பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

கலைஞர் டிவியில் உத்தமர் காந்தி பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஓடிகொண்டிருக்கின்றன‌ காந்தி தேசியவாதி, இவர்கள் திராவிடவாதிகள். அவர் சாகும்பொழுதும் ஹேராம் என சொல்லிகொண்டிருந்த ஆன்மிகவாதி, இவர்களோ ராமர் படத்தை எல்லாம் அடித்த பகுத்தறிவுவாதிகள் பின் எப்படி காந்தி இவர்களுக்கு “உத்தமர் காந்தி” ஆனாரோ தெரியவில்லை [ October 2, 2018 ] ============================================================================ ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் நியமனம் நிச்சயம் பெருமைக்குரிய விஷயம், ரகுராம் ராஜனுக்கு பின் அந்த இடத்தை அடைபவர் கீதா, […]

சிதறல்கள்

கல்விக்கொரு தெய்வமுண்டு அவளருள் கம்பனுண்டு செல்வத்திற்கோர் தெய்வமுண்டு, பெரும்செல்வர் பலருண்டு வீரத்திற்கோர் தெய்வமுண்டு  வீராதி வீரருண்டு அழகுக்கோர் தெய்வமேது? அவளருள் பெற்றோர் உண்டோ? மனக்குறை பட்ட‌ கடவுள் மனதார துடித்திட்டான் மேனகை ரம்பை என படைத்து பார்த்திட்டான் ஆனாலும் முழு அழகில்லை என்றே உணர்ந்திட்டான் அழகிற்கோர் படைப்பு உருவாக்க முனைந்திட்டான் அதுவரை படைத்த அழகெல்லாம் கொட்டி புதிதாய் பல வண்ணம் கலந்தே இதுவரை இல்லா ஓவியமாய் வரைந்தே மதுவிலும் இனிதாய் படைத்தே எடுத்தான் மங்கையர் விளக்கே, மரகரத […]

தமிழ்காத்த அற்புத வரலாறு

இந்தியினை எதிர்க்க முண்ணணியில் நின்றது திமுக, செத்தது 100 பேர். வாழ்வினை தொலைத்தது ஏராளம் இந்தியினை கறுவருப்போம் என முழங்கியவர் முரசொலிமாறன். அவரின் திராவிட எழுத்தும் அவரின் முழக்கமும் கொஞ்சமல்ல‌ திராவிட தூணாகவும், தமிழ்போராளியாகவும் தமிழர் பிம்பமாகவும் முரசொலிமாறன் நின்றதெல்லாம் ஒரு காலம். அவரின் மகன் கலாநிதி மாறனின் நிறுவணம் சன் புரடக்சன் அது சர்க்கார் எனும் படத்தினை தயாரிக்கின்றதாம், சர்க்கார் என்பது தமிழா என கேட்க கூடாது, சாட்சாத் இந்தி வார்த்தை சன்டிவி தமிழ்பெயரா? என […]

திரைச்செய்திகள்

குஷ்பு குளிர்முகம் காண்டல் இனிதே அவர்புகழ் பாடுதல் அமிழ்தின் இனிதே எஞ்சா விழுச்சீர் இனிய மகளை கண்டெழுதல் காலை இனிதே.. ——————————————————————————————————————————— யார் செய்த புண்ணியமோ, இல்லை முற்பிறவி பலனோ நமது மனத்தையும் நம்மையும் தலைவி குஷ்பு ஆட்கொண்டுவிட்டார் இல்லாவிட்டால் இந்த நித்யாமேனன் நிச்சயம் தலைவி ஆகியிருப்பார் போல, இப்பொழுதும் மனம் சிந்திக்கத்தான் செய்கின்றது ஆனால் குஷ்புவிற்கு கொடுத்த இடம் , இன்னொருவருக்கு சொந்தமில்லை என்பதால் ஆபத்தில்லை. நாமெல்லாம் குஷ்புவிற்கு அடிமையாக எழுதி கொடுத்த கட்டப்பா வம்சம் […]

நாட்டிய பேரோளி பத்மினி

அந்த கேரள‌ சகோதரிகள் மூவருமே பரதநாட்டியத்தை கசடற ஆட கற்றவர்கள், கேரளம் அன்று திருவிதாங்கூர் சமஸ்தானம், அந்த திருவனந்தபுரத்தில் மன்னரின் மாளிகை உட்பட பல முக்கிய இடங்களில் அவர்கள் நடனம் அரங்கேறியது அதில் பத்மினி செல்லமாக பப்பி, அவரின் மாமா ஒருவர் அவரை தத்தெடுத்திருந்தார், அவர் பெரும் பணக்காரர் என்பதால் அன்றே மும்பை சென்னை என அவர்கள் சுற்றி கொண்டிருந்ததால் மும்பையில்  14 வயதில் இந்தி சினிமாவிலும் அந்த பெண் நடித்திருந்தாள் அந்த சகோதரிகளின் நடன நிகழ்ச்சி […]

சில்க் ஸ்மிதா

பேசா படங்கள் வந்து பின் தமிழில் பேசும்படங்கள் வந்தபொழுது தமிழக சினிமாவின் முதல் கவர்ச்சி கன்னி தவமணி தேவி (அவர் இலங்கை தமிழச்சி) அவரை குறிப்பிடும்பொழுது அக்கால சில்க் ஸ்மிதா என சொல்லும்பொழுதே புரியும் தமிழ்சினிமாவில் சில்க் ஸ்மிதாவின் அழியா இடம். ஆந்திராவின் ஏழை குடும்பத்தில் பிறந்தவர், பலவகை தோல்விகளுக்கு பின், திருமண தோல்விக்கும் பின்னர்தான் ஒப்பனை கலைஞராக சினிமாவிற்கு வந்தவர், பின் நடிகை ஆனார். அவரை சினிமாவிற்கு கொண்டுவந்தது யார் என ஆளாளுக்கு தன்னை காட்டுவார்கள். […]

அயன் லேடி

சினிமா ஒன்றே மூலதனமான கட்சி அதிமுக, ஜெயா இல்லா நிலையில் இனி பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அவர்களுக்கு சினிமா அடையாளம் தேவை அதற்காக பழனிச்சாமியோ, பன்னீரோ மேக் அப் போட்டு ராமசந்திரன் போல ஆடினால் நன்றாயிராது, ஜெயக்குமாருக்கும் ரஜினி படத்தின் வில்லன் கேரக்டர் கிடைக்கவில்லை இதனால் என்ன செய்யலாம் என பரிதவித்தவர்களுக்கு ஜெயாவின் கதையினை சினிமாக எடுத்து பாராளு மன்ற தேர்தலையொட்டி ஓடவிட்டால் என்ன? என்ற எண்ணம் வந்தாயிற்று இதனால் ஜெயா வாழ்க்கை அயன் லேடி என […]

சிதறல்கள்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது, புதன் கிடைத்தாலும் குஷ்பு போல் ஒருவர் வரவே மாட்டார். இனிய புதன் வணக்கம்.. ———————————————————————————————————————————– விஸ்வாசம் படத்தின் சண்டைக் காட்சி இணைய தளத்தில் லீக் – படக்குழுவினர் அதிர்ச்சி இந்த அஜித்குமார் என்பவர் ஏதோ ஜெட்லி, புரூஸ்லி, ஜாக்கிசான் அளவிற்கு பறந்து பறந்து சண்டை போட்டவர் போலவும், அந்த காட்சிகள் லீக் ஆனதால் உலகமே பரபரப்பானது போலவும் பில்டப். ஒரு கன்றுகுட்டியினை மிக‌ கஷ்டபட்டு அடக்கியவன் ஜல்லிகட்டு போட்டிக்குள் நுழைந்தால் எப்படி […]

கே.பி சுந்தராம்பாள்

கே.பி சுந்தராம்பாள் தமிழகம் மறக்க முடியாத பெயர். கொடுமுடி பாலம்மாள் சுந்தராம்பாள் என்பவர் அவர், மிக சிறிய வயதிலே நாடகதுறைக்கு வந்தவர். அந்த வயதிலே பெரும் பணமும், புகழும் குவித்தவர் 20 வயதிற்குள் ஏராளமான நாடுகளில் நாடகம் நடத்தி அவர் பெறாத புகழ் இல்லை, குவிக்காத செல்வமில்லை. இசை இலக்கணம் தெரிந்தவர்தான் அதை ரசிக்க முடியும் என்பதை மாற்றி, இலக்கணம் தெரியாதவர் களையும் இசையைச் சுவைக்க வழிசெய்தவர் முதலில் கே.பி.எஸ எடுத்த எடுப்பிலே உச்சஸ்தானியில் 4 கட்டை […]

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி படப்பிடிப்பு வேகமாக நடைபெறுகின்றது : செய்தி “ரஜினி சார், நானும் உங்கள வச்சி அரசியல்ல இயக்கத்தான் கால்ஷீட் கேட்டுட்டே இருக்கேன். எல்லோர் இயக்கத்திலும் நடிக்கிறீங்க, என் இயக்கத்தில் மட்டும் நடிக்கவே வரமாட்டேன்றீங்க ரஜினி சார் எவ்வளவு ஸ்கிரிப்டு, சீன் எல்லாம் வச்சிருக்கேன் தெரியுமா? ஒரே ஒரு கால்ஷீட் கொடுங்க சார், தயாரிப்பாளர் அமித்ஷா கூட ரெடியா இருக்கார் சார்.” —————————————————————————————————————————————– எத்தனை படங்கள் வந்தாலும் ரஜினிக்கு பாஷா என்பது நிச்சயம் மாஸ் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications