பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முதல்வர் நாளை பிரதமர் மோடியை சந்திக்கின்றார்

  ஜல்லிகட்டு தொடர்பாக அவசரமாக, முதல்வர்  நாளை பிரதமர் மோடியை சந்திக்கின்றார், போராட்டத்தை கைவிடுங்கள் என்ற முதல்வரின் கோரிக்கையினை மறுத்தனர் போராளிகள் இப்பொழுது ஏன் “புரட்சி தலைவி, இதய தெய்வம், போயஸ் போராளி, மெரீனா மேனகை அம்மா அவர்களின் ஆசியுடன் ஆளும் …. என கடிதம் எழுதவில்லை புறா காலில் கட்டி ஏன் அனுப்பவில்லை? அலறி அடித்து டெல்லிக்கு செல்ல என்ன அப்படி அவசரம்? காவேரி முதல் விவசாயி தற்கொலை, ஜெயா மர்மம் என எதற்கும் அசைந்துகொடுக்கா […]

ஜல்லிக்கட்டும் புறநானூறும்….

இதே திமுக அமைச்சரவை என்றால் புறநானூறை புரட்டி, அக நானூறை அறுத்து , சங்க இலக்கியங்களை பிழிந்து தமிழன் எப்படி ஏறு தழுவினான் என விளக்குவார்கள் அதாவது மாடு இவ்வளவு உயரம் இருந்தது, இப்படி எல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தன, அது அப்படி இது இப்படி என கொஞ்சம் சமாளிக்கவாது செய்வார்கள் ஜல்லிகட்டு நடந்தது, ஆனால் இப்பொழுது நடப்பது போல் அல்ல, நமது தரப்பு நியாயத்தை தகுந்த ஆதாரத்தோடு சமர்பிக்க வேண்டும், அதற்கு காலம் வேண்டும் அதனால் “தமிழறிஞர் […]

கலைஞரின் தந்திரம் பன்னீருக்கு வராது….

கலைஞர் போன்றவர்கள் முதல்வராக‌ இருந்தால் எப்படி சமாளிப்பார்கள் தெரியுமா? இப்படித்தான் விளையாட்டு நடத்தவேண்டும், ஆனால் ஆடவும் கூடாது அதே நேரம் அரசு விளையாட அனுமதி கொடுத்ததாகவும் பார்த்துகொள்ள வேண்டும் என்ன செய்வார்? இப்படி அறிவிப்பார் “ஜல்லிகட்டுக்கு பதிலாக‌ விளையாட்டாக ஸ்பெயின் பாணி காளை விளையாட்டு, காட்சிபடுத்தபடாத வீட்டில் வளர்க்கும் மாட்டுடன் விளையாடும் போட்டி இன்றுமுதல் அறிவிக்கபடுகின்றது ஒரே நிபந்தனை மாடும் ஒரே ஒரு வீரரும் தவிர யாரும் மைதானத்தில் நிற்க கூடாது, மாட்டினை வளர்ப்போர் அதே மாட்டினை […]

மாட்டினை மதித்த அளவு கூட தமிழக தமிழன் புலிகளை மதிக்கவில்லை

ஜல்லிகட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம் பெருகிற்று, சமாளிக்க முடியாமல் அரசு திணறல், வெளி நாடுகளிலும் கடும் போராட்டம், டேய் அங்கிள் பாய்ஸ் நன்றாக கண்ணை விரித்து பாருங்கள் இப்படி தன் உரிமையில் கைவைத்ததும் பொங்கும் தமிழகம்தான், 1983ல் ஈழ தமிழனுக்கும் இப்படி பொங்கியது பெரும் ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்துதான் இந்தியா அப்பிரச்சினையில் தலையிட்டு புலிகளின் குழப்படியால் எல்லாம் நாசமானது அந்த வலியான அனுபவத்தில்தான் 2009ல் புலிகள் ஒழிக்கபடும்பொழுது தமிழகம் மகா அமைதியாக இருந்தது இது என்றுமே […]

பல புகழ்பெற்ற கூட்டங்களை கண்ட சென்னை மெரீனா கடற்கரை …

சென்னை மெரீனா கடற்கரை பல புகழ்பெற்ற கூட்டங்களை கண்டது. காந்திமுதல் பாரதியார் வரை எத்தனையோ பெரும் தலைவர்கள் முழக்கமிட்ட இடம் அது. சீரணி அரங்கத்திலிருந்து கிளம்பிய அண்ணாவின் எழுச்சி உரையும், பல முழங்கங்களும் தமிழக வரலாற்றை மாற்றின‌ அந்த சீரணி அரங்கம் தற்போது இல்லை, எந்த கடற்கரையில் நியாயம் கேட்டபடி இருந்த கண்ணகி சிலை இடிக்கபட்டதோ அங்கே இருந்துதான் தமிழகத்தின் உரிமைகுரல் எழுப்பபடுகின்றது ஆனால் இந்த சின்னங்களை ஆணவத்தோடு இடித்து தள்ளிய ஜெயாவின் சமாதி அங்கேதான் இருக்கின்றது. […]

ஜல்லிகட்டிற்கு ஆதரவாக நயன்தாரா முழக்கம்

நாடெங்கும் ‘ஜல்லிக்கட்டு’ முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம் ‍, ஜல்லிகட்டிற்கு ஆதரவாக நயன் தாரா முழக்கம் திரிஷா மீது ஏதும் கோபம் இருக்கலாம் அல்லது முந்திகொள்வோம் எனும் விழிப்பு இருக்கலாம் எவ்வாறு இருந்தாலும் நயனுக்கு வாழ்த்துகள் முழங்கியதோடு நிற்காமல் அம்மணி பெசண்ட் நகர் பீச் பக்கமோ அல்லது மதுரை பக்கமோ போராட வந்தால் எப்படி இருக்கும்? அவர் நகைகடை திறந்தாலோ கடல் போல கூடினார்கள், போராட கூடினால் கேட்கவா வேண்டும்? “போராடும் இளைஞர்களுக்கு வாழ்த்து, போராட்டம் வெல்லட்டும்..” என […]

பன்னீர்செல்வம் அரசு ஏன் அஞ்சுகின்றது…

இந்த பன்னீர்செல்வம் அரசு ஏன் அஞ்சுகின்றது, தடையினை மீறி ஜல்லிகட்டை நடத்தி ஆட்சி இழந்தால் என்ன? அங்குதான் சிந்திக்கின்றார்கள், இனி தேர்தல் வைத்தால் தலைகீழாக நின்றாலும் ஜெயிக்க போவதில்லை என்பது புரிகின்றது சரி நான்கு ஆண்டுகள் ஆண்டுக்குபின்னும் அதே நிலைதான் எப்படியும் ஜெயிக்கவாய்ப்பே இல்லை. இந்த ஜல்லிகட்டிற்காக ஆட்சி இழந்தாலாவது மறுமுறை மக்கள் முன் நிற்க வாய்ப்பு கிடைக்கும் திருந்திவிட்டோம் எப்படி உங்களுக்காக பதவியினை தூக்கி எறிந்தோம் பார்த்தீர்களா? வோட்டு போடுங்கள் என மக்கள்முன் செல்லலாம் இப்படி […]

சேவல் சண்டை….

முன்பு தமிழகத்தில் நிறைய சேவல் சண்டை நடக்கும், அதுவும் பந்தய சேவல் சண்டை கொலைகளில் கூட முடிந்த சம்பங்கள் உண்டு பின்பு அது பெரும் சிக்கலாகி தடை செய்யபட்டு பின் நிபந்தனைகள் தளர்த்தபட்டு இன்று அது அவ்வளவு பெரும் வரவேற்பான போட்டி என சொல்லமுடியாது ஆனால் முன்பொரு காலத்தில் அது பெரும் கொண்டாட்டமான போட்டியாக, கிட்டதட்ட உலககோப்பை கிரிக்கெட் போல தமிழகத்தில் நடத்தபட்டிருக்கின்றது இப்பொழுதல்லா புரிகின்றது நாட்டு கோழி இனம் சுருங்கி எப்படி பிராய்லர் கோழி பெருகியதென்றும், […]

கலைஞர் முரசொலியில் இன்று எழுதினால் ….

தமிழகத்தில் இன்று மிக மகிழ்ச்சியாக இருக்கும் நபர் கலைஞர் கருணாநிதி தான் மட்டும் இன்று முதல்வராக இருந்திருந்தால் கோபலபுரத்தில் அல்லவா கும்மியடிப்பார்கள்? என அவர் சிந்தித்துகொண்டிருக்கலாம் இப்பொழுதெல்லாம் அவர் முரசொலியில் எழுதுவதில்லை எழுதினால் எப்படி இருக்கும், இப்படி இருக்கும் “உடன்பிறப்பே தமிழகம் அடையும் பரிதாபம் கண்டிருப்பாய், செயல் தலைவர் ஸ்டாலின் தலமையில் தமிழகம் ஜல்லிகட்டிற்காக போராடிகொண்டிருக்கும் பொழுது செயல்படாத தமிழக அரசு அதன் இயல்பான எருமை குணத்தில் அசை போட்டுக்கொண்டிருக்கின்றது. ஜல்லிகட்டு தமிழனின் அடையாளம் என்பதால் இதோ […]

பச்சை தமிழனின் ஆட்சியிலுமா தமிழன் கலை பறிபோவது?

11 வகையான கடற்கலன்களை கொண்டிருந்தான் தமிழன். மிதவை, தெப்பம், புனை, கட்டுமரம், ஓடம், வங்கம் என அது 11 வகையாக இருந்திருக்கின்றது என்கிறது சங்க இலங்கியங்கள் தமிழனின் வங்கம் எனும் கலன் ஓடியதாலே அது வங்ககடல் என பெயரே பெற்றது. அப்படி ஒரு வரலாறு தமிழனுக்கு இருந்தது. சுமார் 2500 டன் வரை அசால்டாக சுமந்து செல்லும் பாய்மர கப்பல்கள் அவனுக்கு இருந்தன, பருத்தி துணியினை புளியங்கொட்டை மாவில் ஊறவைத்து மிக கடினமான துணியாக்கி அதனை பாய்மரகப்பலின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications