பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜல்லிகட்டு காளை

சில விலங்குகளின் தன்மைகள் ரசிக்க கூடியவை எதை கண்டும் பின்வாங்காமல் கம்பீரமாக நடக்கும் சிங்கம், ஒருவித பெருமிதத்துடன் நடக்கும் சேவல், மந்ததையில் முன் செல்லும் ஆட்டு கடா என ஒரு வரிசை உண்டு பலம் வாய்ந்ததாயினும் பாகனுக்கு கட்டுபட்டு, கணவனை பின் தொடரும் புதுமனைவி போல, (ஆம் புது மனைவி போல மட்டும்) செல்லும் யானையும் அந்த வரிசை. அதில் இந்த ஜல்லிகட்டு காளையும் சேர்ந்து கொள்ளும். களத்தில் யாராலும் அடக்க முடியா காளைகள், கோட்டை தாண்டியதும் […]

பொங்கல் – சூரிய நாராயண ஸ்லோகங்கள்

இந்துக்கள் சூரியனுக்கான வணக்கத்தை தங்கள் முன்னோர் வகுத்த வகையில் சொல்லி போற்றுகின்றார்கள் “ஆதித்தாய நமஹ! சூர்யாய நமஹபாஸ்கராய நமஹ! தினகராய நமஹதிரைலோக்யாய நமஹ! சூடாமணியே நமஹதிவாகராய நமஹ! லோகமித்ராய நமஹஜோதி ஸ்ருபாய நமஹ! அருணாய நமஹவரத ஹஸ்தாய நமஹ! ரவியே நமஹசூர்யநாராயண சுவமியே நமஹ” என வணங்குகின்றார்கள் “சீலமாய் வாழ சீரருள் புரியும்ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றிசூரியா போற்றி சுந்தரா போற்றிவீரியா போற்றி வினைகள் களைவாய்” என வணங்குகின்றார்கள் “ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!அருள் […]

பொங்கல்

வேதங்களில் சூரியன் சங்க காலத்திலோ இல்லை பண்டைய காலத்திலோ உழவனுக்கு விழா, உழவர் பண்டிகை என ஏதுமில்லை, 18ம் நூற்றாண்டுக்கு முன் அப்படி ஒரு விழா கொண்டாடப்பட்டதாக எந்த ஆதாரமுமில்லை. தைமாதம் அறுவடை நாள் என்பதெல்லாம் சரி, ஆனால் முப்போகம் விளைந்த மண்ணில் ஒவ்வொரு நான்கு மாதத்துக்கு ஒருமுறை அறுவடை நடந்து கொண்டேதான் இருந்தது, அதனால் இது அறுவடை விழா என சொல்லிவிடுவதிலும் அர்த்தமல்ல‌. உழவுக்கும் உலக உயிர்களுக்கெல்லாம் ஆதாரமானது சூரியன் என்பதை உணர்ந்த இந்துமதம் அவரை […]

பொங்கலும் உழவனும்

பொங்கல் காலத்தில் உழவன் சூத்திரன் அவனை ஆரிய பாசிசம் அடக்கி ஒடுக்கி வைத்தது, அவனுக்கு பூனூல் இல்லை அவனுக்கு வேதமில்லை அவனுக்கு எதுவுமில்லை , அப்படியான ஜாதி கொடுமைகளை இந்துமதமும் வைதீக ஆரிய பாசிசமும் புகுத்தின என சொல்லும் கும்பல் பல உண்டு அவைகள் வழக்கம்போல் சூத்திரன் உழவன் என பொங்கி கொண்டிருக்கின்றன‌ உண்மையில் ஏன் உழவனுக்கு பூனூல் இல்லை, சாஸ்திரமில்லை அவனுக்கு வேதங்களும் யாகமும் அவசியமில்லை என்றால் அவனுக்கு இச்சமூகம் கொடுத்த உயர்ந்த இடம் அப்படி […]

திருமுருகாற்றுப்படை 04

40 முதல் 60 வரிகள் “சூரர மகளி ராடுஞ் சோலைமந்தியு மறியா மான்பயி லடுக்கத்துச்சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தட்பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்சூர்முத றடிந்த சுடரிலை நெடுவேலுலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட்டுருகெழு செலவி னஞ்சுவரு பேய்மகள்குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற்கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலைஒண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர⁠வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயராநிணந்தின் வாய டுணங்கை தூங்க” திருப்பரங்குன்றத்தின் காட்சியினை […]

அனுமனும் தென்முனையும்

அனுமனை பற்றி நினைக்கும் போதெல்லாம் தென்முனை நினைவுக்கு வராமல் போகமுடியாது, ராமாயணமும் ராமகாதையும் அனுமனின் நினைவுகளும் தென்முனையோடு முழுக்க கலந்தவை. ஒரு வகையில் ராமாயணத்தின் திருப்பமே அங்குதான் ஆரம்பமாகின்றது, அதற்கான சாட்சிகள் அங்கு ஏராளம் உண்டு. உலகிலே ராமனின் குருவான விஸ்வாமித்திர மகரிஷிக்கு ஒரு ஆலயம், ஒரே ஒரு ஆலயம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பக்கம், அதாவது கூடங்குள அணுவுலை சமீபமாக விஜயபதி எனும் ஊரில் உண்டு. அங்குதான் தாடகை அட்டகாசம் செய்தாள், அந்த இடத்தில் நடந்த […]

ஹனுமான்

மனு என்பது சமஸ்கிருத வார்த்தை, மனு என்பது மனிதனை குறிக்கும் சொல். கவனித்தால் உலகில் முதன் முதலில் மனிதனை குறிக்கும் சொல்லாக சமஸ்கிருதம் இருந்திருக்கின்றது, அது மனு என அழைத்ததில் இருந்துதான் man, men போன்ற வார்த்தைகளெல்லாம் வந்திருக்கின்றன‌. இன்னும் ஆழமாக நோக்கினால் மனித பண்பு என சொல்லபடும் Humane என்பதன் பொருள் மனித சாயல் என்பதாகும், அதாவது மனுசாயல். Human எனும் வார்த்தையினை கொஞ்சம் கவனித்தால் அது ஹனுமன் (Hanuman) என்பதை அழகாகத் தொடும். ஹனுமன் […]

திருமுருகாற்றுப்படை : 03

இருபத்தொன்று முதல் 40ம் வரி வரை “செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபுபைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்துவர முடித்த துகளறு முச்சிப்பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டுஉளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்புஇணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தகவண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர்நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வைதேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்வேங்கை நுண்டாது அப்பிக் காண்வரவெள்ளிற் குறுமுறி […]

திருமுருகாற்றுப்படை : 02

இரண்டாம் பத்து வரிகள் “மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிகணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்கோபத் தன்ன தோயாப் பூந்துகில்பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்,கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பினாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச்சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி,துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதி” இனி பாடலின் பொருளைக் காணலாம். “மால்வரை நிவந்த சேண் உயர் வெற்பில்” அதாவது வானம் வரை உயர்ந்து வளர்ந்த பெரும் மூங்கில்களை கொண்ட எனப் பொருள். அடுத்து “கிண்கிணி கவை இய ஒண் […]

திருமுருகாற்றுப்படை : 01

முதல் பத்து வரிகள் “உலக முவப்ப வலனேர்பு திரிதருபலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளிஉறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கைமறுவில் கற்பின் வாணுதல் கணவன்கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழைவாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித்தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத்திருள்படப் பொதுளிய பராரை மராஅத்துருள்பூந் தண்டார் புரளு மார்பினன்” திருப்பரங்குன்றத்தையும் அங்கிருக்கும் முருகப்பெருமானையும் பற்றி நக்கீரர் பாடும் பாடலின் முதல் பத்து வரிகள் இவை. முதல் வரிகள் இப்படிப் பிரிந்து வருகின்றன‌. “உலகம் உவப்ப […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications