அக்காலத்திலே உன்னதமாய் இருந்தது, தங்களின் மாபெரும் தவவலிமையால் விண்ணக இயக்கத்தின் பிரபஞ்ச ரகசியங்களை அறிந்த ஞானியர் அதனை வகை வகையாக சொல்லி வைத்து, ஒவ்வொரு கோளின் இயக்கமும் இந்த பூமியில் எப்படி எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் கண்ணுக்கு தெரியாத வானலோக கதர்வீச்சும் சக்தியும் மானிட மனதை குணத்தை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதையும் உணர்ந்தனர் அப்படியே அவர்கள் அதனில் இருந்து தப்பவும் இன்னும் உன்னதமான பலன்களை அடையவும் பல போதனைகளையும் ஏற்பாடுகளையும் செய்தனர் அமாவாசை […]

வழிபாடுகள்

காரடையான்சாவித்திரிஅக்கால‌ பாரததித்தில் அசுபதி என்றொரு மன்னன் இருந்தான், அவனுக்கு வாரிசு என ஒரு மகள் இருந்தாள், அழகிலும் அறிவிலும் சிறந்தவளான அவளுக்கு புனிதமான பெயரான சாவித்திரி எனும் பெயர் சூட்டினான், ஆம் சரஸ்வதியின் இன்னொரு பெயர் சாவித்திரி, எது உன்னதமும் உயர்ந்ததும் ஆசீர்வாதமுமானதோ அதற்கு சூட்டும் பெயர் சாவித்திரிஅந்த சாவித்திரிக்கு திருமண வயதும் வந்தது, அக்கால இந்து சம்பிரதாயம் பெண்கள் தன் கணவனை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் அளித்தது, தன் பாதுகாவலர் ஆலோசகரான பெரியவரகள் சூழ தானே […]

வரிகளை விளக்க முடியுமா?

அய்யா இந்த கந்த சஷ்டி கவசத்தின் வரிகளை பற்றி பலவாறு சொல்லுகின்றார்கள் இந்த வரிகளை விளக்க முடியுமா? இந்த வரிகளை சொன்னால் 36 முறை வருமா? ஏன் இதையெல்லாம் சொல்லவேண்டும் இதன் பொருளை விளக்க முடியுமா என சிலர் கேட்பதால் சொல்கின்றோம் நாம் சொல்வது சில சித்தர்கள் சொன்ன மொழியின் குறிப்புகளில் இருந்தும் சைவ ஆகம விதிகளில் இருந்தும் சொல்கின்றோமே அன்றி எம் கருத்து அல்ல‌ மகா புனிதமானதும் சூட்சும பொருள் கொண்டதுமான இந்த சஷ்டி கவச […]

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம் 01 : (மதுரையம்பதி ஆவணி மூல திருவிழா.01)கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம். சிவபெருமானும் அன்னை தேவியும் ஆட்சிசெய்யும் அந்த மதுரையில் அன்று அவர்கள் பிரதிநிதியாக இராஜராஜ‌பாண்டியன் மகன் சுகுணபாண்டியன் ஆண்டுகொண்டிருந்தான். அக்கால கட்டம் மிக மிக தொன்மையானது, எல்லா உயிர்களும் தங்கள் இயல்பில் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்ட காலமிது. இந்த உலகில் மானுடர் மட்டும் காலத்துக்கு ஏற்ப மாறி நிலைத்துக்கொண்டிருப்பதில்லை, காலம் மாற மாற சிந்தனை பெற்று வளர்வதில்லை, இந்த மாற்றம் எல்லா உயிர்க்கும் […]

சப்த கன்னியர்

சப்த கன்னியர் 01 : பிராம்மி. இந்த பிரபஞசத்தை இயக்கும் மகா சக்திகளை ஏழுவிதமான சக்திகளாக பிரித்துச் சொன்ன இந்துமதம் அவர்களைச் சப்த கன்னியர், சப்த மாதர்கள் என்ற அடையாளமிட்டுச் சொன்னது. இந்தச் சக்திகள் இயக்கும் சக்திகள், இயங்கும் பலத்தையும் அருளையும் தரும் சக்திகள். அந்த சக்திகளின் பலத்தாலே இந்தப் பிரபஞ்சமும் அண்டமும் அண்டத்தின் வடிவமான மானிட பிண்டம் எனும் மானிட உடலும் இயங்குகின்றது. இந்தச் சக்திகளின் தோற்றம் பற்றி புராணத்தில் பல கருத்துக்கள் உண்டு. சிவன் […]

சிவராத்திரி

சிவராத்திரி என்பது ஒவ்வொரு இந்துவும் விழித்திருந்து சிவாலயங்களுக்கு சென்று சிவனை தரிசித்து அருள் பெற வேண்டிய இரவு, அன்று கண்டிப்பாக சிவாலயம் செல்ல வேண்டும், இந்துக்கள் இந்துக்களாக இருக்க இம்மாதிரி ஏற்பாடுகளை மிக கண்டிப்பாய் பின்பற்றுதல் அவசியம் அந்த இரவில் ஒரே ஒரு சிவாலயத்தினை மட்டும் தரிசிப்பததை விட பல சிவாலயங்களை, குறைந்தது நான்கு சாமத்துக்கு நான்கு சிவாலாங்களினை தரிசிப்பது மிக நல்லது போக்குவரத்து எளிதாகிவிட்ட காலங்களில் அருகிருக்கும் சிவாலயங்கள் பலவற்றை தரிசித்தல் எளிது சிவராத்திரி என்பதற்காக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications