பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திருமுருகாற்றுப்படை : 20

301 முதல் 317 வரையான கடைசி வரிகள். ஆசினி முதுசுளை கலாவ மீமிசைநாக நறுமலர் உதிர ஊகமொடுமாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்றுமுத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்றுநன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியாவாழை முழுமுதல் துமியத் தாழைஇளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புறமடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்கோழி வயப்பெடை இரியக் கேழலொடுஇரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்னகுரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டுஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்றுஇழுமென இழிதரும் அருவிப்பழமுதிர் சோலை […]

ஒரு சிறு குறிப்பு

ஒவ்வொரு நெல்லையனுக்கும் தாமிரபரணி, அகத்தியர், நெல்லையப்பர், திருசெந்தூர் நாதன், கொற்கை, ஆதிச்சநல்லூர், நின்றசீர் நெடுமாறன், குமரகுருபரர், நம்மாழ்வார், ஜடாவர்ம சுந்தரபாண்டியன், கட்டபொம்மன், புலித்தேவன், வாஞ்சிநாதன் , வ.உ.சி என பெரும் கர்வமான அடையாளங்கள் உண்டு அந்த ஞானகர்வ பாரம்பரியத்தில் வந்த எங்கள் பாரதிக்கும் மகத்தான இடம் உண்டு அவன் எங்கள் பெருமை, அவனின் நினைவுகளே எப்போதும் எம்மை வழிநடத்தும், அவன் எங்கள் ஞானகாற்று, தேச கங்கை நதி அவனை எப்படி நாம் மட்டம் தட்டுவோம்? பாரதி எம் […]

ஸ்வாமி சின்மயானந்தா

19ம் நூற்றாண்டு இந்துமதத்திற்கு சோதனைகள் அதிகம் உதித்த காலம், ஒரு பக்கம் கம்யூனிச நாத்திக கொள்கைகள் ஒருபக்கம் ஐரோப்பிய மதமாற்ற கொடுமைகள் அவர்களின் மேலாதிக்க மனப்பான்மை என இந்துமதம் மிகபெரிய சவாலை எதிர்கொண்டது ஐரோப்பியரின் மிகபெரிய ஆயுதம் கல்வி கூடங்களானது, ஆட்சி அவர்களிடம் சிக்கியது அதிகாரம் அவர்களிடம் சிக்கியது எனும் வகையில் அவர்கள் நினைத்த கல்வியினை அவர்களால் கொடுக்கமுடியும், அக்கல்வியில் இந்திய தேசபற்றோ இந்திய கலாச்சாரமோ இந்துமத பெருமைகளோ இருக்கும் என எதிர்பார்க்க முடியாது கல்வியில் மாற்றம் […]

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் அரவாணிகள் விழா

சித்ரா பௌர்ணமி பௌர்ணமிகளில் அது மகா முக்கியமானது. அந்த முழுநிலவு நாள் அன்று சில வழிபாடுகள் விசேஷமானவை. கண்ணகி கோவில் திருவிழா, கூவாகம் கோவில் அரவாணிகள் விழா அன்றுதான் நடக்கும். இதில் அந்த கூவாகம் விழா கொஞ்சம் கவனிக்க வேண்டியது, அது அரவாணிகளுக்கானது அரவாணிகளின் இன்றைய நிலை பரிதாபமானது, கொடூரமானது, நினைத்து பார்க்கவே கண்ணீர் பெருகும் மகா கொடுமையான வாழ்வு அது. உலகெல்லாம் எக்காலமும் அந்த தனி இனம் இருந்தது. மேற்காசிய பண்டை மதங்களில் கூட அதன் […]

ஞானி சதாசிவ ப்ரம்மேந்த்ராள்

இந்துஸ்தானத்தில் பெரும் அவதாரங்களும் யோகிகளும் எப்போதோ முன்பு தோன்றினார்கள் அதர்மம் களைய பாடுபட்டார்கள் என்பதல்ல விஷயம். எப்பொழுதெல்லாம் இங்கு அதர்மம் தலைவிரிக்குமோ அப்பொழுதெல்லாம் யோகிகளும் ஞானியரும் வந்து இந்து தர்மம் காப்பார்கள். அது அகத்தியர் காலம், விசுவாமித்திரர் காலம், கண்ணன் காலம் மட்டுமல்ல. பின்னாளில் சாணக்கியன், வித்யாதாரர், சமர்த்த ராமதாஸர், ராகவேந்திரர், குமரகுருபரர் என அந்த வரிசை வந்து கொண்டே இருந்தது, இன்னும் வரும் அப்படி வந்த பெரும் மஹான் ஒருவர்தான் நெரூரில் சித்தியடைந்த ப்ரம்மேந்தராள். அது […]

மதுரை சித்திரைத் திருவிழா

இந்திய இந்து விழாக்களில் பிரசித்தியானதும், தமிழக இந்து விழாக்களில் மாபெரும் கூட்டம் கூடுவதுமான அந்த‌ மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு மிக உற்சாகத்துடன் கொண்டாடபடுகின்றது, இன்று கொடியேற்று விழா மதுரை என்பது சாதாரண நகரம் அல்ல, மதுரை உலகின் மிகபழமையான நகரங்களில் ஒன்று கிரேக்கத்தின் ஏதென்ஸ், இத்தாலியின் ரோம், அரேபியாவின் பாக்தாத் , இஸ்ரேலின் ஜெரிக்கோ, சிரியாவின் டாமாஸ்கஸ், எகிப்தின் எல்காப், எஸ்னா சீனாவின் பிஜிங் போன்ற நகரங்களை விட மிக பழமையானது இந்தியாவின் காசி […]

சித்திரை பவுர்ணமியும் முருகப்பெருமான் வழிபாடும்

பசுமலை, முக்குணம் மற்றும் ஈசூர் முருகன் ஆலயங்கள் சித்திரை பௌர்ணமி என்பது இந்துக்களுக்கு மகா விசேஷமானது, அது ஆகர்ஷன சக்திகள் சூட்சும சக்திகள் நிறைந்த நன்னாள். அந்நாளில் மலைமேல் இருக்கும் தங்களை தரிசித்தல் நன்று, முன்பு மலையில் இருக்கும் கண்ணகி தேவியின் ஆலய கொண்டாட்டமெல்லாம் அப்படித்தான் உருவானது, இன்றும் கேரள எல்லையில் அந்த கொண்டாட்டம் உண்டு சித்திரை பவுர்ணமி அன்று சித்தர்கள் வழிபாடும் முருகப்பெருமான் வழிபாடும் அவசியம், முருகப்பெருமான் இருக்குமிடமெல்லாம் சித்தர்களும் இருப்பார்கள் அதனால் அந்த வழிபாடு […]

திருமுருகாற்றுப்படை : 19

(290 முதல் 300 வரை உள்ள வரிகள்) “மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டிஅஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின் வர’வெனஅன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்றுஇருள்நிற முந்நீர் வளைஇய உலகத்துஒருநீ யாகித் தோன்ற விழுமியபெறலரும் பரிசில் நல்கும் அதி பலவுடன் . . வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்துஆர முழுமுதல் உருட்டி வேரற்பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டுவிண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்ததண்கமழ் அலரிறால் சிதைய நன்பல” இனி பாடலின் பொருளைக் காணலாம். “மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி” என வரும். மணமும் […]

திருமுருகாற்றுப்படை : 18

(271 முதல் 289 வரை உள்ள வரிகள்) “அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்!மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப்பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந! குரிசில்!’ எனப்பலயானறி அளவையின் ஏத்தி ஆனாது நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடுபுரையுநர் இல்லாப் புலமை யோய்!’எனக் குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி,‘அளியன் றானே முதுவாய் இரவலன் வந்தோன்பெரும!நின் வண்புகழ் நயந்தெனஇனியவும் […]

திருமுருகாற்றுப்படை : 17

(261 முதல் 270 வரையான வரிகள்) “மாலை மார்ப நூலறி புலவிசெருவில் ஒருவ பொருவிறல் மள்ளஅந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலைமங்கையர் கணவ மைந்தர் ஏறேவேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்துவிண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவபலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறேஅரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகநசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள” “மாலை மார்ப” என்றால் மாலை அணிந்த மார்பை உடையவன் எனப் பொருள். முருகப்பெருமான் எப்போதும் வெற்றிமேல் வெற்றி பெறுபவன். அதனால் புத்தம் புது மாலைகளை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications