ஆடிபெருக்கு என்பது தமிழரின் நன்றிதெரிவிக்கும் விழா
தமிழகத்து கலை அடையாளங்கள், அழியா வரலாறுகள், இச்சமூகம் வாழ்வாங்கு வாழந்த அடையாளம் எல்லாம் காவேரியால் வந்தது அன்றைய தமிழகத்தின் பெரும் அடையாளம் காவேரி, தமிழும் கலையும் இசையும் அதன் கரையிலேதான் செழித்து வளர்ந்தது. அப்படியே பின்னாளில் அதன் கரையில் நாடாக இசை, கரை நாடாக இசை என உருவான அந்த இசை கர்நாடக இசை என மருவி, ஏதோ மும்மூர்த்திகள் திருவையாறில் கண்டெடுத்தாக மாறியும் போயிற்று உலகின் முதல் நாகரீக நகரங்களில் ஒன்றான கடலுள் மூழ்கிய பூம்புகார் […]