பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாடாளும் நாடார்…

நாட்டிலும் உலகிலும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்க இவர்களுக்கு வந்திருக்கும் சிக்கல் இப்படி நாடார் நாடார் பெண்ணை மட்டும் திருமணம் செய்ய வேண்டும், நாடாரோடு மட்டும் உறவு கொள்ளவேண்டுமாம் அப்படியானால் நாடார் தெருவில் , நாடார் நாட்டில், எல்லா பழக்க வழக்கமும் நாடாரோடு என்றால் அவர்கள் வாழவேண்டிய இடம் செவ்வாய்கிரகமோ அல்லது வியாழன் கிரகத்திலோ அன்றி பூமியில் அல்ல‌ ஒரு பருக்கை அரிசி முதல், விழுங்கும் மீன், ஆடு வரை அந்நிய சாதி துணையின்றி இவர்களுக்கு கிடைக்காது, உடுத்தும் […]

பொங்கலா? பொங்கல்…

படுதோல்வி தோற்றுவிட்ட விவசாயியான என்னால் பொங்கலை நினைவு கூற முடிகின்றதே அன்றி கொண்டாட முடியவில்லை.. போராட வழியின்றி மாடுகளை கதற கதற விற்றுவிட்டு, விவசாயத்தில் போராடும் பெற்றோரையும் விட்டுவிட்டு தப்பியோடி வந்தவனுக்கு பொங்கல் கொண்டாடும் அருகதையே இல்லை கொண்டாடி கொண்டிக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகள் கொஞ்ச தூரம் தள்ளி ஒரு மாட்டுபண்ணை இருப்பதாக சொன்னார்கள், சென்று ஒரு கன்றுகுட்டியினையாவது அடக்கி அப்படங்களை இந்திய ஜல்லிகட்டு எதிர்ப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்

பாரத மாதா கோயிலை பிரதமர் திறந்து வைக்கிறார்…

குமரியில், இன்று மாலை 5 மணிக்கு காணொளி காட்சி மூலம், பாரத மாதா கோயிலை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார். கட்டியிருப்பது பாரதமாதா கோயில், ஆனால் அமைந்திருப்பது விவேகானந்தா கேந்திர நிலத்தில். பாரத மாதா கோயிலை பிரதமர் திறக்கும் நிகழ்வில் தமிழக முதல்வருக்கு ஒரு அழைப்போ , தகவலோ வந்ததாக தெரியவில்லை அழைக்காவிட்டாலும் பன்னீர் செல்பவர்தான், ஆனால் போவதாகவும் செய்தி இல்லை ஆக அப்படி ஒரு நபர் சென்னையில் இருப்பதாகவே மத்திய அரசு நினைக்கவில்லை. இதனை விட […]

ஒரே சட்ட அடிப்படையில் பல முரண்பட்ட தீர்ப்புகள்..

கவுரவப் படுகொலை செய்த‌ கணவன் மனைவிக்குத் தூக்கு தண்டனை இப்படி ஒரு நீதிமன்றம் தீர்ப்புகொடுத்தால் அங்கொரு நீதிமன்றம் இனபடுகொலைகளை செய்தவர்களை எல்லாம் வடக்கே குற்றம் இல்லாதோர் விட்டுவிடுகின்றது மசூதியினை இடித்தாலும் சிக்கல் இல்லை, கும்பலாக கொளுத்தினாலும் தண்டனை இல்லை அவர்களோ பெரும் பொறுப்பிற்கெல்லாம் வந்து நியாயம் பேசுகின்றார்கள். கவரவ கொலைக்கு ஒரு நியாயம், இனபடுகொலைக்கு இன்னொரு நியாயம் சுத்தமாக ஒன்றும் புரிந்துகொள்ளமுடியாததுதான் இந்திய நீதிமன்றங்கள். ஒரே சட்ட அடிப்படையில் பல முரண்பட்ட தீர்ப்புகள்.. ஆனால் நாடு முழுக்க […]

தத்து எடுக்க மத்திய அரசு புதிய விதிமுறைகள்

குழந்தைகளை தத்து எடுக்க மத்திய அரசு புதிய விதிமுறைகள் அமல்.. மண்ணாங்கட்டி, 28 வயதும், 80 கிலோ எடையுள்ள குழந்தையினை தத்தெடுத்து அதற்கு உலக சாதனை திருமணத்தையும் செய்து வைத்த விசித்திரத்தை தமிழகம் எப்பொழுதோ பார்த்துவிட்டது, 28 வயதுள்ள , 80 கிலோ குழந்தையினை எப்படி தத்தெடுக்கலாம்? என மத்திய அரசு கேட்கவே இல்லை. சேட்டை செய்ததென்று அந்த குழந்தையினை ஓட அடித்தார்கள், அப்பொழுதும் கேட்கவே இல்லை ஆச்சரியமாக இப்பொழுது அந்த குழந்தையினை காணவே இல்லை, ஒருவேளை […]

இந்தியாவினை விற்றுகொண்டிருக்கின்றார்கள்…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் ஒரு விசித்திர அனுபவத்தை உணர்வதாக சொல்கின்றார்கள் அதாகபட்டது அவர்களிடம் பல கடைகள் மற்றும் ஹோட்டல்கள் அமெரிக்க டாலரில் பணம் செலுத்துமாறு கோருகின்றார்களாம் இதுவரை இப்படி ஒரு சிக்கல் வரவில்லை முதல் முறையாக இப்படி ஒரு நிலை வருகின்றது என்றால் அதன் விளைவுகள் மிக விபரீதமாக இருக்கும் ஏன்? உலகெல்லாம் அமெரிக்க கரன்சியின் பணம் புழங்க புழங்க அதற்கான தேவை அதிகரித்துகொண்டே இருக்கும், அவர்கள் கரன்சி வலுப்படும் பெரும் பணம் புழங்கும் […]

முகநூலுக்கு அவ்வளவு சக்தியா?

https://youtu.be/wdJWGj8wD_g   வயதான சுயநலவாதிகள் எல்லாம் கட்சிதலமைகள் காலில் விழுந்து கிடக்க, இளம்தலைமுறை யாரும் அழைக்காமலே மெரீனாவில் திரண்டிருக்கின்றது கட்சி இல்லை, தலைவர் அறிக்கை இல்லை,பேனர் இல்லை, கொடி இல்லை, ஒரு இம்சையும் இல்லை பிரியாணி இல்லை, குவார்ட்டர் இல்லை, கொண்டுவர லாரி இல்லை, தலைக்கு 500 ரூபாய் எனும் பேரமில்லை. ஆளுக்கு 100 ரூபாய் எனும் கமிஷனில்லை தமிழகத்தின் உரிமையினை மீட்டெடுக்க, ஜல்லிகட்டை நடத்த விட போராட குவிந்திருக்கின்றனர், மிக பெரும் கூட்டம் திரண்டிருக்கின்றது உண்மையில் […]

கன்னடர்கள் செய்யும் அழிச்சாட்டியம் தாங்கவில்லை

கர்நாடக தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் கன்னடர்களுக்கே வேலை புதிய சட்டத் திருத்தம் கொண்டுவருகிறது கர்நாடக அரசு அட பரிதாப கர்நாடகமே எத்தனை பன்னாட்டு கம்பெனிகள் அங்கு உண்டு, தொழில் தொடங்க யாரும் வரலாம் ஆனால் வேலையினை மட்டும் கன்னடன் செய்யவேண்டுமா? இது கன்னடம் அதனால் இந்த அமெரிக்க நிறுவண கிளையில் வாட்டாள் நாகராஜ் நான் தான் சி.இ.ஓ என அமர்ந்தால் என்னாகும்? நீங்களே வேலைதொடங்கி நீங்களே வேலைகொடுங்கள் என எல்லோரும் கிளம்பிவிட மாட்டார்களா?, டிரம்ப் வேறு […]

இனி ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது…

தமிழ்நாட்டை “இனி ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது” என ஒரு காலத்தில் சவுடால் பேசிய ரஜினிகாந்த் இன்று தனுஷ் படத்திற்கு கிளாப் அடித்துகொண்டிருக்கின்றார் அவர் எப்போழுது பேசுவார்? என்ன பேசுவார்? என யாருக்கும் தெரியாது, ஆனால் பேசவேண்டிய நேரத்தில் பேசவே மாட்டார். மத்திய அரசு கஜானாவை நிரப்புவதிலேயே கவனம்: திருநாவுக்கரசர் மத்திய அரசு இந்திய கஜானாவினை நிரப்புவதில் கவனமில்லாமல் பாகிஸ்தான் கஜானாவினை நிரப்புவதிலா கவனமாக இருக்கும்? இவர் அம்மா இறந்த அதிர்ச்சியில் என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றார், பேசட்டும் இவரின் கவனம் எங்கிருக்கின்றது? […]

வர்தா புயலுக்கு பின்னர்…..

ஒரு பக்கம் பன்னீர் விழுந்து விழுந்து சென்னையினை சீரமைக்கின்றார், இன்றிரவே சென்னை இயங்கும் என பாராட்டு பத்திரம் இன்னொரு பக்கம் சென்னை மீள பல வாரமாகும், மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை மீட்புபணி சரியில்லை, அத்தியாவசிய பொருள் தட்டுபாடு இன்னும் உண்மைநிலை வெளிகாட்டபடவில்லை என செய்திகள் வழக்கம்போல ஒன்றுமே புரியவில்லை… சென்னை செய்திகள் என்றாலே இப்பொழுதெல்லாம் மகா மர்மம்…. இப்போதைக்கு வர்தா புயல் தாக்கியது என்பதுமட்டும்தான் நம்பகமான செய்தி அப்படியே பன்னீர்செல்வம்தான் முதல்வர் என்பதனையும் நம்பலாம் சென்னையில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications