பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அன்னை இந்திராவிற்கு இன்று பிறந்தநாள் !

      அன்னை இந்திராவிற்கு இன்று பிறந்தநாள் இந்தியாவின் மிக துணிவான தலைவர்கள் வரிசையின் பிதாமகள் அவர், இனி எத்தனை தலைவர்கள் வந்தாலும் அது இந்திராவினை விட உயர்வா அல்லது அவரை விட குறைவா என்றே இந்திய அரசியலால் அளக்கபடும் அப்படி ஒரு முத்திரை பதித்த சிங்க தலைவி அவர். எமக்கு காங்கிரஸ் பாஜக என்ற எந்த வேறுபாடுமில்லை என்பதால் சொல்லலாம், நாட்டில் இன்று இந்திராவிற்கு பின் மிக துணிவான பிரதமர் என்றால் நிச்சயம் மோடியே லால்பகதூர் […]

சிறியன சிந்தியாத நேரு

சிறியன சிந்தியாத நேரு அவர் பெரும் பணக்கார குடும்பத்தின் வாரிசு, உயர் கல்வியும், படோகரமான வாழ்வும் என அவர் வாழ்ந்த விதம் எந்த அரசனுக்கும் குறைவானதல்ல, ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலையும், காந்தியின் ஈர்ப்பும் அவரை போராட்ட களத்திற்கு இழுத்துவந்தன. 9 ஆண்டுகள் சிறைவாசம் ( காமாரஜர் நேரு போன்றவர்கள் எல்லாம் சிறையில் இருந்தவர்கள், யாரேனும் “பாம்புகள் பல்லிகள் நடுவினிலே” என பாடியிருப்பார்கள்????? காரணம் விளம்பரம் இல்லாதவர்கள்), சொந்த பேரனை கூட முதல் முறையாக,சாலையோரத்தில் கூட்டத்தில் ஒருகைகுழந்தையாக […]

திப்பு சுல்தான்

உலகிற்கு எல்லாம் ஒரு நீதி என்றால் இந்தியாவிற்கு தனி நீதி, அதுவும் கன்னட நீதிமன்றங்களுக்கு தனியாக ஒரு சட்ட்டமும் நீதியும் போலும் நீதிபதி குமாரசாமியின் கணக்கிலே அது தெளிவாக தெரிந்தது, இப்பொழுது திப்பு சுல்தானுக்கு தீர்ப்பிட்டு மறுபடியும் தங்களை நிரூபித்திருக்கின்றார்கள் நிறைய வாட்டாள் நாகராஜ் நீதிபதிகளாக அங்கு இருக்கின்றார்களா? அல்லது அங்கு கால்வைத்தவுடன் புத்தி மாறுகின்றதா என தெரியவில்லை, மண் ராசி அப்படி. ஆனால் அதே மண்ணில்தான் அடிபணியா ஒரு மாவீரன் இருந்தான் அந்த‌் திப்பு சுல்தான் […]

அக்பர்

  தோற்றம் : 15-10-1542         ::   மறைவு 27-10-1605 இந்தியாவினை எத்தனயோ அரசர்கள் ஆண்டனர், அவற்றில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் குறிப்பிடதக்கவர் அக்பர், மகா அக்பர். பாபரின் பேரன், எப்படியோ அனாதையாக திரிந்திருக்கவேண்டியவனை வளர்த்து அரசனாக்கினார் தாய் மாமன் பைரம்கான். அக்காலத்தில் அப்படிபட்ட ராஜவிசுவாசிகள் இருந்திருக்கின்றார்கள், இக்காலத்தில் அப்படியெல்லாம் இல்லை, கொஞ்சம் அசந்தாலே தூக்கி கடாசிவிட்டு அமர்ந்துகொள்வார்கள் அதனை காக்க சிரிய அதிபர் போல விடாபிடியோ அல்லது கலைஞர் போல மனதால் […]

மருதிருவருக்கு “வீர வணக்கம்”…

தெற்கே நடந்த சுதந்திரபோரில் மருது சகோதரர்களின் போராட்டம் குறிப்பிடதக்க வீர போராட்டம். வேலுநாச்சியார் தளபதிகளாகவும், ஊமைதுரையின் நண்பர்களாகவும் மானமிக்க போராட்டத்தினை அவர்கள் நடத்தி வெள்ளையனுக்கு சவால் விட்டவர்கள் மிக சிறந்த வீரர்கள், வெள்ளையனே சொன்னது போல “இவர்கள் நம்மிடம் சேர்ந்துவிட்டால் இந்த இந்தியாவினையே பிடிக்கலாமே, முடிந்தவரை நம்பக்கம் இழுக்க நினைப்போம்” ஆனால் மானமிக்க அவர்கள் இறுதிவரை மண்டியிடவில்லை. வரலாற்றின் ரகசிய பக்கங்கள் அதனை சொல்கின்றன, வெள்ளையன் காட்டிய தந்திரங்களில் ஒன்று தளபதிகளுக்கு ஆசையூட்டுவது, அடுத்த நிலையில் இருப்பவர்களை […]

சோ. ராமசாமி

மிக மிக சுவாரஸ்மான, அதே நேரம் பெரும் அறிவாளியும், சிந்தனையாளருமான சோ ராமசாமியின் பிறந்தநாள் இன்று அவரது நாட்டுபற்று சந்தேகமில்லாதது. அவரின் சில தொலைநோக்குகள் அற்புதமானவை, மிக அபாரமானது அவரின் துணிச்சல் அண்ணா காலம், மிசா காலம், புலிகள் ஆதரவு காலத்தில் எல்லாம் அவரின் துணிச்சல் அபாரமானது. அதுவும் 1985களிலே புலிகளை அவர் கண்டித்தவிதமும், பத்மநாபா படுகொலையினையொட்டி அவர் எழுதிய எழுத்துக்களும் மகா தீர்க்கமானவை. ஒரு பத்திரிகையாளன் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு அவரும் இலக்கணம். பிராமண ஆதிக்கம், […]

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

அந்த மோகன்தாஸ் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமான மனிதர், உணர்ச்சிவசபடாமல் அமைதியான மனதோடு சிந்தித்தால் அவர் ஒரு அற்புதமான பிறவி, அதனால்தான் உலகம் அந்த மனிதனை மனிதருள் சிறந்தவர் என கொண்டாடிகொண்டிருக்கின்றது. அவர்தான் தேசபிதா மகாத்மா காந்தி, உண்மையில் காந்தி என்பது அவரின் குடும்பபெயர், பின்னாளில் பாரத பெயராக நிலைத்துவிட்டது. கொஞ்சம் வளமான பிண்ணனி கொண்ட குஜராத்தி குடும்பம் அது, மாணவன் காந்தி ஒன்றும் படிப்பில் சூரர் அல்ல, சராசரிதான். பின்னாளில் 18ம் வயதில் லண்டனுக்கு வழக்கறிஞருக்கு படிக்க […]

டாக்டர் மன்மோகன் சிங்

உலகம் கொண்டாடும் ஒரு பொருளாதார மேதை, உலகம் தடுமாறிய மந்தநிலை காலங்களில் இந்திய பொருளாதாரத்தை காத்து நின்ற பெரும் அறிவாளி இன்று இந்தியா காட்டும் பொருளாதார பாய்ச்சலுக்கு அன்றே அஸ்திவாரமிட்ட பெரும் சிந்தனையாளன் மாற்றுகட்சி ஆயினும் அவர்களும் வந்து ஆலோசனை கேட்கும்பொழுதும் நாட்டுமுன்னேற்றத்திற்காய் நல்ல ஆலோசனைகளை வழங்கும் பெருமகன் அவர் பதவிவகித்த காலங்களில் அவரை தேடிவந்து பாராட்டியவர்களே அதிகம் தவிர, அவர் தேடிசென்ற நாடுகள் குறைவு. காரணம் நல்ல அறிவும் சிந்தனையும் எங்கிருந்தாலும் தேடி வரும் உலகமிது, […]

சுப்பிரமணிய பாரதியார்

நலம்கெட புழுதியில் எறியபட்டவர் செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேலியருக்கு பெரும் துக்கம் உண்டு, முனிச் நகரத்தில் நடைபெற்ற துயரமது. அமெரிக்கர்களுக்கு பெரும் அடியாக அமைந்த இரட்டை கோபுரத்தினை எண்ணி அவர்களும் அழுவார்கள். பிரபாகரனின் அட்டகாசத்தால் சாவதறேகென்ற உண்ணாவிரதம் இருந்து செத்த அல்லது சாகடிக்கபட்ட‌ தீலிபனை நினைத்து ஈழத்தவரும் அழுவார்கள். நெல்லை சீமையின் அறிவுசுடர் பாரதியை நினைத்து தமிழறிந்த,அறிவறிந்த தமிழரும் அழுவார்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே பிறந்தவர். தென் […]

மானிட தெய்வம் : அன்னை புனிதர் தெரஸா…

கிறிஸ்து இயேசு எப்படி போதித்தார்?, “ஒடுக்கபட்டோருக்கும், அனாதைகளுக்கும், ஆதரவில்லா அபலைகளுக்கும், நோயுற்றோருக்கும்வாழ வழியற்றவருக்கும் வாழ்வளிக்கும் பொருட்டு நானே வந்தேன்” அப்படித்தான் போதித்தார். அப்படி அவர் ஏழையாக வந்தார், சமூகத்தால் விரட்டபட்டோருடன் வாழ்ந்தார், நோயாளிகள், பாவிகள் என ஒதுக்கபட்டோர், புறக்கணிக்கபட்டோர் என யாருடனும் பழக அவருக்கு தயக்கமில்லை, அவர்களுக்கு எது தேவையோ அதனில் உதவினார். பசி,நோய் என அவர்கள் பிணியினை விரட்டினார். ஒரு யூதன் பாவிகள் எனப்படும் ஏழைகளுடன் இப்படி உறவாடுவதா எனும் வன்மத்தில் அவர் அடித்துகொல்லப்ட்டார், ஒரு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications