பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அபிராமி அந்தாதி 55

அபிராமி அந்தாதி 55 “மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றதுஅன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அருமறைக்குமுன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னைஉன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது” கடந்த பாடலை சேர்மின் என முடித்த பட்டர் இப்பாடலை மின்னாயிரம் என தொடங்குகின்றார், இங்கு மின் என்பது மின்னலை குறிப்பது அன்னையின் தோற்றம் எப்படியானது என்பதை இங்கு முதல் வரியில் சொல்கின்றார் பட்டர் “மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது” என்கின்றார் அதாவது அன்னையின் தோற்றம் […]

அபிராமி அந்தாதி : 53

“சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்தகன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே” தன் முந்தையபாடலில் அன்னையின் அடியார்கள் அடுத்தபிறவியில் அரசர்களாக பிறப்பார்கள் என சொன்னார் அல்லவா, அப்படி சொல்லிவிட்டு அன்னையின் பக்தியில் மறுபடியும் மூழ்குகின்றார், அன்னையின் திருமேனியினை கண்முன் தியானிக்கின்றார், அப்படி தியானித்தவர் அன்னையின் பொலிவான தோற்றம் பற்றி மேற்கண்டபாடலை பாடுகின்றார் பாடலை கொஞ்சம் ஆழமாக காணலாம் அன்னையின் தோற்றத்தை அவளின் இடுப்பிலிருந்து காண்கின்றார் பட்டர் “சின்னஞ்சிறிய […]

திருவோணம்

ஓணம் பண்டிகை எனும் வாமண அவதார திருநாளை கொண்டாடும் நேரம் அந்த பண்டிகைக்கான காரணத்தையும் அது சொல்லும் நோக்குவதும் இந்துக்களின் பிரதான கடமை அது வழமையான தேவ அசுர சண்டையில் ஒரு புராணம் என்றாலும் அதன் தத்துவம் பெரிது, போதனை மிக பெரிது தேவர்கள் அசுரர்கள் என இருவருமே பரம்பொருளுக்கு மனிதர்களை போல கட்டுபட்டவர்கள் என்றாலும் அவர்களின் சக்தியும் ஆயுளும் அதிகம், பல சிறப்புக்களை பெற்ற மேலானவர்கள் இருவருமே உலக இயக்கத்துக்காக படைக்கபட்டவர்கள், இருவருக்குமே பொறுப்புக்கள் உண்டு […]

அபிராமி அந்தாதி 48

“சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிபடரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோகுடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே” பட்டர் தன் முதல் வரியில் “சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில்” என பாடி தொடங்குகின்றார் அதாவது “ஒளிவிடும் (சுடரும்) கலைமதி (பிறை நிலா) ஒட்டி நிற்கும் (ஒன்றும்) சடைமுடி குன்று மே;ல்” என சொல்கின்றார், மலையின் மேல் நிலா இருப்பதையும், மலையின் உச்சியில் இருந்து அருவிகள் நீண்டு விழுவதையும் […]

கிருஷ்ணார்பணம் – கோகுலாஷ்டமி

இந்த பூமி பிரபஞ்சத்தின் கட்டுபாட்டில் இயங்குவது, பூமியினை அந்த பிரபஞ்சம் இயக்குகின்றது, இந்த பிரபஞ்சம் பூமியின் எல்லா குரலுக்கும் செவி சாய்க்கின்றது அன்று அந்த காலம் திரும்பும் இடமெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடி கொண்டிருந்தது, தர்மம் நாராய் கிழிந்து கிடந்தது, பாம்பினை கண்ட பறவை குஞ்சாய் ஒடுங்கி கிடந்தது. நதி, மண், ஆகாயம் என திரும்பும் இடமெல்லாம் அக்கிரம கூட்டம் மிதமிஞ்சி ஆடியது கம்சன் நரகாசுரனில் தொடங்கி துரியோதன கூட்டம் வரை ஆடி தீர்த்தார்கள். பெற்ற வரத்தை அதர்மத்தின் […]

ராமகிருஷ்ண பரம ஹம்சர்

அவர் பெயர் கதாதர், வங்கத்துக்காரர் சிலை செய்வதும், ஓவியமும் அவருக்கு பிடித்தமான விஷயங்கள் ஆனால் குடும்ப வறுமை அவரை வேறுவழியில் இழுத்து சென்றது. கலைமனம் கொண்டவன் வாழ்வில் வறுமை விளையாடுவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌ அந்த ககாதரின் அண்ணன் ஒரு புரோகிதர், அதனால் அவரும் வழிபாடுகளிலும் பூஜை யாகங்களிலும் ஈடுபட்டார், மெல்ல மெல்ல ஆன்மீகத்தில் மூழ்கிய அவருக்கு பல சிந்தனைகள் எழுந்தன‌ கடவுள் என்பது சிலையா, இல்லை வானலோகத்தில் இருப்பவரா? எல்லாம் அறிந்த தெய்வம் கல்லில் இருக்குமா? இதற்கு […]

அபிராமி அந்தாதி 46

“வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டுகறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னேமறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே” இந்த பாடலை “வெறுக்கும் தகைமைகள் செய்தினும்” என தொடங்குகின்றார் பட்டர் வெறுக்கும் தகமைகள் என்பது சான்றோரும் அறிஞரும் நல்லோரும் பிறரும் வெறுக்கும் குணங்கள் அல்லது செயல்களை குறிப்பது அப்படிபட்ட செயல்களை பொறுப்பவர்களை, அப்படி செய்பவர்கள் மேல் வெறுப்பு கொள்ளாமல் பெருந்தன்மையாக கடந்து அணைப்போர் மேலோர் என்பது இந்துக்கள் கருத்து […]

அபிராமி அந்தாதி : 45

அபிராமி அந்தாதி : 45 “தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையேபண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோமிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே” ‍பட்டர் தொடர்ந்து பாடுகின்றார் முதல் வரியினை “தொண்டு செய்யாது தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது” என தொடங்குகின்றார் பட்டர் பல விஷயங்களை கவனிக்கின்றார், பெரும் ஞான சித்தி அடைந்தவர்கள் ஆகம விதிபடி மாலை தொடுப்பதில்லை பூஜை பொருளுடன் […]

ஆடி பூரம்

இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகையும் அதன் கொண்டாட்டமும் மானிட வாழ்வின் ஒவ்வொரு பக்கத்தையினையும் உணர செய்பவை, அர்த்தமில்லா பண்டிகைகள் என்றோ வெட்டி செலவு பண்டிகைகள் என்றோ அங்கு எதுவுமில்லை ஒவ்வொரு கொண்டாட்டமும் அவர்களுக்கு அவ்வளவு ஞானமானது , வானியல் பிரபஞ்ச கோள்களுடனும் அன்றைய நாளில் ஓங்கியிருக்கும் சக்தியுடனும் மிக நுணுக்கமாக பின்னபட்ட ஞானமதம் அது அதனில் ஒன்றுதான் இந்த ஆடிபூரம், ஆடிமாத பூர நட்சத்திரம் ஆடிபூரம் என்றாயிற்று பூர நட்சத்திரம் ஜாதகரீதியாக சிம்மராசிக்குரியது, அந்த நட்சத்திரம் சக்திதேவிக்கு உகந்தது […]

அபிராமி அந்தாதி : 43

அபிராமி அந்தாதி : 43 “பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கைஎரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே” முதல்வரி”பரிபுர சீறடி” என என்றாகின்றது, பரிபுரம் என்றால் சிலம்பு, பரிபுரம், ஞெகிழி, ஞெகிழம், அரதனம், நூபுரம் என பல பொருள் உண்டு எனினும் இவை எல்லாம் சிலம்பு எனும் கொலுசை குறிப்பதே அன்னை கால்களில் சிலம்பை அணிந்திருக்கின்றாள் என்பதை “பரிபுர சீறடி” என்கின்றார் பட்டர், இங்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications