பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாமான்யர்கள் நாம்….

மோடி முடிவால் சாமானியர்களுக்கு மிகப் பெரிய பலன்: முகேஷ் அம்பானி நம்பிக்கை அட இவரையும் இவர் போன்றவர்களையும் மிக சாமனியராக நினைத்துகொண்டார் போல, பெரும் தன்னடக்கம்தான். இந்தியாவில் இவரே சாமானியர் என்றால், அடிதட்டு மக்கள் எல்லாம் ஐந்தறிவு ஜீவன்களுக்கு கீழேதான் புதிய வர்க்க அகராதி எழுதபட்டுகொண்டிருக்கின்றது. கலைந்திடும் கனவுகள்.. கண்ணீர் சிந்தும் நினைவுகள்.. இப்படியும் ஒரு காலம் இருந்தது   நான் இனி முன்பு போல பேச மாட்டேன்: டி.ராஜேந்தர் அப்படியே ஆடவும் மாட்டேன் என சொல்லுங்கள்.

பண கட்டுப்பாட்டினை தொடர்ந்து தங்க கட்டுப்பாடு

பண கட்டுப்பாட்டினை தொடர்ந்து தங்க கட்டுப்பாடும் அறிவித்துவிட்டார்கள், ஒரு பெண் 500 கிராம் வைத்துகொள்ளலாமாம், ஒரு ஆண் 100 கிராம் வைத்துகொள்ளலாம், அதற்கு மேல் வைத்திருந்தால் அரசு சும்மா இருக்காதாம் இவர்களுக்கு என்ன ஆயிற்று என தெரியவில்லை, ஒரு மாதிரியாக அறிவித்துகொண்டே இருக்கின்றார்கள். அடுத்த குறி நிச்சயம் நிலமாக இருக்கும், அது இந்திரா காலத்திலே வந்ததுதான் எனினும் இவர்கள் எப்படி அறிவிப்பார்கள் ஒருவனுக்கு 1 செண்ட் நிலம் போதும், 4 பேர் உள்ள குடும்பம் 3 அறை […]

காதலிக்காக தாய், தங்கை, தந்தையினை கொன்ற மகன்

காதலிக்கு ரூ.2 லட்சம் செலவு செய்ததால் ஏற்பட்ட தகராறில் தாய், தங்கை, தந்தையினை கொன்ற மகன், திருபத்தூர் அருகே பரிதாப‌ சம்பவம் இவனை எல்லாம் ஏன் குழந்தை திருடும் கும்பல் பிறந்த‌ அன்றே தூக்கவில்லை, குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் ஏன் கடத்தவில்லை? காதலிக்காக கொலை செய்திருக்கின்றார், அதுவும் பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும். இனி என்னாகும்? கொஞ்சநாளில் அப்பெண் இன்னொருவரை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகிவிடுவார். இவரோ குடும்பத்தை அழித்துவிட்டு, தானும் அழிந்து ஜெயிலில் செட்டிலாகிவிட்டார் […]

அல்-குவைதா தொடர்புடைய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அல் – குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட, நான்கு பேர், மதுரையில் நேற்று கைது செய்யப்பட்டனர். விஸ்வரூபம் படம் வரும்பொழுது, கமலஹாசனுக்கு எதிராக பொங்கியர்கள் எல்லாம் எங்கே? மூடிகொண்டு படுத்துவிட்டார்கள். இப்படி ஒரு சாத்தியம் இருப்பது யாருக்கு தெரியாது? ரோஜாவில் மணிரத்னம் அதனைத்தான் சொன்னார், உடனே பம்பாய் படத்து மனீஷாவிற்காக குண்டு வீசினார்கள். விஸ்வரூபத்தில் கமல் அப்படி சொன்னார் என வரிந்து கட்டி அவரை பாடாய் படுத்தினார்கள் இப்பொழுது என்ன செய்வார்கள்? யூகிக்கலாம் […]

சிறையில் நளினி ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார்

சிறையில் நளினி ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார் என ஏக அலப்பறைகள், அதில் முருகன் வெளிநாடு செல்ல இந்தியா வந்ததாகவும், சிவராசனை ஒரு ஏஜன்ட் என்ற முறையில் சந்தித்ததாகவும், இன்னும் ஏராளமான பொய்மூட்டைகளை அவிழ்த்திருக்கின்றார் இன்னொரு இடத்தில் பேரரிவாளனை காப்பாற்ற இவர் சொல்லியிருக்கும் ஒரு பொய், இவரது புத்தகத்தை அப்படியே தூக்கி தூர எறிய வைக்கின்றது அதாவது பேரரிவாளனும் புகைப்பட கலைஞனாம், அவனும் ஹரிபாபு போலவே குற்றமில்லாதவனாம், இதில்தான் வசமாக சிக்குகின்றார் நளினி பேரரிவாளன் சிறுவயது முதல் புலி […]

அம்பானி மளிகை கடையில் ரூபாய் நோட்டுக்களை மாற்றலாமாம்

ஏதோ அம்பானி மளிகை கடையில் ரூபாய் நோட்டுக்களை மாற்றலாமாம் மண்டையினை மறைத்தாலும் கொண்டையினை மறைக்க தெரியாத இந்த மோடியின் கொள்கைகளை என்ன சொல்வது இனி வங்கிகள் எதற்கும்? ரிசர்வ் வங்கி எதற்கு? எல்லா பண பரிவர்த்தனைகளையும் அம்பானியே பார்த்துகொள்வாரா? நிதி அமைச்சகம் எதற்கு? இதற்கு மேலும் மோடிக்கு வக்கலாத்து வாங்க முடியாது, எப்படியும் ஒழியட்டும் மோடி தேசத்தை காப்பாரோ இல்லையோ, இனி அவரை யாரும் காப்பாற்ற முடியாது டாலருக்கு நிகரான மதிப்பு 70ஐ நெருங்கிற்று மோடியும் இந்தியாவும் […]

மேட்டூர் நகராட்சி ஆணையாளரை பார்த்து குரைத்த நாய் அடித்துக்கொலை

மேட்டூர் நகராட்சி ஆணையாளரை பார்த்து குரைத்த நாய் அடித்துக்கொலை அதாகபட்டது அன்னார் வாக்கிங் செல்லும் பொழுது அவரை பார்த்து நாய் குரைத்துவிட்டதாம், அது ஐந்தறிவு விலங்கல்லவா? சாட்சாத் டிரம்ப் வந்தாலும் குரைக்கும், மோடி வந்தாலும் குரைக்கும் அப்படி இவரை பார்த்து குரைத்துவிட்டதாம், நான் ஆணையாளர் என அவர் குரைத்து சொன்னாலும் நாய்க்கு எப்படி புரியும்? மனிதர் உடனே நகராட்சி ஊழியர்களை அழைத்து கை காட்டியிருக்கின்றார், அடித்து கொன்றுவிட்டார்கள் விஷயம் பற்றி எரிகின்றது, நமது பத்திரிகைகள் புள்ளி கிடைத்தால் […]

பணம் பணம் பணம்….

இந்தியாவில் பெருமாற்றம் நிகழ்ந்துவிட்டது, 500 ஆண்டுகால வரலாறு ஒரு வாரத்தில் திரும்பிவிட்டது. எங்குபார்த்தாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுத்தான், 10, 100 ரூபாய் எல்லாம் யாரிடமும் இல்லை, அது ஏழைகளிடமல்லவா இருக்கும்? இப்பொழுது எல்லோரும் பணக்காரர்கள் அல்லவா? அதனால் எல்லோரிடமும் 2 ஆயிரம்தான் மினிமம். மளிகை கடைமுதல் ஜவுளிகடை வரை 2 ஆயிரம் நோட்டை கொடுத்துவிட்டு சில்லறையினை அடுத்தமாதம் வாங்கிகொள்கின்றோம் என சாவகாசமாக இந்தியர்கள் செல்கின்றார்களாம், திரும்பிய இடமெல்லாம் பழைய கரன்சிகள் தேடுவாரற்று கிடக்கின்றதாம், சில்லறை பணத்தினை […]

தண்ணீரில் பிழைக்க வைத்தான்

 தண்ணீரில் பிழைக்க வைத்தான் உலகில் எத்தனையோ தொழில்கள் உண்டு, பிழைப்புக்கள் உண்டு. ஆனால் மிக ஆபத்தான தொழில் அக்காலமுதல் இக்காலம் வரை உண்டென்றால் நிச்சயம் மீணவதொழில். அது அக்காலம் முதல் இருந்திருக்கின்றது, மனித இனம் தோன்றிய காலமுதல் மீன்பிடி தொழில் இருந்திருக்கின்றது. பழம் தமிழகம் அதனை நெய்தல் என குறிப்பிட்டிருந்தது, பாண்டிய நாட்டின் கொடியே மீன் கொடிதான். மீணவ வாழ்வு எல்லா மத நூல்களிலும் அழுத்தமாக சொல்லபட்டிருக்கின்றது மீன் என்பது மருந்தும் கூட, பைபிள் சில இடங்களில் […]

இந்திரா வரிசையில் மோடி ஒரு துணிச்சல் தலைவர்

பணமாற்றம் : கருத்துக்கள் பலவிதம்  இந்திரா வரிசையில் மோடி ஒரு துணிச்சல் தலைவர் என்றால், ஏய் மோடி கொலைகாரன், அயோக்கியன் அய்ய்கோ, யாருடம் யாரை ஒப்பிட்டாய் என பல ஒப்பாரி குரல்கள் இந்திரா மீதும் ஏக குற்றச்சாட்டு உண்டு, பஞ்சாப் அவரால் ரட்த்தகாடான வரலாறு உண்டு, இன்னும் காமராஜரை ஓரங்கட்டியது என உள்கட்சி தகறாறும் உண்டு ஆனால் அம்மகராசி செய்த பெரும்பான்மையான துணிச்சலான நடவடிக்கைகள் இந்நாட்டிற்கு பெரும் நன்மையினை, பாதுகாப்பினை கொண்டுவந்தன என்பதை மறுக்க முடியுமா? மோடி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications