பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அமெரிக்கர்கள் சுதந்திரமானவர்கள்

அமெரிக்கர்கள் சுதந்திரமானவர்கள், அடிக்கடி தமாஷ் செய்வார்கள், உடனே மற்றவர்களும் கூட சேர்ந்து பெரும் காமெடி செய்வார்கள் அப்படி டெக்சாஸ்லில் உள்ள மொலோசியா கிராமத்தில் 13 பேர் தாங்கள் தனிநாடு உருவாக்கிவிட்டதாக சொல்லி தமாஷ் செய்தார்கள், சும்மா அல்ல இது 40ம் ஆண்டு சுதந்திர விழா என சொல்லிகொண்டார்கள் மற்ற மக்களும் வாழ்த்தினார்கள், இவர்களோ இது எங்கள் கொடி இது எங்கள் அரசு, இது எங்கள் மக்கள் என சொல்லிகொண்டே இருந்தார்கள் அந்த 13 பேர்தான் அமைச்சர்கள், அதிபர்கள் […]

இதோ யுத்தம் வெடிக்கின்றது

இதோ யுத்தம் வெடிக்கின்றது, சீனா ஆயுதம் பலம் என்ன? நம் ஆயுத பலம் என்ன? என்றெல்லாம் பலர் பட்டியல் போட்டுகொண்டிருகின்றனர். ஆயுதம் எவ்வளவு என்பதை விட மகா முக்கியமான விஷயம் , யுத்தம் நடத்தும் அளவிற்கு இருவரிடம் பணம் இருக்கின்றதா என்பது யுத்தம் என்பது அவ்வளவு செலவுகளை விழுங்கும் விஷயம், ஒன்றுமே இல்லாத இரு நாடுகள் மோதும், அல்லது செல்ல செழிப்பான இரு நாடுகள் மோதும், இதுதான் இன்றைய யதார்த்தம் இந்தியா வளரும் நாடு, சீனாவும் அதே […]

இஸ்ரேலில் நமது பிரதமர்….

இஸ்ரேலிய புண்ணிய ஸ்தலங்களை சுற்றி பார்க்கின்றார் மோடி (வி.கே ராமசாமி பாணியில் வாசிக்கவும்) “ஏம்பா..அந்த இயேசுநாதர இங்கதான் அடக்கம் பண்ணீங்களா, அந்த‌ கல்லறைய ஒழுங்கா மூடப்புடாது? அரைகுறையா மூடியிருக்காங்க உங்க ஆளுங்க‌   அந்த ஆள் திரும்ப வந்து உங்களுக்கும் பிரச்சினை, எங்களுக்கும் பிரச்சினை இதுக்குத்தான் எங்க ஊருல எல்லாம் ஒருத்தன கொன்னவுடனே எரிச்சிருவோம், இனியாவது எவனையும் கொன்னா எங்க பாணில எரிச்சிருங்க, எங்க முன்னோர்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்ல” “யூத பெண்கள் எல்லாம் பேரழகிகள் என்றார்கள், […]

மோடியினை இஸ்ரேல் வரவேற்று கொண்டிருக்கின்றது

ஊரை விட்டு ஒருவனை நாட்டாமை பட பாணியில் ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள், அவனோடு யாரும் பேசுவதுமில்லை, உறவாடுவதுமில்லை “கொலைகாரப்பயலோடு என்ன உறவு, இவன் சவகாசமே ஆகாது” என சொல்லிவிட்டு பார்த்த இடத்தில் சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள் அப்படி விலக்கி வைக்கபட்டிருக்கும் ஒருவன் வீட்டுக்கு வழிபயணி ஒருவன் “ஹாய் கவ் ஆர் யூ, மே ஐ கம் இன்” என ஒருவன் வந்தால் அவனுக்கு எப்படி இருக்கும்? என்னையும் மதித்து என் வீட்டிற்கு வந்தீர்களா? என ஆனந்த கண்ணீர் விட மாட்டானா? […]

ஜூலை 4 : அமெரிக்க சுதந்திர தினம்

இன்றைய உலகின் நம்பர் 1 வல்லரசு நிச்சயம் அமெரிக்கா, அதில் எவ்வித சந்தேகமும் இல்லை, மிக பெரும் வல்லரசாக அது தன் கொடியினை உயர பறக்கவிட்டு கொண்டே இருக்கின்றது, அதன் செங்கோல் உலகை ஆளத்தான் செய்கின்றது நாளை அவர்களின் சுதந்திர நாள், இன்றே கொண்டாட்டம் தொடங்கியாயிற்று செவ்விந்தியர், மாயர், இன்கா என பல பழங்குடிகள் வாழ்ந்திருந்தாலும், வைகிங் போன்ற நாடோடிகள் வசித்திருந்தாலும் அதன் நவீன வரலாறு கொலம்பஸும், அமெரிக்கோ வெஸ்புகியும் கால் வைத்த காலங்களுக்கு பின் தொடங்கின‌ […]

எல்லையில் அழிச்சாட்டியம் செய்கின்றது

எல்லையில் அழிச்சாட்டியம் செய்கின்றது சீனா, இந்து யாதீர்கர்களை தடுத்தது அடுத்து சிக்கிமில் ஆக்கிரமிப்பு, நாலந்துலா கணவாயினை மூடுதல் என அதன் அட்டகாசம் அதிகரித்துவிட்டது மத்திய அரசு அதனைபற்றி மூச்சுவிட மறுக்கின்றது, ஒரு கண்டனமோ இல்லை எச்சரிக்கையோ கொஞ்சமும் இல்லை தேச பக்தர்கள் எல்லாம் இதுபற்றி பேசமாட்டார்கள், அவர்கள் பற்று எல்லாம் பசுமாடு, அதனை வைத்து யாரையாவது போட்டு அடிப்பது, இதன் பெயர்தான் தேசபக்தி மற்றபடி இத்தேசத்திற்கு எதிரான சக்திகளை எல்லாம் மறந்துவிட்டார்கள், பசுமாடே இப்பொழுது பிராதனம் இந்நாட்டில் […]

உன்ன பார்க்கும்பொழுதே பொறாமையா இருக்குய்யா

“என்னை பாருய்யா.. ரஷ்யா உளவுதுறையோடு தேர்தலில் வென்றேன் என விசாரணை கமிஷன், கேள்விகளில் பிய்த்தெடுக்கின்றார்கள், பதவியே போய்விடும் போல‌ தினமும் ஆயிரம் அவமானம், பிரச்சினை. அந்த ரஜினிகிட்ட இமயமலை எங்கிருக்குண்ணு கேட்டு சொல்லுய்யா, தலைமறைவா போயிரலாம்ணு இருக்கேன் உன் மேலும்தான் ஏராள சர்ச்சைகள் கலவர வழக்கு, ஒரு பயல் உன்னை உன் நாட்டில் விசாரித்திருப்பானா? இந்திய சட்டம் உன்னை ஒரு கேள்வி கேட்க முடியுமா? இருந்தா உன் நாட்டில் பிரதம்ராக இருக்கணும்யா,என்ன செய்தாலும், ஒரு கேள்வி கிடையாது, […]

இந்துமக்களுக்கான புனித யாத்திரைக்கான அனுமதியினை சீனா ரத்து : செய்தி

இந்துமக்களுக்கான புனித யாத்திரைக்கான அனுமதியினை சீனா ரத்து : செய்தி அதாவது கைலாச மலை உடபட இன்னும் பல புனித ஸ்தலங்கள் திபெத்தில் உண்டு, சீனா திபெத்தினை விழுங்கிய பின் அந்த இடங்களுக்கு இந்தியர்கள் விசா பெற்றுதான் செல்ல வேண்டும் சீனா இனி இந்துக்கள் வர கூடாது என சொல்கின்றது, இதற்கு மேலும் கேட்டால் எங்கள் பூமியான அருணாசல் பிரதேசத்தில் இந்தியர்கள் வசிக்க விசாவா கொடுத்தோம்? அவ்வ்வளவில் நாங்கள் நல்லவர்கள் என்பார்கள் எவ்வளவு பெரும் கொடுமை இது? […]

டயானா தேவசேனைதான்.. ஆனால் ராணி எலிசபெத் சிவகாமி தேவி

இங்கிலாந்து இளவரசி டயானவினை நாங்கள் தான் கொன்றோம், நாட்டுக்காகவும் அரச குடும்பத்திற்காகவும் கொன்றோம் ; பிரிட்டன் உளவுதுறை தலைவர் டயானா இறந்து கிட்டதட்ட 20 வருடம் ஆகின்றது, உலக மக்களிடம் பெரும் அபிமானம் பெற்றிருந்த டயானா, இங்கிலாந்து மக்களாலும் நிரம்ப நேசிக்கபட்டார் அவரது விபத்து ஆரம்பம் முதலே சர்ச்சை, இப்பொழுது உளவுதுறை தலைவரே அரச குடும்பத்திற்காக கொன்றதாக‌ ஒப்புகொண்டிருக்கின்றார், ஆக டயானா கொல்லபட்டிருக்கின்றார் எவ்வளவு பெரும் அபிமானம் பெற்றவர் டயானா? ஆனால் எங்காவது இந்த விஷயம் சர்ச்சை […]

சவுதி அரசருக்கு ஞானம் வந்திருக்கின்றது

வாரிசு அறிவிக்காமல் திரண்ட அதிகாரத்தின் , செல்வத்தின் அதிபதிகள் கண்ணை மூடுவதால் என்னென்ன விளைவு ஏற்படும் என்பதை அதிமுக உலகிற்கு சொல்லிகொண்டிருக்கின்றது இதில் யாருக்கு ஞானம் வந்ததோ இல்லையோ சவுதி அரசருக்கு வந்திருக்கின்றது, தான் வாரிசு யார் என இப்பொழுதே அறிவித்துவிட்டார் இனி புதியவர்தான் “செயல் அரசர்”. வடகொரிய அதிபரை போல இந்த சவுதி செயல் அரசருக்கும் 30+ வயது, அதற்கேற்றபடி செயல்பாடும் இருக்கின்றது ஏமனில் யுத்தம் நடத்துவது , கத்தாரை முறைப்பது என பல காரியங்களை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications