பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலகெல்லாம் அன்னையர் தினம்

உலகெல்லாம் அன்னையர் தினம் கொண்டாடுகின்றார்களாம், அதனை கண்டுவிட்டு தமிழர்களும் முகநூலில் மிக தீவிரமாக எம்ஜிஆர் ஸ்டைலில் அம்மா அம்மா என உருகிகொண்டிருந்தார்கள். தாய்க்கு பாரதமும், தமிழனும் கொடுத்த உயர்வான இடத்தை விட யார் கொடுத்துவிட முடியும்? நிலம், ஆறு என சகலத்திற்கும் பெண் பெயர் இட்டு மகிழ்ந்த சமூகம் இது, தாயினை அது பெரும் இடத்தில் வைத்திருந்தது. இந்திய சமூக அமைப்பும், தாய்க்கு கொடுத்த இடம் அலாதியானது, ராமாயணமும், மகாபாரதமும் அதனைத்தான் சொல்கின்றன. ராமனும், பாண்டவர்களும் அப்படி […]

தன் அணுஆயுத உற்பத்தி நிலையத்தை தகர்க்க முன்வந்திருக்கின்றது வடகொரியா

உலகில் எல்லோரையும் வரவழைத்து அவர்கள் கண் முன்னால் தன் அணுஆயுத உற்பத்தி நிலையத்தை தகர்க்க முன்வந்திருக்கின்றது வடகொரியா எந்த நாடும் இப்படி பணிந்ததில்லை மீதமிருக்கும் அணுகுண்டுகள், செறிவூட்டபட்ட யூரேனியத்தை என்ன செய்ய போகின்றார் என்ற தகவல் இல்லை எனினும் வடகொரியா அணுஆயுதத்தை விட்டுவிட்டது புரிகின்றது அப்படி என்ன சொல்லி பயமுறுத்தினார்கள் என்பதுதான் இன்று உலகத்தார் தலையினை பிய்த்துகொண்டிருக்கும் கேள்வி அணுகுண்டை விட மகா ஆபத்தான ஏதோ ஒரு தொழில்நுட்பத்தை காட்டி மிரட்டியிருக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது அது […]

மகாதீர் மலேசியாவின் பெரும் அடையாளம், மிகசிறந்த நிர்வாகி, கூர்மதி படைத்தவர்

ஒரு நாட்டின் தலையெழுத்து நன்றாய் இருந்தால் நல்ல தலைவர்கள் உருவாகி வந்து தாங்குவார்கள், நாட்டிற்கும் தலைவிதி இருக்கின்றது அபடி மலேசிய பிரதமராக பொறுப்பேற்றுகொண்டார் மகாதீர் அவர்கள், உலகின் மிக மூத்த பிரதமர் அவர்தான் டிரம்ப் முதல் மோடிவரை வாழ்த்துகின்றார்கள், நாமும் வாழ்த்துவோம் நிச்சயம் மகாதீர் மலேசியாவின் பெரும் அடையாளம், மிகசிறந்த நிர்வாகி, கூர்மதி படைத்தவர் மலேசியா வெள்ளையன் காலத்திலே சொர்க்கமாக திகழ்ந்தது சந்தேகமில்லை. செட்டியார்களும் இன்னும் பலரும் பெரும் செல்வாக்குடன் சம்பாதித்தனர் அப்படிபட்ட மலேசியாவில் மலாய் மக்களின் […]

ஈரான் தான் பொறுமையின் எல்லைக்கு வந்துவிட்டது

அமெரிக்கா தன் ஈரானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதை தொடர்ந்து பல விஷயங்கள் வெடிக்கின்றன‌ இதுவரை இஸ்ரேலை நேரடியாக தாக்காத ஈரானிய ஏவுகனைகள் இன்று இஸ்ரேல் சிரிய எல்லையினை தாக்கி இருக்கின்றன‌ அதாகபட்டது நமது தலைகாவேரி குடகு பகுதி பொன்றது சிரியாவின் கோலன் குன்றுகள், இஸ்ரேலின் நீர் ஆதாரமான ஜோர்டான் ஆறு அங்கிருந்துதான் வருகின்றது நிச்சயம் பின்னொருநாளில் சிரியா அதனை முடக்கும் என நீனைத்த இஸ்ரேல் அந்த மோஷே தயான் காலத்திலே அதை ஆக்கிரமித்துகொண்டது அது சிரிய பகுதி […]

மலேசியாவின் பெரியவர் மகாதிர் முகதுதான் இன்று உலகில் ஹாட் டாபிக்

காண்பதற்கு அச்சு அசல் பிரனாயி விஜயன் போல இருக்கும் மலேசியாவின் பெரியவர் மகாதிர் முகதுதான் இன்று உலகில் ஹாட் டாபிக் மகாதிரின் முன்னோர்கள் கேரளாவினை சேர்ந்தவர்கள் என்பார்கள், தமிழக அரசியலில் கலைஞர் போல மலேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி மகாதிர் 22 ஆண்டுகள் மலேசியாவினை ஆண்டார். அவர் ஆட்சியில்தான் மலேசியாவின் முகம் மாறிற்று. நவீன அடையாளங்கள் அவராலே அந்த தேசம் பெற்றது 1998ல் கிழக்காசிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மலேசியாவினை காப்பாற்றியவர் என்ற பெருமை அவருக்கு என்றும் […]

ஆட்சியினை தவற விட்டிருக்கும் நஜிப் துன் ரசாக்

  ஆட்சியினை தவற விட்டிருக்கும் நஜிப் துன் ரசாக்கின் தந்தை துன் ரசாக் முன்னாள் மலேசிய பிரதமர்,  மலேசிய வரலாற்றில் குறிப்பிடதக்க பிரதமர் முக ஸ்டாலினின் தந்தை தமிழகத்தையே புரட்டி போட்டவர் இன்று இருவருமே தந்தை இல்லா பிள்ளைகள், தந்தை இல்லா காலத்தில் எதிரிகள் இருவரையும் போட்டு அடிப்பது கொஞ்சமல்ல‌ மறுபடியும் இருவரும் சந்தித்து ஆறுதல் தேட வாய்பிருகின்றது, இருவரின் சோகமும் ஒன்றே (படம் முன்பு இருவரும் சந்தித்த பொழுது) மகாதீருக்கு வைகோ வாழ்த்து இப்படி சொன்னா […]

டிரம்பினை இஸ்ரேல் முட்டாளாக்குகிறதாம்…

கலககாரனை அருகில் வைக்காதே, அவன் உன்னை எங்காவது சண்டைக்கு இழுத்துவிடுவான் என்பது ஒரு பழமொழி இது இந்த டிரம்ப் என்பவருக்கு தெரியவே இல்லை, மிக மோசமான காரியம் ஒன்றை இஸ்ரேல் எனும் கலகக்காரன் தூண்டிவிட இவர் செய்துவிட்டார் ஈரானின் அணுசக்தி ஒப்பந்த்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார், இது பல நெருக்கடிகளை அரேபியாவில் கொண்டுவரும் ஈரானின் அணுசக்தி கண்காணிப்பு உரியது என்றும், அதற்கு ஈரான் ஒத்துழைக்கும்பட்சத்தில் அதன் மேல் பொருளாதார தடை நீக்கபடும் என ஒபாமா முன்பு பிரிட்டன், பிரான்ஸ், […]

மலேசியாவில் மே 9 2018 பொதுதேர்தல்

மலேசியாவில் நாளை பொதுதேர்தல், இதனால் பொதுவிடுமுறை அறிவித்தாகிவிட்டது நம்மை விட 10 வருடம் கழித்து சுதந்திரம் வாங்கினார்கள், 14ம் பொதுதேர்தல் வருகின்றது ஆளும் கூட்டணிதான் கடந்த 60 வருடமாக இங்கு ஆட்சியில் இருக்கின்றது, அது இன்னும் தொடரலாம் சீரான வளர்ச்சி, ஏழை பணக்காரன் இடைவெளி பெரிதாக இன்மை, எல்லோரும் எல்லா வசதிகளையும் அனுபவித்து வாழ வசதி என பல விஷயங்கள் இருப்பதால் பெரும் அதிருப்தி என ஒன்றுமில்லை அரசு அதன் கடமையினை சரிவர செய்வதால் மக்களுக்கு பெரும் […]

உலக செஞ்சிலுவை & செம்பிறை நாள்

  அப்பொழுது ஆஸ்திரியா ஹங்கேரி என்றொரு வல்லரசு இருந்தது. அதற்கும் ஜெர்மனுக்கும் உறவும் இருந்தது. அவர்களும் உலகாள ஆசைபட்டனர் இதில் ஆட்டோமன் சாம்ராஜ்யமும் சேர்ந்து கொண்டது அதனை ஒழித்துகட்ட பிரிட்டன் தொடங்கியதே முதலாம் உலகப்போர், அது ஐரோப்பாவில் பெரும் அழிவினை கொடுத்தது, காயம்பட்டோரை கூட மீட்க முடியவில்லை அப்பொழுது ஈஸ்டர் பண்டிகை வந்ததால் 3 நாள் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என முடிவு செய்தார்கள், அப்பொழுது ஹென்றி டியூனண்ட் என்பவர் சிகப்பு சிலுவை கொடியுடன் சாமாதான அடையாளம் […]

ஆப்கனில் 7 இந்தியர்கள் கடத்தப்பட்டனர்..

ஆப்கனால் 1970 வரைக்கும் சிக்கல் இல்லை, சோவியத் ரஷ்யா அங்கு கால்பதித்தபின் இந்தியாவிற்கும் சோவியத்திற்கும் இடையில் பாகிஸ்தான் என்றொரு தேசம் கிடுக்குபிடியில் மாட்டியது பின் அமெரிக்க விளையாட்டு இன்னபிற சிக்கல்களால் ரஷ்யா வெளியேறியது அதன் பின் பாகிஸ்தானை இன்னொரு பக்கம் இருந்து அடிக்கும் வாய்ப்பினை இந்தியா இழந்தது, பாகிஸ்தானும் தாலிபன் போன்றோரை வளர்த்து அங்கு தன் பிடியினை இறுக்கிற்று இப்பொழுது தாலிபன்களின் வீழ்ச்சிக்கு பின் இந்தியாவும் அங்கு பல விஷயங்களை செய்கின்றது ஆப்கனின் தேவை இந்தியாவிற்கு பல […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications