பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிரியா போரினை உற்று கவனியுங்கள். அந்த அழிவுகளை பாருங்கள்

சிரியா போரினை உற்று கவனியுங்கள். அந்த அழிவுகளை பாருங்கள் காஷ்மீரில் ஏன் இந்தியா மூன்றாம் நாட்டு தலையீட்டை ஏற்கவிலை என்பதும், பாகிஸ்தான் ஏன் அப்படி வேண்டும் என அடம்பிடிப்பதும் புரியும் மூன்றாம் நாட்டை அனுமதித்தால், நான்காம் நாடு ரகசியமாக வரும், பின் கூடவே ஆயுதமும் வரும். பின் என்ன மாபெரும் அழிவுதான் காஷ்மீரில் அந்த அழிவினை கூடுமானவரை தவிர்த்தே இந்தியா தக்கவைத்து வருகின்றது, இதனால் இந்திய ராணுவம் சந்திக்கும் இழப்பும் அதிகம் எப்படியாவது மூன்றாம் நாடு அதில் […]

சிரியாவில் இவ்வளவு சாவு நடக்கின்றதே, ஐ.நா என்ன கிழித்தது?

சிரியாவில் இவ்வளவு சாவு நடக்கின்றதே, ஏன் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை, ஐ.நா என்ன கிழித்தது என ஆளாளுக்கு கேட்கின்றார்கள் ஐ.நா என்று கிழித்தது? அது அமெரிக்க அடிமை உலகில் பல நாடுகள் உள்நாட்டு சண்டையால் அழிகின்றன, சில இனங்கள் கேட்பாரற்று நசுக்கபடுகின்றன‌ இலங்கையில் அது தொடங்கியபொழுது கேட்பார் யாருமில்லை, 1983ல் கொழும்பு பற்றி எரிந்தபொழுது எந்த நாடு கண்டித்தது? ஒரு நாடுமில்லை இந்தியாதான் களமிறங்கி அந்த கலவரத்தை நிறுத்திற்று , அன்றைய அமைச்சர் நரசிம்மராவ் நேரடியாக சென்று எச்சரித்தார் […]

சிரியாவினை மட்டும் முன்னிறுத்துவது ஏன்?

ஏதோ சிரியாவில் புதிதாக குழந்தைபலி நடப்பது போல பலர் பொங்குகின்றார்கள், கடந்த 7 வருடமாக நடக்கும் சோகம் அதுவும் சமீப 3 ஆண்டுகள் மகா மோசம் அங்கு அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் அவர்கள் மனம் மாற வேண்டும். அந்நிய நாட்டு தூண்டுதலினால் நாசமாய் போனோம் என்ற எண்ணம் அங்கிருக்கும் போராளிகள் மனதில் உண்டாகமல் சாத்தியமில்லை சிக்கல் அவர்கள் அரசை எதிர்த்து ஆயுதம் தூக்கியதில் தொடங்கியது, ஆட்சி மாற்றம் வேண்டுமாம். உடனே அவர்களுக்கு அமெரிக்க ஆயுதங்கள் தடையின்றி […]

சிரியாவில் மாபெரும் மனித பேரழிவு நடக்கின்றது

சிரியாவில் மாபெரும் மனித பேரழிவு நடக்கின்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாட்டில் பலமான அரசு அமையாவிடால் இதுதான் நடக்கும் சிரியா பழம்பெருமை மிக்க நாடு, போர்கள் அதன் அன்றாட நிகழ்வு , தாவீது மன்னனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே அது ரத்தபூமி, அலெக்ஸாண்டர் காலம் முதல் அதன் அழிவு அதிகம், ரோமானியர் காலமும் அப்படியே சிரியா அமைதியான காலமெது என்றால் புனிதமான கலீபாக்கள் ஆட்சியும், அதனை தொடர்ந்த மாமன்னன் சலாவுதீன் ஆட்சியில் மட்டுமே […]

பாகிஸ்தானின் தேசிய மொழியில் ஒன்றாக்கிவிட்டது சீன மொழி …

உலக தாய்மொழி தினத்தை ஒவ்வொரு நாடும் உற்சாகமாக கொண்டாட, பாகிஸ்தான் மகா சோகத்தில் அனுசரித்திருக்கின்றது யாருக்கும் ஏற்பட கூடா அவமானம் பாகிஸ்தானுக்கு நடந்துவிட்டது, பாகிஸ்தான் சீனாவின் கூட்டாளி என முதலில் சொன்னது, பின் அடிமை ஆனது , இன்று கொத்தடிமை ஆகிவிட்டது அதாகபட்டது பாகிஸ்தானின் தேசிய மொழிகளில் ஒன்றாக சீனாவின் மாண்டரின் மொழி அறிவிக்கபட்டாயிற்று. மாண்டரினுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்? எத்தனை லட்சம் சீன மக்கள் வசிக்கின்றார்கள்? அவர்கள் என்ன பூர்வ குடிகளா? என்றால் இல்லை, பின்னர் ஏன்? […]

இன்று உலக தாய்மொழி தினம்

இன்று உலக தாய்மொழி தினமாம், அதனால் என்னரும் தாயே தமிழே என பலர் கலைஞர் பாணியிலும், எடுடா கொலை வாளை என பாரதிதாசன் பாணியிலும் பலர் முழங்கிகொண்டிருக்கின்றனர் தாய்மொழி என்பது ஒவ்வொருவருக்கும் தாயினை விட முக்கியமானது, மொழியே ஒருவனுக்கு சகலமும், மொழி வழியே அவன் உலகை அறிகின்றான், புரிகின்றான் தன் நிலை பகிர்கின்றான் தாய்மொழி ஒருவனுக்கு உயிர் சந்தேகமில்லை, ஆனால் மற்ற மொழிகளை படிப்பது ஒன்றும் தவறல்ல. தமிழகத்தில் என்ன நடந்ததென்றால் இந்தி வலுகட்டாயமாக ஆட்சி மொழி […]

சீன புத்தாண்டு 2018 கொண்டாட்டங்கள்

https://youtu.be/Qh1k-mRWIDs  சீன புதுவருடமாம், சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டுமாம். சில பிரத்யோக சீட்டுகளை வாங்கி எரிக்கின்றார்கள், அப்படி எரித்தால் அந்த பணம் வானலோகம் சென்று உரியவர்களுக்கு அடையுமாம் கீழ்வீட்டிலிருந்து சீனர் கிளப்பும் புகை மட்டும் மேலே வருகின்றது, மனிதர் அவர்கள் சமூக கணக்கில் பல கோடிகளை எரித்து ஆனந்த கண்ணீர் சிந்துகின்றார் மூட நம்பிக்கை என்பது உலகின் எல்லா இனங்களிலும் இருக்கின்றது. இதற்கு பதில் அந்த சீட்டு வாங்கும் பணத்தை அப்படியே மேலே நேரடியாக சொர்க்கம் […]

“கோங் சீ பா சாய்” : சீன புத்தாண்டு வாழ்த்துக்கள்

எல்லா நாகரீக இனங்களுக்கும் நாட்காட்டி உண்டு, நாடிகாட்டி இருந்தால் நிச்சயம் ஆண்டு கணக்கு உண்டு, அதில் புத்தாண்டு கொண்டாட்டம் தவிர்க்கமுடியாதது. அதில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு என்றே ஒரு இனம் வாழுமானால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது சீன இனம், அவர்கள் கலாச்சாரம் அப்படி, என்றைக்கு நாள்காட்டி என ஒன்றை கண்டார்களோ அன்றுமுதல் இன்றுவரை அப்படித்தான், புத்தருக்கு முந்தைய காலமுதல் இன்றைய பொதுவுடமை குடியரசு சீனா வரை மாறாத கொண்டாட்டம் அது. 12 விலங்குகளின் பெயரில் சுழற்சிமுறையில் வரும் […]

அமெரிக்காவில் மறுபடியும் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி…

அமெரிக்காவில் மறுபடியும் துப்பாக்கி சூடு நடந்திருக்கின்றது, இம்முறை 17 பேர் கொல்லபட்டிருக்கின்றார்கள் இது தீவிரவாத தாக்குதலோ, ரவுடி கும்பல் மோதலோ இல்லை காவலர்கள் நடத்திய தடுப்பு தாக்குதலோ அல்ல , மனம் வெறுத்த மனநோயாளிகள் செய்யும் காரியம் நமது ஊரில் கோபம் வந்தால் சிலர் பேசாமல் இருப்பார்கள், சிலர் சீமான் அளவு கத்திவிட்டு அமைதி ஆவார்கள், சிலர் தமிழிசை போல புலம்பிகொண்டிருப்பார்கள் இங்குள்ள மனநிலையும், வாழ்க்கை முறையும் வேறு அமெரிக்கா அப்படி அல்ல, தனிமனித சுதந்திரம் மிக்க […]

இது கனடா நாட்டு அமைச்சரவை, பின் ஏன் கனடா செழிக்காது

மருத்துவ அமைச்சர் ஒரு மருத்துவர் போக்குவரத்து துறை அமைச்சர் ஒரு விண்வெளி வீரர் பாதுகாப்பு துறை அமைச்சர் முன்னாள் ராணுவ தளபதி இளைஞர் துறை அமைச்சர் வயது 45க்குள் விவசாய துறை அமைச்சர் ஒரு விவசாயி நிதி அமைச்சர் ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபர் அறிவியல் மற்றும் பொருளாதார அமைச்சர் ஒரு பொருளாதார ஆய்வாளர் சட்ட அமைச்சர் ஒரு நீதிபதி விளையாட்டு துறை அமைச்சர் ஒலிம்பிக் வீரர் பன்மொழி தெரிந்தவர் குடியுரிமை அமைச்சின் பொறுப்பாளர் 50% பெண்கள் கொண்ட […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications