பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சப்த கன்னியர் – 04

கௌமாரி தேவி – மூன்றாம் கன்னிதெய்வம் கௌமாரம் என்றால் முருகப்பெருமானின் வழிபாட்டை குறிக்கும் சொல், அவ்வகையில் இந்த கௌமாரி தேவி என்பவள் முருகப்பெருமானின் சக்தியினை குறிப்பவள். “கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்” என குமரகுருபரர் முருகன் சூரனை அழிக்கும் போது அவள் முருகபெருமானின் சக்தியாய் இருந்தாள் என்பதை சொல்கின்றார். சப்த கன்னியரில் முன்றாம் தேவியான இந்த அன்னை முருகபெருமானின் சக்தி, அந்த ஸ்கந்தனின் இயக்கும் குமரன் எனும் கௌமாரனின் சக்தி அந்த கௌமாரி. அவள் முருகனின் அம்சம் […]

சப்த கன்னியர் – 02

பிராம்மி – முதல் கன்னிதெய்வம் இந்த பிரபஞசத்தை இயக்கும் மகா சக்திகளை ஏழுவிதமாக சக்திகளாக பிரித்து சொன்ன இந்துமதம் அவர்களை சப்த கன்னியர், சப்த மாதர்கள் என்ற அடையாளமிட்டு சொன்னது இந்த சக்திகள் இயக்கும் சக்திகள், இயங்கும் பலத்தையும் அருளையும் தரும் சக்திகள். அந்த சக்திகளின் பலத்தாலே இந்த பிரபஞ்சமமும் அண்டமும் அண்டத்தின் வடிவமான மானிட பிண்டம் எனும் மானிட உடலும் இயங்குகின்றது இந்த சக்திகளின் தோற்றம் பற்றி புராணத்தில் பல கருத்துக்கள் உண்டு, சிவன் அந்தகார […]

சப்த கன்னியர் – 01 முன்னுரை

இந்து மரபில் நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆடி மாதம், புரட்டாசி, தை, பங்குனி என நான்கு மாதங்களில் அவை கொண்டாடப்படும். ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வராஹி நவராத்திரி, தமிழக அம்மன் கொடை விழாக்கள் இந்த சாயலே. புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி. வழமையாக கொண்டாடப்படும் நவராத்திரி இதுதான், துர்கா பூஜை சரஸ்வதி பூஜை என கொண்டாடுவது […]

திருமுருகாற்றுப்படை : 15

( 227 முதல் 247 வரையான வரிகள்) “மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவரநெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறிமுரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறிமதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்குருதியொடு விரைஇய தூவெள் ளரிசிசில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீர நறுந்தண் மாலைதுணையற அறுத்துத் தூங்க நாற்றிநளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்திநறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடிஇமிழிசை அருவியொடு இன்னியம் கறங்கஉருவப் பல்பூதத் தூஉய் வெருவரக்குருதிச் செந்தினை […]

குரு தேஜ்பகதூர் ஜயந்தி

சீக்கியர்களின் ஒன்பதாம் குரு தேஜ்பகதூர், அவர் காலத்தில் காஷ்மீரிய இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்திருக்கின்றான் ஒளரங்கசீப், அப்போது அவரிடம் அடைக்கலாமக வந்திருக்கின்றார்கள் அந்த அபலை இந்துக்கள் ஏற்கனவே சீக்கியர்களை குறிவைத்த ஓளரங்கசீப் இந்துக்களோடு சேர்த்து அவர்களையும் மதம் மாற்ற துடித்திருக்கின்றான், அந்த குரு மதம் மாறினால் மொத்த சீக்கியரும் அவர்களோடு அடைக்கலமான இந்துக்களும் மதம் மாறியாகவேண்டும் என கணக்கிட்டிருக்கின்றான் அவன் அவையில் வாதம் நடந்திருக்கின்றது, வாதத்தில் தோற்றால் குரு மதம் மாற வேண்டும் என்ற நிபந்தனையோடு அது […]

திருமுருகாற்றுப்படை : 14

( 206 முதல் 226 வரையான வரிகள்) “செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்கொடியன் நெடியன் தொடியணி தோளன்நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடுகுறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்முழவுறழ் தடக்கையின் இயல ஏந்திமென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்துகுன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே; அதான்று,சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்துவாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்,ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்வேலன் […]

சித்தூர் சாஸ்தா கோவிலும் பங்குனி உத்திரத் தேரும்

வரலாற்றில் பாண்டிய நாட்டின் தென் எல்லை அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தது. சேரநாடு என்பது மலையினைத் தாண்டி களக்காடு, திருநெல்வேலி என பல இடங்களுக்கு நீண்டிருந்தது. கூன்பாண்டியன் எனும் நின்றசீர் நெடுமாற நாயனார் நடத்திய போர் அதனை சொல்கின்றது. அப்பொழுது நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகள் குமரி மாவட்டம் போலே சேர நாட்டுடன் இருந்தன. பழஞ்சி என்றால் கோட்டை எனப் பொருள். பெரும் பழஞ்சி சிறு பழஞ்சி எனும் அக்கால கோட்டை இருந்த ஊர்கள் பெருமளஞ்சி சிறுமளஞ்சி […]

திருமுருகாற்றுப்படை : 13

பழமுதிர்ச்சோலை (190 முதல் 205ம் வரிகள் வரை) “பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடுவெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்நீடமை விளைந்த தேக்கள் தேறல் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்துதொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணிஇணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லை இலையுடை நறும்பூச்செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபுசுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழைதிருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇமயில்கண் […]

திருவாரூர் தேரோட்டம் – ஆரூரா தியாகேசா

உலகளவில் இன்றும் இந்து ஆலயங்களே மிகபெரிய பரப்பளவில் கட்டபட்டவையாக இருக்கின்றன, அவ்வகையில் கம்போடியாவின் அங்கோர்வாட் எனும் இந்து ஆலயத்துக்கு அடுத்து மிக பிரமாண்டமான ஆலயங்கள் தமிழகத்தில்தான் உண்டு தமிழகத்தில் இது தேரோட்ட காலம், அவ்வகையில் தமிழகத்தின் தனிபெரும் அடையாளம் திருவாரூர் தேர், சிவனின் அதிமுக்கிய தலங்களில் ஒன்றானதும் இன்றளவும் இந்திய ஆலயங்களில் பெரியதுமான திருவாரூர் கோவில் போலவே அதன் தேரும் தனி பிரசித்தியானது ஒருவகையில் அது உலக அதிசயமும் கூட‌ சைவத்தின் மிக பெரிய அடையாளமும் மகா […]

ஸ்ரீரங்கனும் ஜீயர்புரமும்…

தொன்மையான இந்துமத தெய்வங்களின் திருவிளையாடல் கொஞ்சமல்ல, பாரத கண்டம் முழுக்க அது இயல்பாய் இருந்தது, தங்களுக்கு பெரும் ஆலயம் கட்டி விடாமல் விழா எடுத்து பிராமாண்ட தேர்செய்து நாள் தோறும் சீர் செய்து படையல் செய்து கொண்டாடும் பக்தர்கள் மேல் அந்த தெய்வங்களுக்கு எப்போதுமே வாஞ்சை இருந்தது அதனை காட்ட அடிக்கடி அவை திருவிளையாடலை நடத்துவதுண்டு, ஆனால் அந்த திருவிளையாடலை யார் உன்னதமான பக்தர்களோ, யார் எதுவுமற்ற நிலையிலும் யார் தான் ஒன்றுமே செய்யாத நிலையிலும், யார் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications