திருமுருகாற்றுப்படை முகவுரை
முருகபெருமான் வழிபாட்டில் மிக மிக பழமையான நூல் திருமுருகாற்றுபடை. தமிழ் இலக்கண மரபில் ஆற்றுபடை என்பது ஒரு மரபு, மிகுந்த துயரில் நம்பிக்கையற்று போன ஒருவனை ஆற்றுபடுத்தி அமைதிபடுத்தி நம்பிக்கை கொடுத்து நல்வழி நடத்தும் மரபில் பாடபடும் இலக்கியங்களுக்கு ஆற்றுபடை என பொருள் இது பெருமபாணராற்றுபடை, சிறுபாணராற்றுபடை, கூத்தராற்றுபடை என பல உண்டு. இப்படி முருகபெருமானை பாடி வழிநடத்தும் பாடல்தான் திருமுருகாற்றுபடை ஒருவகையில் அறுபடை வீடுகள் என்பதே ஆற்றுபடுத்தும் கோவில்கள்தான், அந்த ஆற்றுபடை எனும் ஆலயங்கள்தான் அறுபடை […]