பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கருட பஞ்சமி

இந்துக்களின் அடையாளங்களெல்லாம் ஞான குறியீடுகள், ஒவ்வொரு அடையாளமும் பெரும் ஞானத்தை குறிப்பது. நாகசதுர்த்தியும், கருடபஞ்சமியும் அப்படியானதே. இந்துக்களின் பெரும் அடையாளம் நாகம், அதுவும் படமெடுக்கும் நாகம். அது சிவனின் கழுத்தில் இருக்கும் முருகனின் காலடியில் கிடக்கும், விநாயகரின் இடுப்பில் கொடியாய் கிடக்கும், அப்படியே ஆயிரம் தலைகளுடன் பரந்தாமனுக்கு படுக்கையாய் சுருண்டிருக்கும். அதே நேரம் தெய்வங்களின் வாகனங்கள் என ஒவ்வொன்றை அடையாளப்படுத்தியது இந்துமதம், சிவனுக்கு காளையும், முருகனுக்கு மயிலும், பரந்தாமனுக்கு கருடன் என்றும் அது சொன்னது. தெய்வங்களுக்கு ஏன் […]

நாக சதுர்த்தி : 02

இந்திய ஆன்மீக லவுகீக‌ வாழ்வில் பசுக்கள் எப்படி முக்கியமோ, பசுக்கள் எப்படி கொண்டாடப்பட்டதோ, எப்படி வழிபாடு செய்யப்பட்டதோ அதன் அடுத்த இடத்தில் நாகங்கள் இருந்தன‌. நாக வழிபாடு என்பது இந்துமதத்தின் பெரும் அடையாளமாக இருந்தது, உலகம் முழுக்க இருந்த இந்துமதம் இந்துஸ்தானில் சுருங்கிய பின் அது இங்கே பிரதானமானது, சீனா போன்ற நாடுகளில் அது அடையாளமானது. பாம்பு நடனம் என அவர்கள் ஆடி தொடங்கும் புத்தாண்டு அவர்களின் வழிபாட்டு நிகழ்வு அன்றி வேறல்ல‌. இந்துமதம் நாகத்தை பிரதானமாக்கியது, […]

நாக சதுர்த்தி : 01

இந்துக்களைப் போல பிரபஞ்ச அசைவுகளை கவனித்தவர்கள் யாருமில்லை. மானிடரைத் தாண்டி எல்லா லோகங்களையும் அதன் இயக்கங்களையும் அங்கு வாழும் சக்திமிக்க வடிவங்களையும் தங்கள் ஞானத்தால் உணர்ந்தவர்கள் இந்து ரிஷிகள். தாங்கள் உணர்ந்ததை வேதமாக, உபநிஷமாக, புராணமாக எழுதிவைத்தார்கள், அத்தோடு அவர்கள் தங்கள் பணி முடிந்ததென விலகவில்லை. மானிடர்மேல் மிக மிக அன்புகொண்ட அவர்கள் இப்பூமியில் மானிடர் நலமாக வாழ பல இதர உலக சக்திகளின் உதவி அவசியம் என்பதை உணர்ந்து, அந்த சக்திகளின் ஆசியினை எப்படி மானுடன் […]

வேத வியாசர்

““இங்கிருப்பதே எங்கும் இருக்கும்… இங்கில்லாதது எங்கும் இல்லை” என்பதுதான் சனாதான தர்மத்தினை விளக்கும் ஒரே வரி, அந்த அளவு எல்லாம் கொண்டது இந்த தர்மம் அதன் இயல்பில் இன்று வியாச பவுர்ணிமா கொண்டாடபடுகின்றது குரு பூர்ணிமா அன்று வியாசரை ஏன் கொண்டாட வேண்டும் என்றால் ஒவ்வொரு இந்துஸ்தானியும் அந்த மூலரிஷியினை ஏன் வணங்கி பணியவேண்டும் என்றால், ஏன் அந்த பவுர்ணமியினை வியாச பவுர்ணமி என தேசம் காலம் காலமாக கொண்டாடுகின்றது என்றால் அந்த காரணங்கள் வலுவானவை இந்துமதத்தின் […]

சாவித்திரி – காரடையான் நோன்பு

அந்த பாரததித்தில் அசுபதி என்றொரு மன்னன் இருந்தான், அவனுக்கு வாரிசு என ஒரு மகள் இருந்தாள், அழகிலும் அறிவிலும் சிறந்தவளான அவளுக்கு புனிதமான பெயரான சாவித்திரி எனும் பெயர் சூட்டினான், ஆம் சரஸ்வதியின் இன்னொரு பெயர் சாவித்திரி, எது உன்னதமும் உயர்ந்ததும் ஆசீர்வாதமுமானதோ அதற்கு சூட்டும் பெயர் சாவித்திரி அந்த சாவித்திரிக்கு திருமண வயதும் வந்தது, அக்கால இந்து சம்பிரதாயம் பெண்கள் தன் கணவனை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் அளித்தது, தன் பாதுகாவலர் ஆலோசகரான பெரியவரகள் சூழ […]

ஸ்ரீ அன்னை

இந்துமதம் சொல்வதெல்லாம் உண்மை என்பதும், அது சொல்லும் முன் ஜென்மம், கர்மா என்பதெல்லாம் முழுக்க நிஜம் என்றும் உலகுக்கு நிரூபிக்கவே சில பிறப்புகள் வருகின்றன‌ உரிய நேரத்தில் உரிய தொடர்புகள் கிடைக்கும்பொழுது அவை அந்த உண்மையினை பட்டவர்த்தனமாக சொல்கின்றன, எந்த பகுத்தறிவாளனும் பெரும் விஞ்ஞானியும் கூட அதனை மறுக்கமுடியாதபடி அவை விஸ்வரூப சாட்சியாய் நிற்கின்றன‌ காலம் காலமாக நடப்பது இந்த பிரபஞ்சத்தின் விளையாட்டு பகவானின் அருளாட்சி இது, அது இந்துமதத்துக்கு சோதனை வரும்பொழுதெல்லாம் அடிக்கடி நடக்கும் திருவிளையாட்டு. […]

ஆருத்திர தரிசனம்

ஆருத்திர தரிசனம் என இந்துக்கள் இந்நாளை அனுசரிக்கின்றார்கள், சைவர்களுக்கு திருவெம்பாவை நோன்பு இத்தோடு முடியும் என்பார்கள் ஆருத்திரா என்பது வேறு ஒன்றுமல்ல , அந்த வடமொழி வார்த்தை தமிழில் திருவாதிரை என அழைக்கபடும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள் அக்காலத்தில் வரம்பெற்ற முனிவர்கள் கூடி நாம் யாகம் நடத்தி சிவனாகிவிடுவோம் என தருகாவனத்தில் யாகம் நடத்தினார்களாம், கர்மம் என்பதே கடவுள். கடவுள் என ஒருவர் இல்லவே இல்லை, ஒழுங்காக கர்மம் ஆற்றும் ஒவ்வொருவனும் கடவுள் எனும் […]

அபிராமி அந்தாதி : 65

“ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம்முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்மகனும்உண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே.” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள்தரும் “ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்முகனும் முந்நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்மகனும் உண்டாயதன்றோவல்லி நீசெய்த வல்லபமே” இந்த பாடலை புரிந்துகொள்ளும் முன் ஒரு திருவிளையாடலை காண வேண்டும் , அப்பொழுது இப்பாடல் எளிதாக புரியும் கந்தபுராணத்தின் தொடக்க நிகழ்வு […]

அபிராமி அந்தாதி 63

“தேறும்‌ படிசில ஏதுவும்‌ காட்டிமுன்‌ செல்கதிக்குக்‌கூறும்‌ பொருள்‌ குன்றிற்‌ கொட்டும்‌ தறிகுறிக் கும்‌சமயம்‌ஆறும்‌ தலைவி இவளாய்‌ இருப்பது அறிந்திருந்தும்‌வேறும்‌ சமயம்‌ உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே” இப்பாடலை புரிந்துகொள்ளுமுன் ஒரு பின்னணியினை நோக்க வேண்டும் இந்துஸ்தானத்தில் எக்காலமும் சமய சச்சரவுகள் உண்டு, என் மதம் பெரிது என சொல்லும் கூட்டமும் அவர்களால் சில சர்ச்சைகளும் அடிக்கடி ஏற்படுவதும் உண்டு எல்லா நதிகளும் கடலுக்கு செல்வது போல எல்லா மதங்களும் இறைவனை நோக்கி இழுத்து சென்றாலும் யார் பெரியவர் […]

அபிராமி அந்தாதி : 62

அபிராமி அந்தாதி : 62 “தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மதவெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன், மெய் அடையக்கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி கோகனகச்செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே” இந்த பாடலை புரிந்து கொள்ளுமுன் சிவபெருமான் செய்த முக்கிய வதங்களையும் அவற்றின் ஆலயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் இப்பாடல் எளிதாக பிரியும் சிவபெருமானின் திருவிளையாடல்களில் வீரம் காட்டிய அந்த சம்பவங்கள் வீராட்டானம் என அழைக்கபடும் சிவபெருமான் செய்த சம்ஹாரங்களில் முக்கியமானவை எட்டு, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications