அபிராமி அந்தாதி : 37
“கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்னமெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விட அரவின்பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும்எட்டுத்திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே” இப்பாடல் அன்னையின் திருகோலத்தையும் அந்த கோலத்தில் அவளின் உயர்ந்த குணத்தையும் குறித்து பாடபடும் பாடல், பட்டர் அந்த பொருளில் மிக அழகாக பாடுகின்றார். முதல்வரி “கைக்கே அணிவது கன்னலும் பூவும்” அன்னையின் கைகளில் கரும்பும் பூக்களும் கொண்டிருக்கின்றாள் என்பது பொருளாகும், அன்னை மன்மதனை வெற்றிகொண்டு அவன் ஆயுதங்களை பறித்தவள் எனும் […]