பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலக புகைப்படதினம்

உலக புகைப்படதினம் என சொல்லிகொண்டு ஆளாளுக்கு சிறந்தபடங்கள் என சிலவற்றை சொல்லி கொண்டிருக்கின்றார்கள் நாமும் உலகின் ஆக சிறந்த படங்களை பதிவேற்றுவதில் பெருமை கொள்கின்றோம் உறுதியாக சொல்லலாம், சூடமேற்றி சத்தியம் செய்தும் சொல்லலாம், இந்த உலகில் எக்காலமும் முக்காலமும் சிறந்தபடங்கள் இவைதான், கேமராவினை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனின் பணி இந்த படங்களாலே முழுமை பெற்றது    

தலைவி வெளியிடும் ஆருத்ரா பாடல்….

இந்த மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க செய்தியினை சங்கத்து பார்வைக்கு கொண்டுவராத ஊடகங்களும், இந்த முகநூல் நண்பர்களும் கேரள வெள்ளம் போல பெரு வெள்ளத்தில் சிக்கட்டும் அதை விட மோசமான பழனிச்சாமியின் ஆட்சியிலே கிடந்து சாகட்டும் ஒரு வார்த்தை ஒரு பயலும் சொல்லவில்லை, இந்த காவேரி வந்ததில் இருந்து Periya Samyஎன்பவரும் அதிலே அயிரை மீன் பிடித்து கொண்டிருக்கின்றார் தலைவி பற்றி மிக முக்கியமான விஷயத்தை விட்டுவிட்ட சங்கத்தை மறுசீரமைக்கும் பணி உடனே தொடங்குகின்றது ஏம்பா Dhurai Sathish கிளைவ் கதையினை எழுதுவீரா […]

டாவின்ஸி வரைந்துவிட முடியுமா?

இப்படி ஒரு குறும் புன்னகையினை அந்த டாவின்ஸி வரைந்துவிட முடியும்? நெவர் கம்பனால் இந்த புன்னகைக்கு உருவகம் கொடுத்து பாடிவிட முடியும்? ஆயிரம் கம்பன் வந்தாலும் முடியாது.. அடேய் Babu Rao இப்பொழுதுதான் நயன் நடிக்க வேண்டிய நடிகர் கூட மிக சரியாக யோகிபாபுவுடன் நடித்திருக்கின்றார் அவருக்குரிய இடம் அதுதான், அதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

தலைவி இருப்பதால் இத்தேசம் இன்னும் அழகாக கம்பீரமாக‌ இருக்கின்றது

தலைவியின் நாட்டில் இருப்பதை விட என்ன பெருமை வேண்டி இருக்கின்றது? தலைவி இருப்பதால் இத்தேசம் இன்னும் அழகாக , கம்பீரமாக‌ இருக்கின்றது, அந்த மகிழ்ச்சியில் தேசம் சுதந்திர நன்னாளை மகா உற்சாகமாக கொண்டாடுகின்றது இத்தேசத்தின் பெருமையான‌ ஒரு விஷயம் மீட்கபட வேண்டுமென்றால் அந்த கோஹினூர் வைரம் லண்டனில் இருந்து மீட்கபட வேண்டும் மிக விரைவில் அது மீட்கபட்டு தலைவியின் மூக்குத்தியில் பொருத்தபடும் என சங்கம் சுதந்திர தினநாள் உறுதி ஏற்கின்றது

கார்மேகம் என்ன செய்யும் பாவம்?

கேரள பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது என்பது இப்பொழுது தெரிந்தாயிற்று தோகைவிரித்து இளமயில் ஆடும்பொழுதெல்லாம் மழை வரும் என்பது பொய்யல்ல, முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல‌ தலைவியின் தலைமுடியின் வடிவான அழகும் ,, அம்முகமும் தோகை விரித்தாடும் மயில் போலவே இருப்பதால் ஏற்பட்ட‌ கடும் மழையே கேரளாவில் அப்படி கொட்டியிருக்கின்றது கார்மேகம் என்ன செய்யும் பாவம்?, மயில் ஆடினால் மழைகொட்ட வேண்டியது அதன் பொறுப்பு , தலைவியினை கண்டதும் பெரு மழையாக கொட்டிவிட்டது. காவேரி பொங்கி வரும் ரகசியமும் […]

தலைவியின் கால் தூசுக்கு வரமுடியாதவள் கிளியோபாட்ரா

அலக்ஸாண்டர் எகிப்தை கைபற்றி தன் சாம்ராஜ்யத்தோடு இணைத்து பெரும் பேரரசை உருவாக்கிவிட்டு , தான் மறையும் பொழுது தன் ராஜ்யத்தை தன் தளபதிகளுக்கு பங்கிட்டு கொடுத்தான் எகிப்து அப்படித்தான் டாலமி எனும் கிரேக்க வம்சத்திடம் வந்தது, அந்த வம்சத்தவள்தான் கிளியோபாட்ரா. கிளியோபாட்ரா என்பது பொதுபெயர், நிறைய கிளியொபாட்ரா இருந்தாலும் வரலாற்றை மாற்றியவள் அந்த ஒரு கிளியொபாட்ராதான் அவள் அழகி , நிர்வாகி, அரசி, பன்மொழிகலந்த வித்தைக்காரி , தன் அழகை பராமரிக்கும் நுட்பம் தெரிந்த ஒப்பனை அழகி […]

வாழ்க தலைவி, அவரால் மட்டும் வாழ்க தமிழக காங்கிரஸ்

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரே ஆலோசனை கூட்டமாக நடத்திகொண்டே இருக்கின்றது, கடும் ஆலோசனை செய்தது எப்படி என ஆலோசனை செய்வார்கள் போல‌ ஒரு முடிவும் அறிவித்தது போலவும் செய்தி இல்லை, ஆனால் கூட்டம் மட்டும் நடக்கின்றது இது தேர்தலுக்கு தயாராகும் கூட்டம் என்பது யாருக்கு தெரியாது, ஆகட்டும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு வெற்றிடம் இருக்கின்றது கிட்டதட்ட 1960க்கு முந்தைய நிலையினை தமிழகம் பெற்றுவிட்டது திமுக தவிர குறிப்பிட்டு சொல்லும் வலுவான கட்சி இப்போது இல்லை, திமுகவிலும் […]

தெய்வத்தால் ஆகாதெல்லாம் தலைவியால் சாத்தியம்

கோவில் அர்ச்சகரில் பிராமணர் அல்லாத அர்ச்சகர் வந்துவிட்டார்களாம் , அது பெரும் மாற்றமாம். நல்லது ஒரு பக்கம் இது சரி என்றும் ஒரு பக்கம் தவறு என்றும் ஏகபட்ட வாதங்கள் குழப்பங்கள், இதனால் சமூக அமைதி கெடுகின்றது இதற்கெல்லாம் தீர்வு என்ன என சங்கம் வழிகாட்ட போகின்றது விரைவில் மீண்டும் அமைய இருக்கும் குஷ்பு கோவிலில் எல்லா சாதியும் அர்ச்சகராகலாம் என அறிவிப்பதில் சங்கம் பெருமை கொள்கின்றது. உலகிற்கே அது வழிகாட்டும் விஷயமாக அமையும் தெய்வத்தால் ஆகாதெல்லாம் […]

தலைவி ஆனந்த விகடனில் அட்டகாசமான பேட்டி

தலைவி ஆனந்த விகடனில் அட்டகாசமான பேட்டி கொடுத்திருக்கின்றார் மிக நிதானமான பதில்கள், தீர்க்கமான சிந்தனைகள், அரசியல் நடப்புகளை அவதானித்தல் என அவரின் பேட்டி தேர்ந்த அரசியல்வாதிக்குள்ள அனுபவத்தை சொல்கின்றது திருநாவுக்கரசுக்கு நான் ஏன் பதில் சொல்லவேண்டும் என்ற ஒற்றை வரியில் எங்கோ போய்விட்டார் தலைவி குரைக்கும் நாய்க்கு பெண் சிங்கம் ஏன் பதில் சொல்ல வேண்டும்? கலைஞரை அப்பா என அழைக்கும் தலைவி அவரை கோபாலபுரத்தில் சந்தித்ததையும் , அதாவது திமுகவில் இருந்து வெளியேறிய பின் சந்தித்ததையும் […]

தலைவிக்கு இன்றும் அதே 18 வயது

    “என்றைக்கும் வயது மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு…..” என அன்றே சின்னதம்பி படத்திற்கு தலைவிக்கு பாடல் வரி எழுதினார் கங்கை அமரன் அந்த வாக்கு அப்படியே பலித்திருக்கின்றது, தலைவி இன்றும் அதே 18 வயது போலவே இருக்கின்றார் தலைவி பற்றி அன்றே தீர்க்கதரிசனமாக எழுதிய திரையுலக நாஸ்டர்டாமஸ் கங்கை அமரனுக்கு சங்கம் விரைவில் பொற்கிழி வழங்கும்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications