பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜல்லிகட்டுக்கு தமிழகமே பொங்கி மீட்டு வந்தது

ஜல்லிகட்டுக்கு தமிழகமே பொங்கி மீட்டு வந்தது, ஆனால் அதில் நடக்கும் உயிர்பலி பற்றி எந்த தமிழனும் கவலைபட்டதாக தெரியவில்லை நேற்று ஒருவர் களத்தில் செத்திருக்கின்றார், இனி அவர் குடும்பம் என்னாகும்? யார் அக்குடும்பத்திற்கு பொறுப்பு?, அவர்கள்தான் இனி அழுது அலறி காலம் முழுக்க வலியோடு வாழவேண்டும் இதெல்லாம் கேட்டால் தமிழின துரோகி ஆகிவிடுவோம் ஜல்லிகட்டிற்கு மாட்டு கொம்பை பிடித்து துன்புறுத்த கூடாது எனும் விதிகளை எல்லாம் வகுத்து நடத்துகின்றார்களாம். அப்படியே வீரர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு முறைகளை, சில […]

என்னதான் செய்கின்றது பீட்டா?

நியுசிலாந்தில் இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டன, நிச்சயமாக மானிட தவறு என்கின்றார்கள் பெரும் உயிர்வதை அங்கு நடந்திருக்கின்றது ஆனால் அங்கு பீட்டாவினையும் காணோம், ராதா ராஜன் என்பவரையும் காணவில்லை, ஒரு புளூகிராஸ் அமைப்புகளையும் காணவில்லை காரணம், இந்த திமிங்கல சாவுக்கு காரணம் பெரும் கைகள் எனும் சர்ச்சை வருகின்றது, ஆக பீட்டா நம் ஜல்லிகட்டு என்றால் பாயும், திமிங்கலங்கள் சாவு என்றால் வாயினை மூடி கொள்ளும். சென்னையில் எண்ணெய் கசிந்து ஆமைகளும் மீன்களும் சாகும் பொழுதும் […]

மறுபடியும் அந்த கும்பல் ஆரம்பித்துவிட்டது

மறுபடியும் அந்த கும்பல் ஆரம்பித்துவிட்டது லாரன்ஸ் வந்தேறி, அந்த ஹிப்காப் (அது என்ன ஹிஹிஹிஹ் காப்?) தமிழன் வந்தேறி, பாலாஜி வந்தேறி, அவர்கள் துரோகம் செய்ததால் போராட்டம் கலைக்கபட்டது என ஓப்பாரி தொடங்கிவிட்டது அடேய் காவல்துறையினை கைவசம் வைத்திருக்கும் முதல்வர் பச்சை தமிழன், அவரின் ரிமோட்டை வைத்திருக்கும் சசிகலா தமிழச்சி, சசிகலாவினை ஆட்டிபடைக்கும் நடராஜன் பச்சை தமிழன் நடராஜனின் தோழர்கள் நெடுமாறன், சீமான் எல்லாம் பச்சோந்தி தமிழர்கள் ஆக காவல்துறையினை ஏவிவிட்டது தமிழர்கள், காவல்துறையின் கலவர தடுப்பு […]

ஜல்லிகட்டு எழுச்சியில் அந்த தீபா என்ன ஆனார்? இன்னும் பிற …

ஜல்லிகட்டு எழுச்சியில் அந்த தீபா என்ன ஆனார்? ராஜபக்சேயே மெரினா வந்து, கூட்டத்தில் நின்று “தமிலெருக்கு ஜொல்லிகொட்டு வோணும்” என பிரபாகரன் படத்தோடு நின்றிருக்கலாம்.. வாட்டாள் நாகராஜ் கூட ஒரு ஜல்லிகட்டு பேனருடன் மெரினா வந்து போயிருக்கலாம், யாருக்கு தெரியும்? இதில் தீபா எல்லாம் எந்த மூலைக்கு… சென்னையா? இல்லை பெங்களூருக்கே போய்விட்டாரா? எல்லாவற்றையும் தீர விசாரிக்க வேண்டும் கர்ப்பிணி வேடத்தில் வயிற்றில் குண்டு கட்டி மருத்துவமனைக்குள் புகுந்தல், ராணுவ வீரன் உடையணிந்து அரச கட்டத்துக்குள் புகுந்து […]

சில வீணர்களால் இறுதிநேரத்தில் பெரும் குழப்பமாயிற்று

தமிழக மாணவர்களின் பெருமை மிகு போராட்டம், பெரு மகிழ்வோடு முடியவேண்டிய நேரத்தில் சில விஷமிகளால், சில வீணர்களால் இறுதிநேரத்தில் பெரும் குழப்பமாயிற்று நிச்சயமாக மாணவர்களின் போராட்டம் கண்ணியமும், மிகுந்த கட்டுப்பாடோடும் நடந்தது, உலகமே உற்று கைதட்டிகொண்டிருந்தது எல்லாம் எதுவரை? அரசுகள் ஜல்லிகட்டுவிளையாட தடையில்லை என சொல்லும் வரை அதன் பின் தான் இந்த ஜல்லிகட்டினை வைத்து தமிழ்நாட்டை இந்தியாவிற்கு எதிராக கொம்பு சீவிவிடும் கொடூர சிந்தனையாளர்களின் மனதில் அச்சம் உதித்தது, போராட்டம் அவ்வளவுதானா? வெற்றியோடு முடிந்துவிடுமா? விட […]

நமக்கும் காலம் வரும், நிச்சயம் வரும்

சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு பின்ன, மெரினாவில் அவ்வளவு பெரிய கலவரம் நடக்கும் பொழுது இவர்கள் எப்படி உள்ளே இருப்பார்கள், இப்பொழுது மெரீனா நோக்கி நடந்து போராடும் மாணவர்களை காக்க போகின்றார்கள். அதான் வெளிநடப்பு செய்து நடக்கின்றார்கள். இன்னும் ஸ்டாலின் தலமையிலான திமுக குழு மெரீனாவினை அடையவில்லை, இன்னும் 500 கிமீ தூரம் இருப்பதால் சென்று அடைய இன்று சில நாட்கள் கூட ஆகலாம் அடிவாங்குங்கள் தமிழர்களே, வோட்டு போட்ட விரலை காட்டி அதனை நொறுக்க சொல்லி […]

ஜல்லிக்கட்டு எதிராக உச்ச நீதி மன்றத்தில் மேனகா மனு…. இன்னும் பிற ..

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பாஜக மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் இந்திரா காந்தி ஏன் இவரை விலக்கி வைத்திருந்தார் என்பது இப்போது புரியும் அம்மா தமிழிசை, அய்யா பொன்னார் இதோ உங்கள் கட்சிக்காரரே தடை வாங்க சென்றிருக்கின்றாரே, இதனை பற்றி உங்கள் கருத்து? இது மேனகாவின் சொந்த விஷயம் என்றுமட்டும் வழக்கம் போல சொல்லிவிடாதீர்கள்.. மேனகா காந்தியினை அனுமதிக்கும் பாஜக , தமிழகத்தில் ரத்த களறி ஏற்பட மறைமுக சிக்னல் கொடுக்கின்றது இது […]

போராட்டத்தில் தலைவனோ தலைமையோ உருவாகவில்லை…

இவ்வளவு பெரும் போராட்டம் நடந்திருக்கின்றது, இதிலிருந்து கூட ஒரு தலைவனோ தலைமையோ உருவாகவில்லை இதே போன்றதொரு போராட்டங்கள் பலவற்றில்தான் பெரியார், கலைஞர் எல்லாம் தானொரு மிகபெரும் ஆளுமையாக உருவெடுத்தார்கள் என்பது வரலாறு. ஆக ஆற்றல்மிக்க வருங்கால தலைமுறை தலைவனுக்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் வருத்தம் மிஞ்ச பார்க்க வேண்டியிருக்கின்றது நிச்சயம் இப்போராட்டம் ஒரு நம்பிக்கை தலைவனை காட்டியிருக்க வேண்டும், ஆனால் நடக்கவில்லை எனும்பொழுது நல்ல தலைவன் உருவாகவில்லை என்பது தெரிகின்றது வருங்கால தமிழகத்தை வழிநடத்த ஒரு இளம் […]

மகிழ்ச்சியோடு கொண்டாட்டமாக முடித்திருக்கலாம்…

அம்மா இறந்த துக்கத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டங்களை ரத்து செய்கின்றோம் என சொல்ல ஒருவனுமா அக்கட்சியிலோ அரசிலோ இல்லை?? 🙂 அப்படி சொல்லிவிடத்தான் முடியுமா? ஆனாலும் கொஞ்சமேனும் துக்கம் இல்லையா? அது எப்படி இருக்கும், அவர் செத்து 50 நாட்களுக்குள் ராமசந்திரனுக்கு 100ஆண்டு என கொண்டாடிய கூட்டம்தானே அது. ஜல்லிகட்டு போராட்டம் வெற்றியில்தான் முடிந்தது, போராடிய நோக்கம் நிறைவேறி விட்டது. அந்த மகிழ்ச்சியோடு கொண்டாட்டமாக முடித்திருக்கலாம் ஒரு காரியத்திற்காக தமிழகம் அடித்த அடிதான், ஆனால் இனி ஓவ்வொரு […]

சும்மாவே கலையாத கூட்டம் அது…

பெண்களும், குழந்தைகளும் குவிந்திருக்கும் மெரீனா போராட்டகளத்தில் காவல்துறை புகுந்தாகிவிட்டது அரசு தன் இரும்புகரத்தினை காட்ட ஆரம்பித்தாயிற்று. காவல்துறைக்கு எதிரான பெரும் கோஷம் கிளம்புகின்றது இது எளிதில் தீராது, காரணம் திரண்ட கூட்டம் ஜல்லிகட்டிற்காக மட்டும் திரண்டது அல்ல. அது பல காரணங்களால் சேர்ந்த கூட்டம், ஜல்லிகட்டு ஒரு புள்ளி அவ்வளவுதான் உரிய அவசாகம் கொடுக்காமல் இந்த கூட்டத்தை வலுகட்டாயமாக கலைக்க நினைத்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையானதாகவே அரசுக்கு இருக்கும் அலங்காநல்லூருக்கு சென்னை பொங்கியபொழுது, இனி சென்னைக்காக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications