பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விநாயகர் அனுபூதி : 26 to 30

விநாயகர் அனுபூதி : 26 “துட்டர் குதர்க்கர் தொலைந்தே பொடியாய்ப்பட்டே இரியப் படையை விடுவாய்!சிட்டர் புகழும் திறமே! வளரும்மட்டில் மதமார் மழலைக் களிறே” பாடல் இப்படிப் பிரியும். “து(ஷ்)ட்டர் குதர்க்கர் தொலைந்தே பொடியாய்ப்பட்டே இரியப் படையை விடுவாய்!சி(ஷ்)ட்டர் புகழும் திறமே வளரும்மட்டில் மதமார் மழலைக் களிறே” “துஷ்ட குணத்தோடுப் பொல்லாதவர்கள் வன்முறையால் தாக்க வரும்போதும், குதர்க்க வாதத்தோடு வஞ்சகர்கள் ஏமாற்றவரும் போதும், உன் கையில் இருக்கும் கோடாரியினைக் கொண்டு உன்னை நம்பும் பக்தர்களைக் காப்பவனே, மதம் வழியும் […]

விநாயகர் அனுபூதி : 21 to 25

விநாயகர் அனுபூதி : 21 “மகப்பே(று) அருள்வான் மகிழ்வாய் நிதியைஅகத்தே தருவான்: அணியன்: கரிமாமுகத்தான் அடியை முறையாய் நிறையாய்ச்செகத்தீர் தொழுமின்! தொழுமின் தினமே” “விநாயகன் குழந்தைப் பேற்றினை அருள்வான; இல்லங்களில் எல்லாம் மகிழ்ச்சியுடன் செல்வத்தைத் தருவான்; அவன் அருகிலேயே இருப்பான்; விநாயகனின் திருவடியை முறையாக நாள் தோறும் தொழுவீர்களாக” இப்பாடல் விநாயகப் பெருமானைப் பணிந்தால் சந்ததி பெருகி பெருவாழ்வு வாழும் என்பதைப் போதிக்கின்றது. விநாயகப் பெருமான் நல்ல பிள்ளைகள் அமையும் யோகத்தை அருள்பவர், பிள்ளைச் செல்வம் அருள்வதாலே […]

விநாயகர் அனுபூதி : 16 to 20

விநாயகர் அனுபூதி : 16 “ஆற்றல் அறியேன் அடிசெய் பிழைதீர்சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர! யான்சாற்றும் தமிழ்மா லைதனைத் துதிக்கைஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே” பாடல் இப்படிப் பிரியும். “ஆற்றல் அறியேன் அடிசெய் பிழைதீர்சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர!யான்சாற்றும் தமிழ் மாலை தனைத் துதிக்கைஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே” விநாயகப்பெருமானே, “உன் பெரும் சக்தி தெரியாமல், அறியாமல் அறியாமையால் நான் ஏதும் பிழை செய்திருந்தால் மன்னிப்பாயாக. கோபம் தவிர்ப்பாயாக‌. நான் உன்னை துதித்துச் சாற்றும் தமிழ்மாலையினை உன் […]

விநாயகர் அனுபூதி : 11 to 15

விநாயகர் அனுபூதி : 11 “வஞ்சப் புலன் என் வசமாய் நிசமாய்க்கொஞ்சிக் குலவிக் குணமாய் மிளிரஎஞ்சித் தமதில் இனிதே உனதுகஞ்சக் கழல்வை கணநா யகனே” தேவர்களுக்கெல்லாம் தலைவனே! என்னை வஞ்சித்துத் தீய வழியில் சேர்க்கும் ஐம்புலன்களும் என் அறிவுக்கு உட்பட்டு நல்ல செயல்களைச் செய்பவையாய் மாறி ஒளிவிடுவதற்கு, என் சித்தத்தில் உனது தாமரை போன்ற அடிகளை வைப்பாய் என்பது பொருள். ஐம்புலன்களையும் அடக்காமல் எதிலும் வெற்றி இல்லை.அதுவும் ஆன்மீகப் படிநிலையில் இந்தப் புலனடக்கம் மிக மிக முக்கியமானது. […]

விநாயகர் அனுபூதி : 06 to 10

விநாயகர் அனுபூதி : 06 “ஒருகொம் புடையான் உயர்மோ தகமேவிரும்பும் பெருமான் விடையோன் குமரன்சுரும்பார் தொடையன் சுகமா குமெலாம்அருள்வான் அருள்வான் அடியார் அவர்க்கே” பாடல் புரிந்துகொள்ள எளிதானது. “ஒரு கொம்பு உடையான் உயர்மோதகமேவிரும்பும் பெருமான் விடையோன் குமரன்சுரும்பார் தொடையன் சுகமாகும் எல்லாம்அருள்வான் அருள்வான் அடியார் அவர்க்கே” அவன் ஒரு தந்தம் உடையவன், மோதகத்தை விரும்புபவன், விடை எனும் காளைமேல் ஏறிவரும் சிவனின் குமரன், வண்டுகள் மொய்க்கும் மாலையினை அணிந்திருப்பான், அடியார்கள் சுகமாக நிம்மதியாக வாழ எல்லா வரத்தையும் […]

விநாயகர் அனுபூதி : 01 to 05

விநாயகர் அனுபூதி : 01 முருகம்பெருமானுக்குக் கந்த சஷ்டி கவரம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் எனப் பல வகை பாடல்களைப் பின்னாளில் அடியார்கள் பாடிவைத்தனர். இதன் முன்னோடி விநாயகப் பெருமானுக்கான வழிபாடு விநாயக வழிபாடு எனும் மூத்த வழிபாட்டை சப்த ரிஷிகள் செய்தார்கள், ஒளவையார் செய்தார் இன்னும் ஏகப்பட்டோர் விநாயகப் பெருமானின் பெருமைகளை வகை வகையாக பாடிவைத்தார்கள். நாயன்மார்கள் வரலாற்றை முதலில் பாடிய நம்பியாண்டார் நம்பி பெரும் விநாயக அடியார். இப்படிப்பட்ட வரிசையில் முக்கியமானவர் காசிப […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : அலவாய் முருகப்பெருமான் ஆலயம் மற்றும் செண்பக மலை ஆலயம்

முருகப்பெருமான் ஆலயங்கள் : அலவாய் முருகப்பெருமான் ஆலயம் மற்றும் செண்பக மலை ஆலயம் அலவாய் ஆலயம் கொங்குப் பகுதியில் நாமக்கல் பக்கம் அமைந்திருக்கின்றது. இந்த ஆலயம், ராசிபுரத்துக்கும் வெண்ணந்தூருக்கும் இடையில் இருக்கும் மலையின் தலமிது, இதனைச் சுற்றியே சென்னிமலை முதல் பல முருகப்பெருமான் தலங்கள் உண்டு. அதில் ஒன்று இந்த அலவாய் தலம். இதன் வரலாறு கொங்கண முனிவர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, பொதிகை மலை பக்கம் அகத்தியர் போல் கொங்கு நாட்டு பக்கம் பிரசித்தியானவர் கொங்கண […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : மயிலாடும் மலை மற்றும் கனகமலை முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : மயிலாடும் மலை மற்றும் கனகமலை முருகன் ஆலயம். வேலூர் அருகில் உள்ள கே.வி குப்பம் அருகே அமைந்துள்ளது இந்த ஆலயம். சிறிய குன்றின் மேல் மாயல் கிராமத்தின் அருகே அமைந்துள்ளது இந்த ஆலயம். இது பழங்காலத்தில் இருந்தே உண்டு எனினும் மீளக் கட்டப்பட்டது சமீபத்திய காலங்களிலே. அங்கு நாகராஜ் சித்தர் என்பவர் இருந்தார். முருகபெருமானின் சீடரான அவர் திருத்தணி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்குச் சென்று முருகனை வழிபட்டு வந்தார், அவர் கனவில் தோன்றிய […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : வடபழனி முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வடபழனி முருகப்பெருமான் ஆலயம். தமிழக முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானதும் சென்னையின் மிக முக்கிய அடையாளத்தில் ஒன்றுமானது வடபழனி முருகப்பெருமான் ஆலயம், 18 ஆம் நூற்றாண்டில் ஒரு ஓலை கொட்டைகையில் துவங்கப்பட்ட இவ்வாலயம் இப்போது ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாக வளர்ந்திருப்பதெல்லாம் முருகனின் தனி அருள். இந்த ஆலயத்தின் தலவரலாறு அண்ணாசாமி நாயக்கர் என்பவரிடம் இருந்து துவங்குகின்றது, அது 18 ஆம் நூற்றாண்டின் காலங்கள். இப்போது இருக்கும் சென்னை அப்போது இல்லை, மெட்ராஸ் என்பது கடற்கரை கோட்டை […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : கன்னியாகுமரி முருகன் குன்றம் ஆலயம் மற்றும் மருங்கூர் சுப்பிரமணியசாமி ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : கன்னியாகுமரி முருகன் குன்றம் ஆலயம் மற்றும் மருங்கூர் சுப்பிரமணியசாமி ஆலயம். முதலாவது ஆலயமான முருகன் குன்றம் ஆலயம் கன்னியாகுமரியின் நுழைவாயிலில் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, இந்த ஆலய வரலாறு மகா தொன்மையானது. வரலாற்றின் அடிப்படையில் ஆழமானது. அதாவது, இந்தப் பகுதிகள் சேரநாட்டின் தென்கிழக்கு எல்லையாய் இருந்த பகுதிகள். சேர நட்டின் கிழக்கு எல்லை மிகப்பெரிய மலைகளால் ஆனது என்பதால் இந்தப் பிரதேசம் மட்டும் சிறிய பகுதி மட்டும்கொஞ்சம் காவல் செய்யப்பட வேண்டிய பகுதி என்பதால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications