பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வெங்கய்யா நாயுடு, ஆளுனர் , ஜெயா தொலைக்காட்சி…

ஜெயா சாகும்முன்னாலும் செத்தபின்னாலும் அப்பல்லோவில் காவல் கிடந்த ஆளுநரையும், வெங்கய்யா நாயுடுவினையும் இப்பொழுது காணவே இல்லை மெரீனா பக்கம் வந்து பார்க்கலாம் அல்லவா? எங்கே சென்று தொலைந்தார்கள்? ஒரு ரிட் மனு போட்டு இருவரும் உயிரோடுதான் இருக்கின்றார்களா? என நீதிமன்றத்தில் கேட்க வேண்டும் தமிழகமே வங்க கடலில் மூழ்கினாலும், அல்லது பெரும் களபேரத்தில் கலங்கி நின்றாலும், வாழ்வா சாவா என பெரும் யுத்தம் நடத்திகொண்டிருந்தாலும் ஏன் அணுகுண்டே விழுந்து இரண்டாக பிளந்தாலும் ஜெயா டிவியில் மட்டும் சின்னம்மா […]

சந்தித்தார் மோடியை… முதல்வர் பன்னீர்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மனதிற்குள் இப்படி அழுதிருக்கலாம் “முடியல சார், எங்காவது ஓடிரலாம் போல இருக்கு, சொல்லாம ஓடினா நாட்டுக்கு அவமானமுன்னு இங்க வந்தேன் ஒரு டீ மாஸ்டரோட‌ கஷ்டம் இன்னொரு டீ மாஸ்டருக்குத்தான் புரியும்ணு வந்திருக்கேன்.. ஒரு கப்பையும் எடுத்து ஆத்த முடியல்ல, ஜல்லிகட்டுல என் மூஞ்சிமேலேய வெந்நீர் ஊத்துறாங்க… எல்லாத்துக்கும் என்னையே போட்டு அடிக்கிறாங்க, அம்மா இருக்கும்போது ஒரு பய ஏதும் கேட்டனா? ரொம்ப வலிக்குது சார்… […]

வந்துட்டான்யா … வந்துட்டான்…

இவர்தான் அடிகடி சசிகலா முதல்வராக வேண்டும் என்றும், முக்குலத்தோர் ஆள பிறந்தவர்கள் என்றும் அடிக்கடி வம்புக்கு வருபவர் இப்பொழுது ஜல்லிகட்டு எங்களுக்கு என சொல்லவந்துவிட்டார் அதாவது ஜாதி மதம் தாண்டி போராடும் தமிழகம் இவருக்கு பிடிக்கவில்லை, ஜாதிவாரியாக பிரிந்து சசிகலா முதல்வராகும் தமிழகமே இவர் விருப்பம் இப்படி போராடி ஒருவேளை அரசு கவிழ்ந்தால் எப்படி மறவன் அல்லது மறத்தி முதல்வராவது?, ஜல்லிகட்டு முக்குலத்தோருக்கு என்றால் மற்றசாதி ஒதுங்கும் மற சாதி வாழும், ஆட்சி பிழைக்கும் … எனும் […]

ஏன் மாட்டுக்கறி உண்ணக் கூடாது? சுப வீரபாண்டியன் கேள்வி

ஆட்டுக்கறி உண்ணும் இந்துக்கள் ஏன் மாட்டுக்கறி உண்ணக் கூடாது? சுப வீரபாண்டியன் கேள்வி மாட்டு மூளை இருந்தால் இப்படித்தான் யோசிக்க தோன்றும் வாயில் நன்றாக வருகின்றது, இவர் அப்படியே கழுதை, குதிரை, நாய் கறி எல்லாம் தின்றால் என்ன? முடியுமா? மாட்டிற்கு மக்கள் கொடுத்திருக்கும் உயரம் பெரிது, அது அவர்கள் நம்பிக்கை லாஜிக் பேசுகின்றாரம் சரி ஒரு பெண்ணை மணந்த இவர் பக்கத்து வீட்டு பெண்ணையும் மணந்தால் என்ன? தாயும் பெண் மனைவியும் பெண் ஆனால் இரு […]

உடன் பிறப்பே…

அவரால் முடிந்திருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார் “உடன்பிறப்பே நடந்துகொண்டிருக்கும் காட்சிகளை பார்த்திருப்பாய், புரட்சி என்பதன் அர்த்தம் புரியாமல் பட்டம் சூட்டி புகழபட்ட புருஷோத்தமர்கள், வசந்த சேனைகளின் அடிமை கூட்டம் உண்மையான புரட்சி என்றால் என்ன? என கண்டு கலங்கி நிற்கின்றது மான தமிழர் கூட்டம், எந்த கடற்கரையில் அண்ணா தலமையில் நாமெல்லாம் இனமானம் காகக் சீறினோமே அங்கே, அண்ணா துயிலொண்டாலும் அவர் சமாதி அருகே சீறி நிற்கின்றாது. மாநில முதல்வர் மாண்புமிகு பன்னீர்செல்வம் பிரதமரை பார்க்க சென்றிருக்கின்றாராம் ஒரு […]

சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம் : சசிகலா

சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம் : சசிகலா ம்ம்ஹூக்கும்……………………… முதல்வர் பன்னீருக்கு தெரியாதா இதெல்லாம்?, முடியாமல்தானே அலறி அடித்து ஓடியிருக்கின்றார். இதில் இவர் தீர்மானம் கொண்டுவருவாராம், சும்மா இருக்கும் போராட்டகாரர்களை பார்த்து என்னையும் நாலு திட்டு திட்டுங்கள் என அழைத்தது போல இருக்கின்றது இந்த தீர்மானம் , கடிதம், வாக்குறுதி எல்லாம் வேலைக்கு ஆகாது என சொல்லித்தானே பன்னீரை டெல்லிக்கு விரட்டியிருக்கின்றார்கள்? எங்கே இதனை மெரினா சென்று அம்மா சமாதியில் வணங்கிவிட்டு போராட்டகாரர்களிடம் சொல்லுங்கள் பார்க்கலாம்? அம்மையாருக்கு […]

தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?

உண்மையில் நல்ல தமிழக அரசாங்கம் என்ன செய்யும் தெரியுமா? “உலகிலே காளை விளையாட்டு நடக்கும் வெகுசில இடங்களில் தமிழகமும் ஒன்று. அலங்காநல்லூர், பாலமேடு, சிராவயல் போன்ற பகுதிகளில் அது விமரிசையாக விளையாடப்படும். அதனை கண்டு களிக்கவே ஓசையின்றி பல ஆயிரம் வெளிநாட்டவர்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள் தகுந்த பாதுகாப்போடு அதனை நடத்தினால் பெரும் அந்நிய செலாவணி மிஞ்சும், அரசுக்கு வருமானம் கிடைக்கும், சுற்றுலா தொழிலினை அது ஊக்குவிக்கும் எங்கிருந்தோ வந்தவன் எல்லாம் ஐபில் ஷோ காட்டி சம்பாதிக்கும் நாட்டில், காளை […]

மெரினா முதல் குமரி வரை தமிழகம் ஆர்ப்பரிக்கின்றது

மெரினா முதல் குமரி வரை தமிழகம் ஆர்ப்பரிக்கின்றது அதில் சாதி இல்லை, மதம் இல்லை, வந்தேறி வேறுபாடில்லை, கட்சி பேதமில்லை, சினிமா மன்ற தகறாறில்லை சுருக்கமாக சொன்னால் எவற்றை எல்லாம் சொல்லி தமிழனை பிரித்து வைத்தார்களோ, அந்த அரசியல் நோக்கமெல்லாம் இல்லை நாடாளும் நாடாரும் வன்னியரும் திரள்வீர் என்ற கோஷமில்லை, முக்குலத்தோர் ஆளட்டும் என கூப்பாடுல்லை, அடங்க மறு அத்து மீறு எனும் அழிச்சாட்டியமில்லை, கவுந்து கிடக்கும் கவுண்டரே நிமிருங்கள் எனும் கொங்கு தமிழ் இல்லை வந்தேறிகளை […]

மதுரையில் சீமான் உண்ணாவிரதம்..

மதுரையில் சீமான் உண்ணாவிரதம் இதே சீமான் முன்னால் என்ன பேசினார்? “காந்தி பெயரினை சொன்னல் வாந்தி வரும், உண்ணாவிரதம் எல்லாம் போரட்ட வடிவம் அல்ல‌ எங்கள் அண்ணன் பிரபாகரன் காட்டிய வழியே போராட்டம், உண்ணாவிரதம் இருந்த திலீபனுக்கு கிடைத்தது என்ன? கருணாநிதி எல்லாம் நடித்த உண்ணாவிரதத்தை நானும் நடிப்பேனா?” இப்படி எல்லாம் பேசிய சீமான் இன்று உண்ணாவிரதம் தொடங்குகின்றாராம் எப்படி இருக்கின்றது? அங்கிள் எதனை நோக்கி நகருகின்றார் தெரிகிறதா? கொஞ்சம் கொஞ்சமாக பிரபாகரன் படத்தை விட்டு விலகி […]

போராட்டத்திற்கு பின்னால் இருப்பது நடராஜன்?

ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பின்னால் இருப்பது நடராஜன் என சொல்லிகொண்டே இருக்கின்றான் சிலபேர் பொதுவாக மறைந்திருந்து செய்திகளை பரப்புவது நடராஜன் ஸ்டைல், இப்போராட்டம் வெற்றிபெறும் நிலையில் அவரே இப்படி கிளப்பிவிட வாய்ப்புகள் அதிகம் அவர் இப்படி ஜல்லிகட்டினை பெரும் போராட்டமாக்கும்  முட்டாள் அல்ல‌ பன்னீர்செல்வத்தை பதவி விலக வைக்க இப்படி எல்லாம் ஆடமுடியாது, அதற்கு கட்சிக்குள்தான் கலகம் வரவேண்டும் இது சீரியசான பிரச்சினை, கொஞ்சம் அசந்தாலும் அரசே பறிபோகும் நிலை, பின்னர் சசிகலா வந்து நான் நன்றாக ஆளுவேன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications