பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியாவில் கிறிஸ்தவம் எப்படி வந்தது?

இந்தியாவில் கிறிஸ்தவம் எப்படி வந்ததென்ற ஆராய்ச்சிக்கு பல கோணங்கள், ஆனால் ஏற்றுகொள்ள கூடிய வாதம் இதுதான் செங்கடல் பகுதிக்கும் கேரளாவிற்கும் சாலமோன் காலத்தில் இருந்தே போக்குவரத்து உண்டு, அப்படி கிறிஸ்தவம் பரவ தொடங்கிய காலத்தில் அது கேரளாவிற்கும் வந்தது. யூதர்கள் கொச்சின் வந்ததும், இஸ்லாம் கேரளா வந்ததும் அப்படித்தான் ஆனால் அது கேரளாவினை தாண்டி பரவவில்லை. கேரளாவின் சேரமன்னன் இஸ்லாமாக மாறி மெக்காவில் மரித்தும் கூட கேரளா தாண்டி இஸ்லாம் பரவவில்லை பின் அது வடக்கே இருந்துதான் […]

கார்த்திகை தீபமேற்றபோகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தமிழ் மாதங்களில் தனிசிறப்புமிக்கது கார்த்திகை மாதம் பல வகையான சிறப்புக்களை கொண்டது, கார்த்திகை தீபமும், சொக்கபனையும் இன்னும் பலவகையான தனிசிறப்புக்களையும் கொண்டது. கார்த்திகை தீப தத்துவம் மிக மிக எளிதானது, அதாவது இறைவன் ஒளிவடிவானவர் என்பது சகல மதங்களின் நம்பிக்கை, அந்த நம்பிக்கை இல்லாத மதங்கள் இல்லை, அந்த நம்பிக்கையின் இந்துமத வடிவமே கார்த்திகை தீபம். புகழ்பெற்ற திருவண்ணாமலை தலம் அதனை உலகுக்கெல்லாம் மெய்பிக்கின்றது, சிவபெருமானின் ஆதிஅந்தத்தை காணமுடியாத நிலையில் அவர் மாபெரும் ஜோதியாக தன்னை வெளிபடுத்தினார் […]

பெரும் புயலை சந்தித்திருக்கின்றது தென்னகம்

கிட்டதட்ட 25 ஆண்டுக்கு பின் பெரும் புயலை சந்தித்திருக்கின்றது தென்னகம். வானிலை அறிவிப்புகள் கனமழை இருக்க கூடும் என்றே அறிவித்தது தவிர புயல் தாக்கும் என அறிவிக்கவில்லை. புயல் உருவாகியிருக்கின்றது என்றார்கள் ஒரு புயல் உருவானால் அது இருநாள் ஆகித்தான் சேதத்தை ஏற்படுத்த கரையேறும், ஆக இது கொஞ்சம் தாமதமாகத்தான் இவர்களால் கண்டுபிடிக்கபட்டிருகின்றது இது நிச்சயம் தவறுதான், தாமதம் தான், ஆனால் இதை பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள் கனமழை வருகின்றது எச்சரிக்கை என சொன்னதே பெரிய […]

அகிலா என்பவரின் சிக்கல் பெரும் சிக்கலாகின்றது…

இந்த அகிலா என்பவரின் சிக்கல் பெரும் சிக்கலாகின்றது, சிலர் உச்சநீதிமன்ற தீர்ப்பினை விமர்சித்துகொண்டிருக்கின்றார்கள் அவருக்கு பிடித்தமான மதத்திற்கு அவர் மாறியிருக்கின்றார், அப்பொழுதுதான் வழக்குகள் பாய்ந்திருக்கின்றன, வழக்கு நடந்துகொண்டிருக்கும்பொழுது இதோ என் கணவர் என்று ஒருவருடன் நீதிமன்றம் ஏறியிருக்கின்றார் நீதிமன்றம் எந்த அடிப்படையில் வழக்கு தொடுக்கபட்டதோ அந்த அடிப்படையில் அவர் படிப்பினை தொடரலாம் என தீர்பளித்திருகின்றது, திருமணம் எல்லாம் அதற்கு பின்பு நடந்திருக்கின்றது ஆனால் ஹதியாவோ நான் சுதந்திரமாக இல்லை, என சொல்லிகொண்டிருக்கின்றார் பெரும் குழப்பமாகவும், ஒரு வித […]

நவம்பர் 22ம் தேதி மறக்கமுடியாத நாள்

இந்ந நவம்பர் 22ம் தேதி மறக்கமுடியாத நாள், இத்தேசம் 1962ல் சீனாவிடம் தோற்று பணிந்த நாள் 1962 அகோடபரில் தொடங்கிய சண்டை, நவம்பர் 21 நள்ளிரவில் முடிந்து, இந்தியா தோல்வி என்ற செய்தியுடன் நவம்பர் 22ல் முடிந்தது எப்படி தோற்றோம்? முதலாவது விஷயம் நேரு வைத்திருந்த நம்பிக்கை, மாவோவின் சீனா இந்தியா மீது பாய சோவியத் யூனியன் அனுமதிக்காது, உலக யதார்த்தபடி இங்கொரு யுத்தம் வராது என நம்பிகொண்டிருந்தார் அதில் உண்மையும் இருந்தது, மாவோ எனும் நரி […]

பரூக் அப்துல்லா நியாயத்தை சொல்லவேண்டும்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கே சொந்தமானது போல பேசிகொண்டிருக்கின்றார் பரூக் அப்துல்லா நன்றாக இருந்த மனிதர் இப்பொழுது உளற ஆரம்பித்துவிட்டார் பாதி காஷ்மீர் பாகிஸ்தானில் இருப்பது யாராலும் ஏற்றுகொள்ளமுடியாத விஷயம். அது பாகிஸ்தானின் வன்முறையால் ஆக்கிரமிக்கபட்டது அப்படி பாதி காஷ்மீர் அங்கு இருப்பதால்தான் வாக்கெடுப்பு முதல் பல விஷயங்களில் பின்னடைவு ஏற்பட்டது பாதி காஷ்மீர் அவர்களிடம் இருக்கும்பொழுது இந்திய பகுதி காஷ்மீர் தனிநாடு ஆனால் கூட அதனையும் பாகிஸ்தான் விழுங்குமே தவிர, நிம்மதியாக இருக்க விடாது பரூக் […]

மறுபடியும் சென்னையில் ஒருதலைகாதல் கொலை

மறுபடியும் சென்னையில் ஒருதலைகாதல் கொலை என்ன யழவோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் எரிந்து சாகும் கொடூர செய்திகளே தொடர்ந்து வருகின்றன‌ இந்த சைக்கோ பயலும் அந்த பெண்ணை குடும்பத்தோடு கொளுத்தியிருக்கின்றான், இதுவரை நடந்த கொலைகளில் மிக கொடூரமானது இது அவள் ஒரு பெண் , அவளுக்கும் மனம் உண்டு, உரிமை உண்டு. இவனை காதலிக்கவில்லை என சொல்ல அவளுக்கு பூரண உரிமை உண்டு இவன் என்னமோ சென்னை நாட்டு மன்னன் போலவும், அந்த பெண் இவனின் அடிமை கூட்டத்தில் […]

விண்வெளி சாதனைகளை கொச்சை படுத்த வேண்டாம்

அறம் படத்தில் என்னமும் பேசட்டும், எம்.ஆர் ராதா பேசாததையா இன்னொருவன் சினிமாவில் பேசிவிடபோகின்றான் ஆனால் ராக்கெட் தேவையில்லை என்பது போல சித்தரிப்பது கண்டிக்கதக்கது இந்தியா ஒன்றும் பணத்தில் கொழுத்தோ அல்லது ராக்கெட் விவகாரத்தில் முண்ணணியில் நிற்கவேண்டுமென்றோ ஆசைபடவில்லை அது ஒரு நிர்பந்தம், செய்தே ஆகவேண்டிய விஷயம் மளிகை கடையில் கம்பியூட்டர் எப்படி வந்தாக வேண்டிய நிலையோ அப்படி காலத்தின் கட்டாயம் செயற்கைகோள் உபயோகமும், அதனை செலுத்தும் விஷயங்களும், அதனால் பெறப்படும் ஏவுகனைகளும், செயற்கைகோளினால் கிடைக்கும் பலமுமே இன்று […]

கோவை மாவட்டம் நெகமம் அருகே ஒரு பெரும் சோகம் நிகழ்ந்திருக்கின்றது

கோவை மாவட்டம் நெகமம் அருகே ஒரு பெரும் சோகம் நிகழ்ந்திருக்கின்றது தாய் தந்தை இல்லா பெண் ஒருத்தி பாட்டிவீட்டில் வளர்ந்திருக்கின்றார், அவளுக்கு 17 வயது. அந்த வயதில் வரவேண்டிய காதலும் வந்திருக்கின்றது காதல் வந்தது தவறல்ல, அது பொருத்தமில்லாத ஒருவன் மீது வந்திருக்கின்றது மதமும் ஜாதியும் குறுக்கே நிற்க இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கின்றாகள் அப்பொழுது அப்பெண் அது வலிக்கும் என‌ அஞ்சியிருக்கின்றாள், அந்த பாதகன் தீ ஊற்றி இருவரும் செத்துவிடலாம் என திட்டம் சொல்லியிருகின்றான் எப்படி? […]

எது தமிழர் இசை? கர்நாட்டிக் இசையா? பறை இசையா?

சென்னைக்கு இசைநகரம் என்ற அடையாளம் கிடைத்ததுதான் தாமதம், வழக்கம் போல தமிழர்கள் பிரிவு பிரிவாக குத்து சண்டைக்கு கிளம்பிவிட்டார்கள் அதாவது எது தமிழர் இசை? கர்நாட்டிக் இசையா? பறை இசையா? கல்பனா அக்கா இசையா? என வரிந்துகட்டி கிளம்புகின்றார்கள் இயல், இசை, நாடகம் என இருந்தது தமிழ். இசை என்பது தமிழின் ஒரு பிரிவு அக்கால தமிழ் எழுத்துக்கள், செய்யுள் இன்னும் பல குறிப்புகள் எல்லாம் இசை வடிவில்தான் எழுதபட்டன. மனதில் பதிய வைப்பது எளிது, வார்த்தை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications