பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பூந்தானம் நம்பூதிரி

தெய்வம் எப்போதும் ஒருவனின் மனதை பார்க்கும், அவன் தன்மேல் கொண்டிருக்கும் தீராத பக்தியினை பார்க்கும் . மற்றபடி ஆன்மீக விதிகளோ, ஆச்சாரமோ, மொழியோ, இதர கட்டுப்பாடுகளோ அதற்கு அடுத்த நிலைதான் அல்லது அவை அவர்களுக்கு அவசியமே இல்லை. உத்தமமான பக்தனை தெய்வம் நேரடியாக தன்னுள் ஈர்க்கின்றது. உலகுக்கு அவனை அடையாளம் காட்டி, அவன் தன்மேல் கொண்ட அன்பை ஊரறியச் செய்து அங்கீகரித்து அவனை ஏற்றுக்கொள்கின்றது. விதிகள், கட்டுப்பாடுகள் எல்லாம் பூரணமான, மனம் கசியும் பக்திமுன், முழு சரணாகதியான […]

கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள்

கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் பீடம் சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் காலமாகிவிட்டார் என்பது அதிர்ச்சி செய்தி . அவர் இந்துமதத்துக்கும் இந்த தேசத்துக்கும் செய்த சேவைகள் எக்காலமும் நிலைத்து நிற்கும் மகா புண்ணிய பணிகள். பொதுவாக தமிழக ஆதீனங்கள் திராவிடத்துக்கு அஞ்சும் இயல்புடையவை, இந்துமதத்துக்கும் மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன நடந்தாலும் தன் பணி திராவிடத்துக்கு காவல் இருப்பவை ஆதீனங்களின் ஆதார கடமையே மதத்தை காப்பதும் பரப்புவதுமே என்பதை மறந்து, தங்கள் சுயலாபத்துக்காக எல்லாவற்றையும் விட்டுகொடுத்து மவுனம் காக்கும் இயல்பு […]

மகா சிவராத்திரி நாளில் சிவாலய ஓட்டம்

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு, சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம் அர்ஜூனன் பெற்று வந்தாலும் அவன் அதை பயன்படுத்தாமலே யுத்தம் முடிந்தது. கண்ணன் அவர்களின் கண்கண்ட தெய்வமானான், வேறு எதுவும் நினைவில் இல்லை, சிவன் கொடுத்த ஆயுதமுமில்லை. செய்த கடும் தவத்தின் நினைவுமில்லை, அது போக யுத்தம் முடிந்த வெற்றியில் இருந்தார்கள். இந்தப் போரும் வெற்றியும் மிகப் பெரிய பரம்பொருளின் நாடகம் என அவர்கள் எதையும் நினைக்கவில்லை, சிவனை அடியோடு மறந்திருந்தார்கள். யுத்தத்தில் துரியனை அடித்துக் கொன்று […]

மகா சிவராத்திரி நாள் தத்துவமும் விரதமும்

இந்த பாரத கண்டத்து சனாதன தர்மம் என்பது மதம் மட்டுமல்ல, அது ஆன்மீகம், அறிவியல், உளவியல், பிரபஞ்ச தத்துவம், தெய்வீகம் எல்லாம் கலந்த வாழ்வியல் நெறி. ஒரு மனிதன் உடலாலும் மனதாலும் பலமாகி உறுதியாகி இறைவனை அடைய பிரபஞ்ச விதிகளுக்குட்பட்ட பல வழிகளைச் சொன்ன மதம் இந்துமதம். அதை வழிபாடு, விழா, கொண்டாட்டம், அனுசரிப்பு என பல வகைகளில் தெய்வத்தின் பெயரை முன்னிறுத்திச் சொன்னது. அதில் ஒன்றுதான் மகா சிவராத்திரி நாள். இந்நாளை விழா எனச் சொல்வதை […]

இன்று மகா சிவராத்திரி, திருமுறைப் பதிகப் பாடல்கள்.

இன்று மகா சிவராத்திரி, ஒவ்வொரு இந்துக்களும் முன்னோர் போதித்த மரபுபடி அதனை கட்டாயம் பின்பற்றுதல் அவசியம். இந்துமதம் மகா சுதந்திரமானது ஆனால் அந்த அதிதீவிர சுதந்திரமேதான் அதன் பல வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று கண்டிப்பும் கட்டுபாடும் இல்லா மதம் காலவோட்டத்தில் தடுமாறும், இந்துமதத்துக்கும் அந்த சோதனை வந்தது ஆனால் அதனை தாங்கிபிடித்த விஷயங்கள் பல உண்டு இந்துமதம் பல்லாயிரம் தூண்களில் நின்றிருக்கும் மண்டபம், லடசகணக்கான வேர்களில் நிற்கும் மதம் அதனால் வழிபாடுகள் அவசியம், அதுவும் கோவில் சென்று வழிபடுதல் […]

அய்யா உண்டு!!!

அய்யா வைகுண்டர் அவதார நாள் – மாசி 20. இந்தப் பிரபஞ்சம் இந்த பூமிப்பந்தினை சரியாக கவனித்துக் கொண்டே இருக்கின்றது. இங்கு நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் அது கூர்ந்து நோக்குகின்றது. அந்த அசைவில் அராஜகமோ அகங்காரமோ பெருகினால் அது தானே ஏதோ ஒரு வடிவில் வந்து அதை நிர்மூலமாக்குகின்றது. அது காலம் காலமாக இங்கு நடக்கும் விஷயம். எல்லா அராஜக அக்கிரமங்களும் அது டைனோசர்களாக இருந்தாலும் சரி டைனோசரை விட பிரம்மாண்ட சக்தியும் பேராசையும் கொண்ட மானிடர்களாக […]

திருமுருகாற்றுப்படை : 11

155ம் வரி முதல் 176ம் வரிகள் வரை “நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்துஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானைஎருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும், நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇயஉலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்பலர்புகழ் மூவரும் தலைவ ராகஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்தாமரை பயந்த தாவில் ஊழிநான்முக ஒருவற் சுட்டிக் காண்வர பகலிற் றோன்றும் இகலில் காட்சிநால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடுஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்புவளிகிளர்ந் தன்ன […]

பாரதம் துலங்குகிறது

சமீப நாட்களாக நடப்பதைக் கண்டால் ஒரு உண்மையினை புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது ஒரு மவுனமான இந்து புரட்சி நடக்கின்றது அல்லது எழப்போகும் பெரும் எழுச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன‌. இது அரசியலில் மட்டுமல்ல. ஊடகம், சினிமா, இன்னும் கட்டுமானம், அலங்காரம், விளையாட்டு எனப் பல துறைகளில் அந்த எழுச்சியினை அவதானிக்க முடிகின்றது. கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் அது புரியும். காலபைரவர் என்றால் யார் என்றே பலருக்குத் தெரியாமல் இருந்தது. இப்போது திரும்பும் இடமெல்லாம் கால பைரவர் வழிபாடும் அவருக்கான […]

மாசி மகம்

இந்துக்களின் வானியல் அறிவு அக்காலத்திலே உன்னதமாய் இருந்தது, தங்களின் மாபெரும் தவவலிமையால் விண்ணக இயக்கத்தின் பிரபஞ்ச ரகசியங்களை அறிந்த ஞானியர் அதனை வகை வகையாக சொல்லி வைத்து, ஒவ்வொரு கோளின் இயக்கமும் இந்த பூமியில் எப்படி எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் கண்ணுக்கு தெரியாத வானலோக கதர்வீச்சும் சக்தியும் மானிட மனதை குணத்தை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதையும் உணர்ந்தனர். அப்படியே அவர்கள் அதனில் இருந்து தப்பவும் இன்னும் உன்னதமான பலன்களை அடையவும் பல போதனைகளையும் ஏற்பாடுகளையும் செய்தனர். […]

திருமுருகாற்றுப்படை : 10

(138 முதல் 154 வரை உள்ள வரிகள்) “புகைமுகந் தன்ன மாசில் தூவுடைமுகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப்பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்றுஅழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்உமையமர்ந்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications