நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்??

“எழுதியவா றேகாண் இரங்கு மடநெஞ்சேகருதியவா றாமோ கருமம் – கருதிப்போய்க்கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை..”. அதாவது பெரும் திட்டத்தோடும் எதிர்பார்ப்போடும் கற்பக மரத்திடம் சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன் வினைப் பயனே. விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக் கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்??