பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்று விஜயகாந்திற்கு பிறந்த நாள், வாழ்த்துக்கள் கேப்டன்

தமிழக நடிகர்களில் ஓரளவு பொதுநலனும் தைரியமும் கொண்ட நடிகர் அவர், தமிழை தவிர எந்த மொழிபடத்திலும் அவர் நடித்ததில்லை கருப்பு நிறம், பெரும் திறமையாளர் என சொல்லமுடியாவிட்டலும் அவர் நடிப்பில் ஒரு உணர்ச்சி இருந்தது. அந்த வேகமும் உணர்ச்சியும்தான் அவரை உச்சிக்கும் கொண்டு சென்றது உச்ச நடிகராகவும் இல்லாமல் அதே நேரம் காணாமலும் போகாமல் கங்கை ஓடும் நாட்டில் காவேரி போல அவரும் ஓடிகொண்டிருந்தார் பெரும் சர்ச்சையிலோ ஏதும் முறைகேடுகளிலோ சிக்காத மிக சில நடிகர்களில் அவரும் […]

அடித்தளித்திலிருந்து பெரும் பதவிக்கு வந்த கோபி அன்னான் இறந்துவிட்டார்

ஒடுக்கபட்ட இனத்திலிருந்து மிக உயரம் பெற்றவர்கள் எல்லாம் விடைபெறும் நேரம் போலிருக்கின்றது கலைஞர் போலவே அடித்தளித்திலிருந்து பெரும் பதவிக்கு வந்த கோபி அன்னானும் இறந்துவிட்டார் அவர் ஆப்ரிக்காவின் கானா நாட்டுக்காரர், மிக பின் தங்கிய நாடு அது. அதுவும் கருப்பினம் என்பது உலகில் சந்தித்த போராட்டம் என்பது மிக மிக கொடுமையானது ஐ.நா சபை எனும் மிகபெரிய பதவிக்கு வந்த ஆப்ரிக்க கருப்பர் அவர் , 1997 முதல் 2006 வரை இருமுறை அப்பதவியில் இருந்தவர் அவர் […]

அலெக்ஸாண்டரின் வரலாறு என்ன சொல்கின்றது

ஒரு சிலர் வரலாறு திரிக்கபட்டது, அலெக்ஸாண்டர் போரஸை வென்றான் நாட்டை திருப்பிகொடுத்தான் என்பதே நிஜம், போரஸ் அவனை வெல்லவில்லை நீ வரலாற்றை திரிகாதே என அறிவுரை சொல்கின்றார்கள் அலெக்ஸாண்டரின் வரலாறு என்ன சொல்கின்றது அவன் மிக கடுமையானவன் அதே நேரம் தந்திரசாலி , எதிரியினை கொல்லாமல் அவன் விட்டதே இல்லை உதாரணம் போரஸை விட அலெக்ஸாண்டருக்கு பெரும் சவால் கொடுத்தவன் தீர் அல்லது டயர் நாட்டு மன்னன், போரஸ் காட்டிய வீரத்தை விட பன்மடங்கு வீரத்தை அவன் […]

மலேசிய இந்தோனிசிய இந்திய தமிழர் தனவனம்

மனிதர்களில் சுவாரஸ்யமானவர்கள் இருக்கின்றார்கள், காலம் வரும்பொழுதுதான் அவர்களை சந்திக்க முடிகின்றது. அப்படி ஒரு மனிதரை நேற்று சந்திக்க முடிந்தது, பொதுவாக மலேசிய தமிழரில் ஏகபட்ட தும்பிகள் உண்டு அதனால் இவர் அழைக்கும் பொழுதெல்லாம் போனை கூட தவிர்த்தது உண்டு. ஆயினும் இந்தோனேஷியாவில் இருந்து வந்திருப்பதால் நேற்று சந்தித்தாகிவிட்டது பெரிய வியாழன் வேறு, செல்லும் பொழுது “பேக்கரி தொடங்கினாலும் தொடங்கினோம், பன் பட்டர்ன்னு டார்ச்சர் பண்றாங்க” என்ற வடிவேலு டயாலாக்கோடுதான் சென்றோம் அவருடன் பேச தொடங்கினால் அதிர்ச்சி மேல் […]

ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்கர்களின் மிக பெரும் கவுரவம்

அவர் ஒரு சாதாரண விவசாயி, அமெரிக்க தீவில் பிரிட்டிசாரும் பிரான்சும் மோதிகொண்ட காலத்தில் பிரிட்டன்பக்கமாக நின்று போரிட்டவர் ஓரளவு அறிவாளி அதனால் களத்தில் பிரிட்டன் பிரான்ஸும் செவ்விந்தியர்களும் இணைந்த படையினை வெல்வது கடினம் என சொன்னவர், பிரிட்டானியருக்கும் அவருக்கும் சரிவரவில்லை, ஆயினும் ராணுவவீரனாக தொடர்ந்தார். பெரும் தோல்வியில் தெய்வாதீனமாக உயிர்தப்பியபின் ராணுவம் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து மறுபடி விவசாயி ஆனார் அன்று அவரின் விவசாய பண்ணை கிட்டதட்ட 8 ஆயிரம் ஏக்கர் என்கின்றது வரலாறு. அதாவது […]

காலத்தினால் வந்தவன், காலத்தை வென்றவன்

கால சூழலுக்கு தக்கவாறே அறிஞர்கள் தோன்றுவார்கள், அக்கால சூழ்நிலைக்கு தக்க அறிவுரைகளை அல்லது போராட்டங்களை நடத்துவார்கள். இயேசு கிறிஸ்து இன்று போதித்துகொண்டிருந்தால் நிச்சயம் யூத மதத்தின் காட்டுமிராண்டிதனத்தை சாடமாட்டார், அவர்கள் அதிலிருந்து நிறைய‌ மீண்டு வந்தாயிற்று . ஆனால் பாலஸ்தீன் மீதான அதன் கொடூரத்தை நிச்சயம் அவர் சாடுவார். புத்தர் இன்றுவந்தால் மாட்டுகறி தின்னவேண்டாம் எனும் கூட்டத்திலா சேர்வார்? தீண்டாமை போன்ற பாகுபாடுகளை நிச்சயம் கண்டிப்பார், இலங்கையில், பர்மாவில் அட்டகாசம் செய்யும் புத்தமத்தை நிச்சயம் கலைத்தே விட்டு […]

நேதாஜியின் நினைவு நாள்

நிச்சயமாக அவர் ஒரு ஒப்பற்ற போராளி, காலத்தை மிக நுட்பமாக கணித்து விடுதலை போராட்டத்தை மாற்றியவர், அவரது திட்டம் மட்டும் வெற்றிபெற்றிருக்குமானால் இன்று இந்தியாவின் தலைவிதி மாறி இருக்கும், ஆனால் ஜப்பானின் அணுகுண்டு தாக்குதலும், ஹிட்லரை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையின் மாபெரும் வெற்றியும் அவரது தலைவிதியினை மாற்றிற்று அந்தகாலத்திலே கலெக்டருக்கு படித்தவர், ஆனால் பட்டத்தினை தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் புகுந்தார். வெள்ளையன் மனதினை மட்டும் அடி, அஹிம்சையால் ஆழ்மனதினை தொடலாம் எனும் காந்தீய இந்திய ஞான […]

பட்டினத்தார்

பட்டினத்தார் என்றொருவர் இருந்தார். நகரத்தார் எனும் பூம்புகார் செட்டியார். பெரும் பணக்காரர். சொத்து இருக்குமிடத்தில் சொந்தம் வரும், அது சுருட்டவும் வரும். கிட்டதட்ட எம்.ஏ ராமசாமி செட்டியார் போல மனம் வெறுத்த பட்டினத்தார் துறவியானார். ஞானம் பெற்றார், தத்துவமும் திருவோடுமாக அலைந்தார். ஒரு கட்டத்தில் இந்த திருவோடும் மீதும் எனக்கு ஆசை வந்ததே என சொல்லி தூர எறிந்தார். வாழ்வின் தொடக்கம் இனிமை, முடிவு கசப்பு என பொருளில் கரும்பினை கையில் சில நேரம் வைத்து தத்துவம் […]

மாவீரன் சின்னமலைக்கு வீர வணக்கமும், அஞ்சலிகளும்….

அவர் பெயர் தீர்த்தகிரி, எல்லா பயிற்சிகளையும் முடித்து பெரும் வீரரானார், முதலில் வேட்டைக்காரர்தான் ஆனால் நல்ல மனதும் இருந்தது சில ஏழைகளுக்கு உதவ அவரிடம் பணம் இல்லை, அப்பொழுது மைசூர் சாம்ராஜ்யம் திண்டுக்கல் வரை பரவியிருந்தது, அந்த வரிப்பணம் செல்லும் பாதையில் வந்து வீரர்களிடம் பணம் பறித்து, சிவன் மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்தான் என சொல் என பொடரியில் அடித்து விரட்டு அந்த ஏழைகளுக்கு உதவினார். பின் வரியினை வெள்ளையன் பறிக்கவந்தபொழுதும் பெரும் […]

‘தமிழ் ஒன் இண்டியா’ – வில் நம் பதிவு …

அந்த தலைமுறைக்கு காந்தி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர்… நமக்கு அப்துல் கலாம்! #DrAbdulKalam A tribute to late Dr Abdul Kalam, the People President, on the day of his memorial opening. TAMIL.ONEINDIA.COM   ஒரு சில தளங்களை போலவே இந்த தளத்தில் நம் பதிவுகள் வருகின்றன, பெரும் வாசகர்களை கொண்ட தளமாக தெரிகின்றது , நம் கலாம் பதிவினையும் பதிந்திருக்கின்றார்கள். நம்மையும் ஒருவர் மதிப்பதே பெரும் விஷயம், அதுவும் நம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications