பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அபிராமி அந்தாதி : 65

“ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம்முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்மகனும்உண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே.” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள்தரும் “ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்முகனும் முந்நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்மகனும் உண்டாயதன்றோவல்லி நீசெய்த வல்லபமே” இந்த பாடலை புரிந்துகொள்ளும் முன் ஒரு திருவிளையாடலை காண வேண்டும் , அப்பொழுது இப்பாடல் எளிதாக புரியும் கந்தபுராணத்தின் தொடக்க நிகழ்வு […]

அபிராமி அந்தாதி 63

“தேறும்‌ படிசில ஏதுவும்‌ காட்டிமுன்‌ செல்கதிக்குக்‌கூறும்‌ பொருள்‌ குன்றிற்‌ கொட்டும்‌ தறிகுறிக் கும்‌சமயம்‌ஆறும்‌ தலைவி இவளாய்‌ இருப்பது அறிந்திருந்தும்‌வேறும்‌ சமயம்‌ உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே” இப்பாடலை புரிந்துகொள்ளுமுன் ஒரு பின்னணியினை நோக்க வேண்டும் இந்துஸ்தானத்தில் எக்காலமும் சமய சச்சரவுகள் உண்டு, என் மதம் பெரிது என சொல்லும் கூட்டமும் அவர்களால் சில சர்ச்சைகளும் அடிக்கடி ஏற்படுவதும் உண்டு எல்லா நதிகளும் கடலுக்கு செல்வது போல எல்லா மதங்களும் இறைவனை நோக்கி இழுத்து சென்றாலும் யார் பெரியவர் […]

அபிராமி அந்தாதி : 62

அபிராமி அந்தாதி : 62 “தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மதவெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன், மெய் அடையக்கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி கோகனகச்செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே” இந்த பாடலை புரிந்து கொள்ளுமுன் சிவபெருமான் செய்த முக்கிய வதங்களையும் அவற்றின் ஆலயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் இப்பாடல் எளிதாக பிரியும் சிவபெருமானின் திருவிளையாடல்களில் வீரம் காட்டிய அந்த சம்பவங்கள் வீராட்டானம் என அழைக்கபடும் சிவபெருமான் செய்த சம்ஹாரங்களில் முக்கியமானவை எட்டு, […]

நாச்சியார் திருமொழி : 27

நீரிலே நின்றயர்க் கின்றோம் நீதியல் லாதன செய்தாய்… தோழியுடன் நீராட சென்றாள் ஆண்டாள், இப்பொழுதெல்லாம் கண்ணன் வருவதில்லை, அவள் ஆடையினை திருடுகின்றான் எனும் பழியினை அவன் தவிர்த்துவிட்டான், ஆண்டாளுக்கு அவன் வருவதில்லை என்பது சோகம் என்றாலும் வெளிகாட்டவில்லை எப்பொழுதும் கண்ணன் நினைவாக இருந்தவள் நீராடும் பொழுதும் அவன் நினைவினிலே நீராடினாள், சுற்றி பார்த்து கொண்டே இருந்தாள், கண்ணன் வருவான் என கண்கள் பூக்க பார்த்து கொண்டிருந்தாள், கரையில் இருந்த ஆடைகள் காணமல் போகாதா? அவனை நோக்கி பாடி […]

அபிராமி அந்தாதி : 61

அபிராமி அந்தாதி : 61 “நாயே னையும்இங் ஒருபொருளாக நயந்துவந்துநீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்நின்னை உள்ளவண்ணம்பேயேன் அறியும் அறிவுதந் தாய்என்ன பேறுபெற்றேன்தாயே மலைமக ளேசெங்கண் மால்திருத் தங்கைச்சியே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும் “நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்துநீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய், நின்னை உள்ளவண்ணம்,பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்தாயே மலைமகளே செங்கண் மால் திரு தங்கச்சியே” அபிராமி பட்டர் மிக இழிவான மானிட‌ பிறவியான தனக்கும் அன்னை தேடி வந்து அருள்பாலிக்கும் […]

அபிராமி அந்தாதி : 60

அபிராமி அந்தாதி : 60 “பாலினும் சொல்இனி யாய்பனி மாமலர்ப் பாதம்வைக்கமாலினும் தேவர் வணங்கநின் றோன்கொன்றை வார்சடையின்மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம்ஒருநாலினும் சாலநன் றோஅடி யேன்முடை நாய்த்தலையே” இப்பாடல் கீழ்கண்டவாரு பிரிந்து பொருள் தரும் “பாலினும் சொல் இனியாய் பனி மா மலர்ப் பாதம் வைக்கமாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒருநாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே” பட்டர் அன்னையின் அன்பில் […]

நாச்சியார் திருமொழி : 26

அன்று ஒரு பொய்கையிலே நீராட விளைகின்றாள் ஆண்டாள், பொய்கை என்பதும் சுனை என்பதும் இயற்கையாக அமைந்தவை, குளம் என்பது செயற்கையாக அமைய பெற்றது அந்த பொய்கைக்கு தான் தன் தோழியரோடு நீராட செல்கின்றாள் ஆண்டாள், தாமரை மலர்கள் பூத்து குலுங்கும் தடாகம் அது வழக்கமாக கண்ணன் வருவதும் ஆடைகளை எடுத்து விளையாடுவதுமாக இருப்பதால் இம்முறை தோழி ஒருவரை ஆடைக்கு காவல் வைப்பது என முடிவாயிற்று ஆண்டாளுக்கு அதனில் மெல்லிய வருத்தம் இருந்தது, கண்ணன் வருவதும் ஆடைகளை மறையவைத்து […]

கந்தர் அனுபூதி : 02

“உல்லாச நிராகுல யோக இதச்சல்லாப விநோதனும் நீ அலையோஎல்லாம் அற என்னை இழந்த நலம்சொல்லாய் முருகா சுரபூ பதியே” உல்லாச என்றால் மங்காத உள்ளக் களிப்பும், நிராகுல என்றால் துன்பமற்ற நிலையும், யோக என்றால் யோகநிலை தருபவனும், இத என்றால் இதமான நன்மை பயப்பவனும், சல்லாபம் என்றால் பல விஷயங்களை தெரியவைத்து அடியாருடன் மகிந்து திருவிளையாடல் புரிபவனும் என பொருள் நீ அலையோ என்றால் நீயில்லையோ , நீதானே என்பது பொருள் முருகா சுரபூ பதியே என்றால் […]

அபிராமி அந்தாதி 58

அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்தருணாம்புயமுலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக்கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே இங்கு அம்புயம் என்றால் தாமரை எனும் பொருளை தெரிந்துகொண்டு மேற்கொண்டு காணலாம் இந்து ஞானமரபில் தாமரை முக்கியமானது, அது ஞானமலராக ஞானம் மலர்வதன் குறியீடாகவே கருதபட்டது, இந்துமதத்தின் எல்லா பிரதான தெய்வங்களையும் அம்மதம் தாமரை மலர்மேல்தான் நிறுத்திற்று, பிரம்மன் முதல் தேவி வரை அது தாமரையில் வைத்து மகிழ்ந்தது தாமரை என்பது ஞானத்தின் வெளிப்பாடாகவே இந்துமரபில் […]

அபிராமி அந்தாதி : 57

அபிராமி அந்தாதி : 57 “ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டம் எல்லாம்உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே” இந்த பாடல் பெரும் விஷயங்களை சொல்லும் பாடல் என்பதால் ஒவ்வொரு விஷயமாக பார்க்கலாம் “ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி” என தொடங்குகின்றார் பட்டர் இந்த “இருநாழி கொண்டு” […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications