பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராகுல் காந்தி மேல் லேசர் ஒளி

ராகுல் காந்தி மேல் லேசர் ஒளி அடித்த சர்ச்சை ஒரு வழியாக தீர்ந்துவிட்டது அதை தீர்த்து வைத்திருப்பவர் காங்கிரஸ் பிரமுகர் அபிஷேக் சிங்வி அவர் இப்படி சொல்லிவிட்டார் ”உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி எந்த கடிதமும் எழுதவில்லை. இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது” ஆக பாதுகாப்பு குறைபாடு மற்றும் லேசர் ஒளி தொடர்பாக வந்த செய்திகள் குறித்து தாங்கள் உள்துறை அமைச்சகத்துக்கு எந்த கடிதமும் எழுதவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. இது […]

இளையவன் என்று இகழ்ந்தால்

“போற்றுமின் மறவீர், சாற்றுதும் நும்மை,ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்தாள் படு சின்னீர்க் களிறு அட்டு வீழ்க்கும்ஈர்ப்பு உடைக் கராஅத்து அன்ன என்னைநுண்பல் கருமம் நினையாது இளையன் என்று இகழின், பெறல் அரிது ஆடே.” எதிரிப்டை வீரர்களே கேளுங்கள், சிறுவர்கள் விளையாடக் கலங்கும்படியான கால் அளவுள்ள நீருக்குள் யானையைக் கொன்று வீழ்த்தி இழுத்துச் செல்லும் முதலையைப் போன்ற வர் எம் தலைவன், அவன் செய்யும் பல செயல்களைக் கருத்தில் கொள்ளாமல், அவனை இளையவன் என்று இகழ்ந்தால், நீங்கள் வெற்றி பெறுவது அரிது.

வன்மையாக கண்டிக்கதக்கது

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு ராகுல் வந்த விஷயத்திற்காக அக்கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றது அரசு இது வன்மையாக கண்டிக்கதக்கது, ராகுல் ஒன்றும் அந்நிய நாட்டு தீவிரவாதி அல்ல, இந்நாட்டின் இளந்தலைவர் அதுவும் லயோலா கல்லூரி சம்பவத்தின் பொழுது மவுனம் காத்த அரசு, திருச்சி ஜோசப் கல்லூரி போன்றவை இந்த சீமான் போன்றவர்களை எல்லாம் பேச வைக்கும் பொழுது அமைதி காக்கும் அரசு ராகுல் என்றால் கிளம்புவது சரியே அல்ல‌ முதலில் கல்லூரிகளில் பேசி விஷ வித்துக்களை விதைக்கும் […]

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

அந்த 7 பேர் மேலும் கொஞ்சமும் வருத்தமில்லை என “சங்கு சுட்டாலும் வெண்மை தரும்..” என்பது போல பெருந்தன்மையாக சொல்லியிருகின்றார் ராகுல் காந்தி இந்த 7 பேர் விடுதலை நாடக கம்பெனியும், அந்த மகா முக்கிய ஆர்ட்டிஸ்ட்டான அந்த அற்புதம்மாளும் கண்டு கொண்டதாக தெரியவில்லை நல்லவர்கள் அந்த ராகுலை சந்தித்து நன்றி சொல்ல வேண்டாமா? இந்த ராமதாஸ் கோஷ்டி எதிர்தரப்பு (இப்போது மட்டும்) என்பதால் கண்டுகொள்ளவே இல்லை மற்ற வழக்கமான இந்த 7 பேர் விடுதலை என […]

ராகுலின் எளிமை அந்த குலத்தின் அளவு

நேரு மிகபெரும் செல்வந்தர் ஆயினும் கேம்பிரிட்ஜ்ல் படித்தவராயினும் கதர் தவிர வேறு ஆடை அணிந்ததில்லை தன் தனி அடையாளமான அந்த‌ கோட் கூட கதராக இருக்குமளவு கவனமாக இருந்தார் இந்திரா நூல்சேலை தவிர எந்த ஆடையும் கட்டியதில்லை, காதிலும் கழுத்திலும் கூட ஒரு நகை நீங்கள் பார்த்திருக்க முடியாது ராஜிவ் மிக சாதாரண ஆடைகளையே அணிந்தார், சோனியாவின் சேலையும் பாமரபெண் சாயலிலே இருக்கும் பிரியங்கா, ராகுல் உடைகளும் ஒருநாளும் விலை உயர்ந்தவை அல்ல‌ இவ்வளவிற்கும் சோனியா குடும்பம் […]

மாற்றத்திற்கான அறிகுறிகள்

கலைஞர் இருந்திருந்தால் இந்நேரம் ராகுல் கேள்விகளை தமிழில் கேட்கின்றேன் என அவர் அருகிலே இருந்திருப்பார் கூட்டத்து கவனமோ இல்லை தமிழக கவனமோ ராகுலை நோக்கி செல்லாதவாறு அட்டகாச வித்தைகாட்டியிருப்பார் தமிழகத்தில் யார் வளரவேண்டும், எப்படி வளரவேண்டும் என்பதை கடந்த 60 ஆண்டுகாலம் தன் கையிலே வைத்திருந்தவர் அவர் ஜெயா இருந்திருந்தால் இந்நேரம் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முதல்வர் என்ன பாடுபடுவாரோ தெரியாது பெரும் பிம்பங்கள் உடைந்தபின் பல தேசிய அடையாளங்கள் இங்கு உதிக்க ஆரம்பிக்கின்றன‌ இவை எல்லாம் […]

பெரியவரவேற்பா?

என்னது தமிழ் மாணவிகள் ராகுல்காந்தியிடம் ஆங்கிலத்தில்உரையாடினார்களா? பெரியவரவேற்பா? ராகுல்காந்தி தமிழில் பேசவில்லை என்பதை கண்டிக்கவில்லையா? ஈழத்தில் நம் இனம் அழிந்த கவலை கொஞ்சமும் இல்லையா? அதுபற்றி ஒருத்தியும் கேள்வி கேட்கவே இல்லையா? அங்கு களமாட ஒரு மானமுள்ள‌ தமிழச்சியுமா இல்லை? நமது ஆட்சி அமையட்டும் , புனித மரியன்னை கல்லூரியில் 300 மாடு கட்டி, இவளுக அத்தனை பேரையும் மாட்டுசாணம் அள்ளவைத்து பழிவாங்கிவிடலாம்

உண்மையும் நியாயமும் அவரிடம் இருக்கின்றது

அலங்கார உடையில்லை, மோசடி கண்ணீர் இல்லை, பசப்பு வார்த்தையில்லை, வெற்று சவாலுமில்லை, போலி வாக்குறுதியுமில்லை தமிழ்நாடு என்றவுடன் ராம்சந்திரன் வாழ்க எனும் கோஷமில்லை, ஜெயலலிதா என்ற பேச்சுமில்லை வீண் விளம்பரமுமில்லை இவ்வளவிற்கும் அவர் தந்தை சிதறி உயிர்விட்ட இடம் அருகில்தான் இருக்கின்றது, அதை சொல்லி கூட ஒரு அனுதாபம் தேட மனமில்லை மிக யதார்த்தமான பதில்கள், துளியும் ஆவேசமும் கோபமும் இல்லா ஆணித்தரமான நிதானமான பதில்கள் எல்லா கேள்விக்கும் அவரிடம் பதில் இருக்கின்றது, காரணம் உண்மையும் நியாயமும் […]

அடுத்த ஆட்சி

எது எப்படி ஆயினும் இனி ஆட்சிக்கு வரவேண்டியது காங்கிரசும் அதன் கூட்டணியுமே அதில் மாற்றுகருத்தே இல்லை மிக எதிர்பார்க்கபட்ட மோடி குஜராத்தின் முதல்வராக ஜொலித்த மோடி பாரதபிரதமராக சறுக்கி இருக்கின்றார் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வந்த கதையும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் சரிவும் , பெட்ரோல் மற்றும் எரிபொருளின் விலைவாசியுமே அதை காட்டி நிற்கின்றன‌ மிக மோசமான ஆட்சி என்று நிச்சயம் மோடியின் ஆட்சியினை சொல்லமுடியாது, பெரும் ஊழல் என்றும் இல்லை கிட்டதட்ட வாஜ்பாய் பிரதமராக […]

தேசத்தின் மிக சிறந்த ஆளுமைகள்

ஆளாளுக்கு தேசத்திற்காய் பொங்குகின்றார்கள், விட்டால் கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு “பேட்ட” ரஜினி ஸ்டைலில் பாகிஸ்தானுக்குள் புகுந்துவிடுவார்கள் போலிருக்கின்றது இதில் பல அரைவேக்காடு தலைவர்களும், அகிலேஷ் யாதவ் போல பக்குவமில்லா தலைவர்களும் போர் ஆமாம் போர் என முழங்குகின்றார்கள் போர் என்பது அடித்துவிட்டு வரும் விஷயமல்ல, தொடங்கினால் அது எளிதில் முடியாது கார்கில் யுத்தம் நமது எல்லைக்குள் நடந்தது, எல்லை தாண்டி போர் தொடுப்பது என்பது அதுவும் இரு அணுசக்தி நாடுகள், ராணுவ கருவிகள் பலத்தில் சமபலத்தில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications