பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அதெல்லாம் காணல் நீராயிற்று

அந்த காஷ்மீரத்து சிங்கத்துக்கு தமிழகமும் திமுகவும் எவ்வளவு அவசியம் என்பது அன்றே புரிந்திருந்தது… திமுகவுக்கும் காஷ்மீரிய சிக்கல் புரிந்திருந்தது, அதன் குரல் நியாயமான குரலாய் இருந்தது, அந்த 1987 டெசோவில் பரூக் அப்துல்லாவினையும் சேர்த்திருந்தார் கலைஞர், அர்த்தமுள்ள செயல் அது அதெல்லாம் காணல் நீராயிற்று உதயநிதி வாழ்க.. இன்பநிதி வாழ்க வாழ்க

கடும் இறுக்குமான கட்டுபாடுகளுக்குள் வரலாம்

காஷ்மீரில் மெக்பூபா உட்பட தலைவர்களை வீட்டு சிறையில் வைத்திருப்பது நிச்சயம் முன்பு அராபத்தை இஸ்ரேல் வீட்டு சிறையில் வைத்தற்கு சமமானது ஆனால் இந்தியாவில் ஒரு குரல் வருகின்றதா என்றால் இல்லை, வராது நிச்சயம் அந்த மனிதன் இருந்திருந்தால் இப்பொழுது எதை சரியாக எழுதவேண்டுமோ அதை மிக சரியாக முரசொலியில் எழுதியிருப்பான் காஷ்மீரிய சிங்கம் பருக் அப்துல்லா இப்படி சொன்னார், நேரு அப்படி சொன்னார், இந்திரா இப்படி சொன்னார் என தன் அனுபவங்களை எல்லாம் கொட்டி அட்டகாசமாக எழுதியிருப்பான் […]

ஒருவேளை காஷ்மீருக்கான‌ 370ம் சட்டபிரிவு நீக்கபட்டால் என்னாகும்?

ஒருவேளை காஷ்மீருக்கான‌ 370ம் சட்டபிரிவு நீக்கபட்டால் என்னாகும்? ஒன்றும் ஆகாது, இது இந்தியாவின் உள்நாட்டு சிக்கல் என உலகம் சொல்லிவிடும். மிஞ்சி போனால் கொஞ்சம் கண்டிப்பு , சில அரசியல் குத்தல்கள், சில திறைமறைவு பேச்சுக்கள் என்பதை தாண்டி ஒன்றும் நடக்காது எல்லா நாடும் ஒவ்வொரு பகுதியில் இப்படி அழிச்சாட்டியம் செய்வதால் யாரும் கேள்வி கேட்கவும் முடியாது திபெத்தில் சீனா, சர்ச்சையான‌ இலங்கை, இஸ்ரேல், உக்ரைனில் ரஷ்யா, ஆசாத் காஷ்மீரில் பாகிஸ்தான், இன்னும் பல தீவுகளில் ரஷ்யா, […]

காஷ்மீரில் நிலமை கடுமையடைந்து வருகின்றது

காஷ்மீரில் நிலமை கடுமையடைந்து வருகின்றது, சுற்றுலா பயணிகள் அவசரமாக காஷ்மீரை விட்டு நீங்கும் நிலையில் அங்கு தலைவர்கள் வீட்டுகாவலில் வைக்கபட்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன‌ இப்பொழுதைய காஷ்மீர் ஆட்சியாளர் கவர்ணர் என்றாலும் அவர் ஜீன்ஸ் படத்து தம்பி நாசர் போல சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றார், கையில் சட்டபுத்தகம் இருக்கலாம் “எனக்கு எதுவும் தெரியாது, சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் இருக்கின்றது,நாளை நடப்பது எனக்கு தெரியாது” என சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றார். இதனிடையே பாகிஸ்தானின் இம்ரான்கான் காஷ்மீரில் பெரும் இன அழிப்பு என […]

பாகிஸ்தான் தன் விளையாட்டை தொடங்கிவிட்டது

இந்தியாவில் தேர்தல் தொடங்கிவிட்ட நேரம் பாகிஸ்தான் தன் விளையாட்டை தொடங்கிவிட்டது அதாவது அந்த பாலகோட் பக்கம் இந்திய விமானத்தால் தாக்கபட்ட மதராசாக்களுக்கு பத்திரிகையாளரை அழைத்து சென்று காட்டிவிட்டது அது மதராசாவில் சில இடிபாடுகளும் இருந்திருக்கின்றன, அது பழமை காரணமாக இடிந்ததே தவிர விமான குண்டு வீச்சு இல்லை என சொல்லிவிட்டது பாகிஸ்தான் பத்திரிகையாளரும் பார்த்துவிட்டு திரும்பிவிட்டார்கள் அதாவது பாகிஸ்தானில் இந்தியா குண்டு வீசவில்லை என நிரூபிக்க படாதபாடு படுகின்றது ஆனால் பலத்த கேள்விகள் எழுகின்றன‌ இதை தாக்குதல் […]

இனி என்னாகும்?

புல்வாமா தாக்குதல் அதை தொடர்ந்த தாக்குதலால் காட்சிகள் வேகமாக மாறுகின்றன‌ முதலில் புல்வாமா தாக்குதலுக்கு காரணம் யாரென்றால் இந்த ஆட்சியின் வெற்றுவிளம்பரம், அதுதான் முதல் காரணம் பஞ்சாபில் இந்திரா தீவிரவாதத்தை வேரறுத்தது போல் காஷ்மீரில் நாங்கள் வேரறுத்துவிட்டோம் என காட்ட துடித்தார்கள், துடிப்பென்றால் அப்படி ஒரு துடிப்பு விளைவு காஷ்மீர் தீவிரவாதமில்லா பகுதி என அறிவிக்க முன்னோடியாக சில பகுதிகளை அறிவித்தார்கள், அதன் பின் நாங்களும் இருக்கின்றோம் என காட்டவேண்டிய அவசியம் அந்த தரப்புக்கும் வந்தது அதன் […]

ரஷ்யா கனத்த அமைதி

புல்வாமா தாக்குதல் அதை தொடர்ந்த சிக்கல்கள் என எதிலும் ரஷ்யாவோ புட்டீனோ வாயே திறக்கவில்லை மாறாக அமெரிக்க துப்பாக்கிகளை விட ரஷ்ய துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிக்கபடும் என இந்தியா அறிவித்தது ஆயினும் ரஷ்யா கனத்த அமைதி, ஏன் இந்த அமைதி என்பதில் பல கணக்குகள் இருந்தன‌ விஷயம் இந்திய விமானபடையில் இருக்கின்றது கிட்டதட்ட 200க்கு மேலான மிக் விமானங்கள் விபத்துகுள்ளானது, இது மொத்த விமானபடை எண்ணிக்கையில் 4ல் ஒரு பங்கு ஆகும் ரஷ்யாவின் சுகோய் 30 சில […]

எல்லையில் நிலமை சுமூகமாக இல்லை

இந்தியா தேர்தல் பரபரப்பில் இருந்தாலும் எல்லையில் நிலமை சுமூகமாக இல்லை பாகிஸ்தானின் கப்பல்களை இந்தியா அனுமானித்தால் அவற்றில் பல திசைமாறி நிற்கின்றன, காரணம் எளிது அதாவது யுத்தம் தொடங்கினால் கராச்சியினை தாக்க செல்லும் இந்திய கப்பல்களை சுற்றி வளைத்து தாக்கும் ஒருவித தந்திரத்துடன் பாகிஸ்தான் தன் கப்பல்களை வேறு வேறு இடங்களில் நிறுத்தியிருகின்றது பாகிஸ்தானிய விமானங்கள் எல்லைக்கு மிக அருகில் பறக்கின்றன, நேற்று எப்16 ரக விமானங்கள் எல்லைக்கு அருகே வந்து வந்து திரும்பியிருக்கின்றது இந்திய விமானபடையும் […]

ஆக என்ன முடிவுக்கு வரலாம்?

இரு வாரங்களாகவே இந்த சர்ச்சை இருந்து கொண்டே இருந்தது, பாகிஸ்தானுக்குள் சென்று காணாமல் போன‌ இன்னொரு விமானம் பற்றி தகவல் இல்லை இந்தியாவின் எல்லை தாண்டிய தாக்குதல், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேலிய பங்கு உண்டு என சில ஊடகங்கள் முணங்கின, சில ஊடகங்கள் அடித்து சொன்னது விஷயம் கசிந்தது இப்படித்தான் ஆம் அந்த முகாம்கள் பற்றிய விவரங்கள் இந்தியாவிடமில்லை, அதை கொடுத்த இஸ்ரேல் இன்னொரு உதவியினை கோரியது அடிக்கும் பொழுது நாங்கள் கைகாட்டும் இடத்தையும் அடிக்க […]

செத்தது 300 செல்போனா

செத்தது 300 செல்போனா என வழக்கம் போல சில இம்ரான் பாசறைகள் கிளம்பிவிட்டன‌ தாகுதலுக்கு பின் 30 தீவிரவாதிகளின் செல்போன் இயங்கவிலை என எதற்கு சொன்னார்கள்? விஷயமிருகின்றது ஒருவரை ரகசியமாக கண்காணிக்கும் பொழுது இன்றைய மகா முக்கியமான விஷயம் செல்போன்கள் ஒருவர் பயன்படுத்தும் எண் கிடைத்துவிட்டால் மட மடவென்று அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்துவிடும் விஞ்ஞான காலமிது முதலில் இதை பரீசிலித்த நாடு அமெரிக்கா, 1997ல் ஆப்கனில் பின்லேடன் மேல் பரிசீலித்தார்கள் 2001ல் அமெரிக்கா தாக்கபட்டபொழுது பின்லேடனை கொல்லாமல் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications