பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கலைஞருக்கு ஆழ்வார்கள்

கலைஞருக்கு ஆழ்வார்கள் மையம் சார்பில் அஞ்சலி செலுத்தபட்டிருக்கின்றது ஆக சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை நிரூபித்திருகின்றார்கள் ஆழ்வார்கள் மேன்மக்கள் என்றும் மேன்மக்களே.. இன்னும் தீபாவளிக்கும், கோகுலாஷ்டமிக்கும் வாழ்த்து சொல்லாமல் பக்ரீத்திற்கும், கிறிஸ்மஸ்க்கும் திமுக தலமை நல்வாழ்த்து சொல்லிகொண்டிருந்தால் அது அர்த்தமற்றது

“நீயா நானா” நிகழ்ச்சி

கலைஞர் இறந்து கிடைத்த அனுதாப நேரத்தை அட்டகாசமாக ஸ்கோர் செய்கின்றது விஜய் டிவி “நீயா நானா” நிகழ்ச்சி இப்பொழுது போரடித்து விழுந்து போனதை கலைஞர் எனும் மனிதரின் நினைவுகளை கொண்டு தூக்கி நிறுத்திற்று செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதை இனி செத்தும் கொடுத்தார் கலைஞர் என மாற்றிகொள்ளலாம் ஆனால் ஜெயா இருந்தவரை இம்மாதிரி நடத்தாத டிவி இப்பொழுது ஜெயா இல்லா நிலையில் நிகழ்ச்சியினை நடத்துகின்றது ஒருவேளை அம்மணி இருந்திருந்தால் என்னாகும்? பிக்பாஸ் மேல் சமூக அக்கறை வழக்குகள் […]

காமராஜரை கலைஞர் எல்லை மீறி விமர்சித்தார்

சிலர் 1969ல் காமராஜரை நாகர்கோவிலில் கலைஞர் பெரும் முயற்சி எடுத்தும் தோற்கடிக்கமுடியாமல் போன கதைகளை பேசிகொண்டிருக்கின்றனர் உண்மையில் அந்த தேர்தல் காமராஜருக்கு வாழ்வா? சாவா? என்றிருந்தது, தொடர் வெற்றியில் காமராஜரை சுதாரிக்காமல் அடித்து வெளியேற்றவேண்டும் என்ற வெறி கலைஞரிடம் இருந்தது காமராஜர் நாடார் என்பதும், குமரி தமிழகத்துடன் இணைய பாடுபட்டவர் என்பதும் அவருக்கு கூடுதல் பலம் என களம் இருந்தது கலைஞரோ கிறிஸ்தவர்கள் அதிகமான அத்தொகுதியில் பிரபலமான கிறிஸ்தவ நாடாரை நிறுத்தினால் வெற்றிபெறலாம் என கணக்கிட்டு டாக்டர் […]

கலைஞர் இந்நாட்டின் தேசியவாதியா?

கலைஞர் நிச்சயம் போராளி, அவரின் உழைப்பும், சாதுரியமும், தமிழும் இன்னபிற சிறப்பு குணங்களும் யாருக்கும் வராது நிச்சயம் தமிழகத்து அரசியல்வாதிகளில் பெரும் இடம் பெற்றவர், அது மாறாது ஆனால் கலைஞர் இந்நாட்டின் தேசியவாதியா? இந்நாட்டை தாங்கி நின்றவரா? இந்நாட்டிற்கு பெரும் சேவை செய்தவரா என்றால் இல்லை என்றே பதில்வரும் இம்மாநிலத்தை தேசியத்துடன் ஒட்டவிடாமல் திராவிடம் தமிழ் தமிழர் என சொல்லிகொண்டே ஒருமாதிரி இழுத்து சென்ற அரசியல் அவருடையது அதன் எதிரொலிதான் நாம் என்ன செய்தாலும் கலைஞர் காப்பார் […]

கலைஞரை போற்றுகின்றோம் என பழங்கதைகளை கிளறுகின்றார்கள்

கலைஞரை போற்றுகின்றோம் என சொல்லி மகா அபத்தமாக அவரின் பழங்கதைகளை கிளறுகின்றார்கள் உபிக்கள் என்ன சொல்கின்றார்கள்? 1942ல் இந்த பேராசிரியர் அன்பழகன், நெடுஞ்செழியன் எல்லாம் பேருந்து செலவுக்கு பணமின்றி இருந்தார்களாம், கலைஞர் அவர்களை அழைத்து பேசவைத்து வழிசெலவுக்கு 5 ரூபாய் கொடுத்து, பழங்கஞ்சி கொடுத்து அனுப்பினாராம் இந்த அன்பழகனும் , நெடுஞ்செழியனும் ஆனந்த கண்ணீர் வடித்துகொண்டே சென்றார்களாம் அன்று இவர்கள் அன்பழகன் அல்ல, ராமையா. நெடுஞ்செழியனின் பெயர் நாராயணசுவாமி இவர்கள் பெயரை மாற்றியது எல்லாம் பிற்காலத்தில் 1942களில் […]

கலைஞர் எல்லா நாளும் கலைஞராக, சுவாரஸ்யமிக்கவராக இருந்தார்

கலைஞர் மிக சிறந்த வசனகர்த்தா என்பது அவர் மிக பொருத்தமாக எழுதும் பல வசனங்களில் வெளிப்படும், சூழலுக்கு அற்புதமாக வசனம் எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே எத்தனை பேர் கியூபாவினை பற்றி பேசினாலும், கலைஞர் பேசியிருக்கும் அழகு வராது, முன்பே பேசியிருந்தார். அவர் நச்சென்று சொன்னது இது ” ‘கியூபா’ சின்னஞ் சிறிய நாடு ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட அழகிய தேன் கூடு! தேன் கூடென்று ஏன் சொல்கிறேன் தெரியுமா? தெரியாமல் அமெரிக்கா கை வைக்கும் போதெல்லாம் […]

பல டிவிக்களில் கலைஞரின் கதை வசனத்தில் எழுந்த படங்கள் ஓடிகொண்டிருக்கின்றன

இப்பொழுதெல்லாம் பல டிவிக்களில் கலைஞரின் கதை வசனத்தில் எழுந்த படங்கள் ஓடிகொண்டிருக்கின்றன, ஒரு படமும் விடுவதாக இல்லை, அப்படிபட்ட அபார வசனங்கள் சிலவற்றில் ராமசந்தின ஈஈ என இளித்து கொண்டிருக்கின்றார், அத்தோடு வின் ஜாணகியும் மருத நாட்டு இளவரசியில் ஆடிகொண்டிருக்கின்றார், கலைஞரின் வசனத்திற்காக அவர்களை பொறுத்துகொண்டாயிற்று அன்று வருங்கால முதலமைச்சர்களுக்கு வசனம் எழுதுகின்றோம் என்பது கலைஞருக்கும் தெரிந்திருக்காது, வருங்கால சகாப்தம் தங்களுக்கு வசனம் தருகின்றது என அந்த நடிப்பு தம்பதிக்கும் தெரிந்திருக்காது காலம் என்னவெல்லாமோ விளையாட்டு ஆடியிருக்கின்றது […]

உடன்பிறப்பே… நான் வந்திருக்கும் இடம் நன்றாயிருக்கின்றது

உடன்பிறப்பே நான் வந்திருக்கும் இடம் நன்றாயிருக்கின்றது, இதுதான் சொர்க்கம் என்றார்கள், இப்படி தமிழகத்தின் மக்களும் நலமாகவும் சமமாகவும் வாழத்தான் நான் போராடினேன், என் காலம் முடிந்ததே தவிர போராட்டம் ஓயவில்லை அது உங்களிடமே விட்டுவிட்டு வந்திருக்கின்றேன் உடன்பிறப்பே, எங்கோ கிராமத்தில் பிறந்த எனக்கு, சாதியோ பெரும் குடும்ப அடையாளமோ இல்லாத எனக்கு மொத்த தமிழமும், உலகெல்லாம் தமிழ்வாழும் சமூகமும் , இந்திய தேசமும் மொத்தமாக அடித்தள மக்கள் முதல் உயர்பீடம் வரை அஞ்சலி செலுத்தினார்கள் என்றால் உண்மையிலே […]

கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் : திருநாவுக்கரசர்

“உழைப்பு என்ற கருணாநிதியின் மந்திர சொல்லின் மூலம், அவரின் கனவுகளை , கட்சி தொண்டர்களின் துணையுடன் சாதித்துக்காட்டுவேன” : முக ஸ்டாலின் மெரினாவில் கலைஞருக்கான‌ இடத்தை மீட்க‌ அழகிரியுடன் சேர்ந்து காட்டிய ஒற்றுமையினை தமிழகத்தினை எடப்பாடி கும்பலிடம் இருந்து மீட்பதிலும் இவர் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? விரைவில் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் -திருநாவுக்கரசர் அறிவிப்பு தமிழகம் முழுக்க திறக்கபடாத ராஜிவ், இந்திரா, காமராஜர் சிலைகல் ஏராளம் உண்டு தவம் செய்யும் முனிவர்களை […]

புலிதரப்பு ஈழதமிழர்கள்தான் கலைஞரை திட்டிகொண்டே இருக்கின்றார்கள்

புலிதரப்பு ஈழதமிழர்கள்தான் கலைஞரை திட்டிகொண்டே இருக்கின்றார்கள் என்றால், இந்த பத்மநாபா வரதராஜ பெருமாள் கோஷ்டியும் அதையே செய்கின்றது என்ன சொல்கின்றது அமைதிபடை காலத்தில் புலிகளை ஆதரித்தார் கலைஞர், பத்மநாபாவினை காக்க மறந்து அவர் படுகொலைக்கு துணைபோனார், அமைதிபடையோடு வந்த போராளிகளை சென்னைக்குள் அனுமதிக்க மறுத்து விசாகபட்டினம் அனுப்பினார் என ஏகபட்ட குற்றசாட்டுகள் ஆக அகதிகளாக வந்த ஈழதமிழர்களுக்காக தலையிட்டு இருபக்கமும் வாங்கி கட்டுகின்றது திமுக‌ பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது இதுதான் கலைஞர் மரியாதை தெரிந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications