பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சட்டவிரோத பண பரிவர்த்தனை

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகனுக்கு 7 ஆண்டு சிறை மற்றும், ஒரு கோடி அபராதம். கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை. ஆக அதிமுக பக்கமும் ஒரு பாயின்ட் கிடைத்தாயிற்று, நிச்சயம் அவர்கள் பேசமாட்டார்கள் காரணம் ஜெயா வழக்கு முடிவு உலகறிந்தது அதனால் என்ன செய்வார்கள்? அதோ வந்துகொண்டிருக்கின்றார் அக்கா தமிழிசை, கூடவே எச். ராசாவும் அலெக்ஸாண்டரின் குதிரை வேகத்தில் வருகின்றார்

மாபெரும் ரபேல் ஊழல்

இந்த அரசு வந்ததில் இருந்தே அம்பானிக்கு ஆதரவான சார்பினை எடுப்பது உலகம் அறிந்தது, அம்பானியின் ஜியோ இன்று எதிரிகளை ஒழித்து தனிபெரும் சக்தியாக உருவெடுத்திருப்பது அதற்கு ஒரு சான்று இன்னும் ஏராளமான சான்றுகள் உண்டு, ஆனால் மகா முக்கியமான பாதுகாப்பு விஷயத்திலும் அம்பானியினை நுழைத்திருக்கின்றார்கள் என்பதுதான் ஏற்றுகொள்ள முடியா விஷயம் இந்த மோடி வந்த உடன் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தார், நல்ல திட்டம்தான். ஆனால் அப்படி யார் வந்து இங்கு எதை உருவாக்கினார்கள் […]

சென்னை ஜார்ஜ் கோட்டை

சென்னை கோட்டையினை வெள்ளையர் கட்டி பியாபாரம் செய்து, பின் ஆட்சிக்கு வந்தபின் அக்கோட்டை முக்கியத்துவம் வாய்ந்ததானது, அன்று தென்னிந்தியாவின் தலமை செயலகம் அதுதான். அன்று கிழக்கிந்திய கம்பெனி யாருக்கும் கட்டுபடாத கம்பெனி, இந்தியாவில் அது கிளப்பிவிட்ட ஊழலும், கையூட்டும் கொஞ்சமல்ல, கிளைவ் வரும்பொழுது அது அப்படித்தான் இருந்தது இந்த லஞ்சமும் ஊழலும் ஜார்ஜ் கோட்டையின் ஒரு அம்சமாகவே அதன் தொடக்கத்தில் இருந்திருக்கின்றது, இன்றும் அப்படித்தான் இருக்கின்றது சென்னை கோட்டை அந்த லஞ்சம் மற்றும் கொள்ளைபணத்த்தால் நிரம்பி கிடந்திருக்கின்றது […]