பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சப்த கன்னியர் – 02

பிராம்மி – முதல் கன்னிதெய்வம் இந்த பிரபஞசத்தை இயக்கும் மகா சக்திகளை ஏழுவிதமாக சக்திகளாக பிரித்து சொன்ன இந்துமதம் அவர்களை சப்த கன்னியர், சப்த மாதர்கள் என்ற அடையாளமிட்டு சொன்னது இந்த சக்திகள் இயக்கும் சக்திகள், இயங்கும் பலத்தையும் அருளையும் தரும் சக்திகள். அந்த சக்திகளின் பலத்தாலே இந்த பிரபஞ்சமமும் அண்டமும் அண்டத்தின் வடிவமான மானிட பிண்டம் எனும் மானிட உடலும் இயங்குகின்றது இந்த சக்திகளின் தோற்றம் பற்றி புராணத்தில் பல கருத்துக்கள் உண்டு, சிவன் அந்தகார […]

சப்த கன்னியர் – 01 முன்னுரை

இந்து மரபில் நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆடி மாதம், புரட்டாசி, தை, பங்குனி என நான்கு மாதங்களில் அவை கொண்டாடப்படும். ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வராஹி நவராத்திரி, தமிழக அம்மன் கொடை விழாக்கள் இந்த சாயலே. புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி. வழமையாக கொண்டாடப்படும் நவராத்திரி இதுதான், துர்கா பூஜை சரஸ்வதி பூஜை என கொண்டாடுவது […]

சித்தூர் சாஸ்தா கோவிலும் பங்குனி உத்திரத் தேரும்

வரலாற்றில் பாண்டிய நாட்டின் தென் எல்லை அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தது. சேரநாடு என்பது மலையினைத் தாண்டி களக்காடு, திருநெல்வேலி என பல இடங்களுக்கு நீண்டிருந்தது. கூன்பாண்டியன் எனும் நின்றசீர் நெடுமாற நாயனார் நடத்திய போர் அதனை சொல்கின்றது. அப்பொழுது நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகள் குமரி மாவட்டம் போலே சேர நாட்டுடன் இருந்தன. பழஞ்சி என்றால் கோட்டை எனப் பொருள். பெரும் பழஞ்சி சிறு பழஞ்சி எனும் அக்கால கோட்டை இருந்த ஊர்கள் பெருமளஞ்சி சிறுமளஞ்சி […]

திருவாரூர் தேரோட்டம் – ஆரூரா தியாகேசா

உலகளவில் இன்றும் இந்து ஆலயங்களே மிகபெரிய பரப்பளவில் கட்டபட்டவையாக இருக்கின்றன, அவ்வகையில் கம்போடியாவின் அங்கோர்வாட் எனும் இந்து ஆலயத்துக்கு அடுத்து மிக பிரமாண்டமான ஆலயங்கள் தமிழகத்தில்தான் உண்டு தமிழகத்தில் இது தேரோட்ட காலம், அவ்வகையில் தமிழகத்தின் தனிபெரும் அடையாளம் திருவாரூர் தேர், சிவனின் அதிமுக்கிய தலங்களில் ஒன்றானதும் இன்றளவும் இந்திய ஆலயங்களில் பெரியதுமான திருவாரூர் கோவில் போலவே அதன் தேரும் தனி பிரசித்தியானது ஒருவகையில் அது உலக அதிசயமும் கூட‌ சைவத்தின் மிக பெரிய அடையாளமும் மகா […]

ஸ்ரீரங்கனும் ஜீயர்புரமும்…

தொன்மையான இந்துமத தெய்வங்களின் திருவிளையாடல் கொஞ்சமல்ல, பாரத கண்டம் முழுக்க அது இயல்பாய் இருந்தது, தங்களுக்கு பெரும் ஆலயம் கட்டி விடாமல் விழா எடுத்து பிராமாண்ட தேர்செய்து நாள் தோறும் சீர் செய்து படையல் செய்து கொண்டாடும் பக்தர்கள் மேல் அந்த தெய்வங்களுக்கு எப்போதுமே வாஞ்சை இருந்தது அதனை காட்ட அடிக்கடி அவை திருவிளையாடலை நடத்துவதுண்டு, ஆனால் அந்த திருவிளையாடலை யார் உன்னதமான பக்தர்களோ, யார் எதுவுமற்ற நிலையிலும் யார் தான் ஒன்றுமே செய்யாத நிலையிலும், யார் […]

ஸ்ரீரங்கத்து திருவரங்கன் உலாவும், மதுரையின் மதுரா விஜயமும்…

திருச்சி திருவரங்கத்தில் பங்குனித் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்பொழுது மிக உற்சாகமாகவும் பாதுகாப்பாகவும் நடக்கும் அவ்விழாவின் பின்னால் மிகப் பெரிய சோகம் ஒளிந்திருக்கின்றது. இந்தியா ஏன் இந்துநாடாக இருக்க வேண்டும் என்பதும், ஏன் வட எல்லை எப்பொழுதும் வலுவானதாக இருக்க வேண்டும் எனும் தேவை அதில்தான் இருக்கின்றது. ஆம் அது 1323ம் ஆண்டு. முன்பு மாலிக்காபூர் வந்து மதுரையினை சூறையாடிவிட்டு டெல்லி சென்றதற்குப் பின்னரான‌ காலங்கள். ஆறாயிரம் யானை நிறையவும் 20000 குதிரையிலும் அவன் கொள்ளை பொருட்களைக் […]

மகா சிவராத்திரி நாளில் சிவாலய ஓட்டம்

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு, சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம் அர்ஜூனன் பெற்று வந்தாலும் அவன் அதை பயன்படுத்தாமலே யுத்தம் முடிந்தது. கண்ணன் அவர்களின் கண்கண்ட தெய்வமானான், வேறு எதுவும் நினைவில் இல்லை, சிவன் கொடுத்த ஆயுதமுமில்லை. செய்த கடும் தவத்தின் நினைவுமில்லை, அது போக யுத்தம் முடிந்த வெற்றியில் இருந்தார்கள். இந்தப் போரும் வெற்றியும் மிகப் பெரிய பரம்பொருளின் நாடகம் என அவர்கள் எதையும் நினைக்கவில்லை, சிவனை அடியோடு மறந்திருந்தார்கள். யுத்தத்தில் துரியனை அடித்துக் கொன்று […]

மகா சிவராத்திரி நாள் தத்துவமும் விரதமும்

இந்த பாரத கண்டத்து சனாதன தர்மம் என்பது மதம் மட்டுமல்ல, அது ஆன்மீகம், அறிவியல், உளவியல், பிரபஞ்ச தத்துவம், தெய்வீகம் எல்லாம் கலந்த வாழ்வியல் நெறி. ஒரு மனிதன் உடலாலும் மனதாலும் பலமாகி உறுதியாகி இறைவனை அடைய பிரபஞ்ச விதிகளுக்குட்பட்ட பல வழிகளைச் சொன்ன மதம் இந்துமதம். அதை வழிபாடு, விழா, கொண்டாட்டம், அனுசரிப்பு என பல வகைகளில் தெய்வத்தின் பெயரை முன்னிறுத்திச் சொன்னது. அதில் ஒன்றுதான் மகா சிவராத்திரி நாள். இந்நாளை விழா எனச் சொல்வதை […]

இன்று மகா சிவராத்திரி, திருமுறைப் பதிகப் பாடல்கள்.

இன்று மகா சிவராத்திரி, ஒவ்வொரு இந்துக்களும் முன்னோர் போதித்த மரபுபடி அதனை கட்டாயம் பின்பற்றுதல் அவசியம். இந்துமதம் மகா சுதந்திரமானது ஆனால் அந்த அதிதீவிர சுதந்திரமேதான் அதன் பல வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று கண்டிப்பும் கட்டுபாடும் இல்லா மதம் காலவோட்டத்தில் தடுமாறும், இந்துமதத்துக்கும் அந்த சோதனை வந்தது ஆனால் அதனை தாங்கிபிடித்த விஷயங்கள் பல உண்டு இந்துமதம் பல்லாயிரம் தூண்களில் நின்றிருக்கும் மண்டபம், லடசகணக்கான வேர்களில் நிற்கும் மதம் அதனால் வழிபாடுகள் அவசியம், அதுவும் கோவில் சென்று வழிபடுதல் […]

மாசி மகம்

இந்துக்களின் வானியல் அறிவு அக்காலத்திலே உன்னதமாய் இருந்தது, தங்களின் மாபெரும் தவவலிமையால் விண்ணக இயக்கத்தின் பிரபஞ்ச ரகசியங்களை அறிந்த ஞானியர் அதனை வகை வகையாக சொல்லி வைத்து, ஒவ்வொரு கோளின் இயக்கமும் இந்த பூமியில் எப்படி எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் கண்ணுக்கு தெரியாத வானலோக கதர்வீச்சும் சக்தியும் மானிட மனதை குணத்தை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதையும் உணர்ந்தனர். அப்படியே அவர்கள் அதனில் இருந்து தப்பவும் இன்னும் உன்னதமான பலன்களை அடையவும் பல போதனைகளையும் ஏற்பாடுகளையும் செய்தனர். […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications