பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாட்டுப் பற்றில்லா மக்களின் சுதந்திரத்தால் எந்த குடியரசும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை!

நாட்டுபற்றில்லா மக்களின் சுதந்திரத்தால் எந்த குடியரசும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை இந்தியா தனிநபர் சுதந்திரம் மிக்க நாடு என்பதில் சந்தேகமில்லை, யாரும் எந்த மதத்தின் பின்னாலும், எந்த கட்சியின் பின்னாலும் செல்லலாம், யாருக்கும் கொடி பிடிக்கலாம், எந்த நடிகன் நடிகையினையும் கொண்டாடலாம் , யாருக்கும் பாதிப்பு தராத எந்த நல்ல தொழினையும் செய்யலாம். எந்த தடையும், எந்த பிரச்சினையும் இங்கு இல்லை. தனி நபர் சுதந்திரம் என்பது உச்சத்தில் இருக்கும் நாடு இந்தியா, சட்டம் அப்படித்தான் அனுமதித்திருக்கின்றது. […]

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி…..

மோடியின் நடவடிக்கைகளை உலகம் கவனிக்கின்றது, பல நாடுகள் உன்னிப்பாக பார்க்கின்றன. முன்பு இதே நடவடிக்கையினை எடுத்து தோல்வியுற்ற நாடுகள், அக்காலம் வேறு இக்காலம் டிஜிட்டல் காலம் எனவே பொறுத்திருநதுதான் பார்க்கவேண்டும் பலனளிக்கலாம் என கருத்து சொல்கின்றது. ஒரு மிகப்பெரும் நாட்டில் இந்த திட்டம் எப்படி சாத்தியம் என்ற வயிற்றேரிச்சலில் சீனா ஏதோ புலம்புகின்றது, காரணம் பொருளாதாரம் படுத்து, சமீபத்தில் பணமதிப்பினை கூட குறைத்த தேசமது. பல நாடுகள் மிக நுட்பபமாக கவனிக்கின்றன, திட்டம் வெல்லும் என்பது பின்னால் […]

கருப்புப் பணத்தை யாரும் தொடக்கூடாது : எம். ஆர். ராதா…..

https://youtu.be/5RB1SrYk6bs இதனை விட கருப்பு பணத்தினை ஒரு நடிகன் காமெடியாக சொல்லிவிட முடியுமா? சமூகத்தை நிரம்ப நேசித்தாலொழிய ஒரு நடிகனால் இப்படி ஒரு காட்சியினை அமைத்து நடிக்க முடியாது, அவ்வளவு அழகாக சொல்லியிருக்கின்றான் எம்.ஆர் ராதாவினை ஏன் கொண்டாடுகின்றோம் என்றால் இதற்காகத்தான், “நான் வரிகட்டவில்லை, அவர்களும் கேட்கவில்லை, நான் நிறைய பாக்கி வைத்திருக்கின்றேன்..” என பகிரங்கமாக அறிவித்த நடிகன் அவன். எக்காலமும் பொருந்தி வரும் காட்சிகளை அன்றே நடித்திருக்கின்றான் அல்லவா? அவனே தலைவன், அவனே தீர்க்கதரிசி இப்படி […]

பண மாற்றம் அமைதியாகத்தானே நடக்கிறது….

இந்தியாவில் எத்தனை கலவரம் வெடித்தது, எத்தனையாயிரம் பலிகள் நடந்திருக்கின்றன‌ எல்லை பிரிவினை, காஷ்மீர், பொற்கோயில் கலவரம், சஞ்சய்காந்தி அழிச்சாட்டியம், இந்திரா கொலைக்கு பின் டெல்லி கலவரம், போபால் விபத்து, ராஜிவோடு 17 பேர் பலி, பத்ம்நாபா படுகொலை பாபர் மசூதி இடிப்பும் கலவரம், மும்பை கலவரம், மும்பை குண்டுவெடிப்பு என பெரும் வரிசை. இந்தி எதிர்ப்பு என தூண்டிவிடபட்டு செத்தது 67 பேர். மிசா காலத்தில் நடந்த மரணங்கள் என்ன? ஈழத்தில் மட்டும் உயிர்விட்ட இந்திய ராணுவத்தார் […]

மோடிஜி, தேசம் உங்கள் பின்னால் இருக்கின்றது

ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கவில்லை, அது மதிப்பிழந்து போயிற்று எனவும் அறிவிக்கபடவில்லை இதனை மாற்றிகொள்ளுங்கள், கொஞ்ச சிரமத்தை எதிர்கொள்ளுங்கள் என்றே அறிவிக்கபட்டிருக்கின்றது, சில சிரமம் இருக்கலாம் அவ்வளவுதான், அதற்குள் மோடி எல்லோர் சொத்தையும் பிடுங்கி விட்டதை போலவும், சாப்பிட்டிகொண்டிருக்கும் பொழுது தட்டை பிடுங்கியதை போலவும், கல்லா பெட்டியினை பிடுங்கிவிட்டு கடைகாரனை விரட்டியது போலவும் உடைகளை களைந்துவிட்டு மக்களை கோவணத்துடன் நிறுத்தியது போலவும் ஏக அழிச்சாட்டியங்கள். இந்த சிரமத்தை கூட தாங்கமுடியாத தேசத்து மக்கள்தான், பாகிஸ்தானை அப்படி […]

கரன்ஸி மாற்றமும், கருப்புப் பணமும்…

மோடியின் நடவடிக்கைகள் கருப்பு பணத்தினை ஒழிக்க வழி செய்யாது : ப.சிதம்பரம் மோடி முதல்முறை மத்திய ஆட்சிக்கு வந்திருக்கின்றார், சரியோ குழப்பமோ ஏதோ ஒன்றை செய்கின்றார், முயற்சிக்கின்றார் 60 வருடமாக சேறுபடிந்திருக்கும் குளத்தினை தூர்வாரும்பொழுது கலங்கத்தான் செய்யும், சேறு வரும், சுத்தபடுத்தும் போது அப்படித்தான் இருக்கும். சீழ்பட்ட கட்டியினை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யும்பொழுது வலி இருக்கத்தான் செய்யும் இந்த அசவுகரியங்களை கண்டால் நலம் பெறமுடியாது. அப்படி மோடி முயற்சிக்கின்றார், பொறுத்திருந்து பலனை காணலாம், அப்பொழுதும் பலனழிக்காவிட்டால் […]

மீத்தேன் திட்டத்தினை ரத்து செய்திருக்கும் மோடிக்கு நன்றி…

யாரேனும் நல்ல இந்தியன் தஞ்சாவூர் பக்கம், டெல்டா பக்கம் இருந்தால் மீத்தேன் திட்டத்தினை ரத்து செய்திருக்கும் மோடிக்கு நன்றி சொல்லுங்கள் நிச்சயம் இது வரவேற்கதக்கது, தமிழக கோரிக்கையினை ஏற்றிருக்க்கின்றார்கள், நியாயமான விஷயங்களுக்கு செவி மடுத்ததற்கு வாழ்த்துக்கள் ஆக இந்திய திருநாட்டில் ஒரு தேசிய கட்சியே நம்மை நல்லவிதமாக நடத்த இயலும் என இனியாவது சிந்திக்கலாம் அதாகபட்டது, திமுக அதிமுக என ஆதரித்து அவர்கள் ஏதாவது ஒரு தேசிய கட்சியினை ஆதரித்து அதன் மூலம் தமிழகத்திற்கு நன்மை கிடைக்க […]

குப்பைத்தொட்டியில் 500, 1000….

சென்னையில் குப்பை தொட்டியில் கோணிப்பையில் கட்டி வீசப்பட்ட 1000/500 ரூபாய் நோட்டுகளை அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஏன் வீசவேண்டும், வங்கியில் மாற்றினால் என்ன? இதுதான் கருப்புபணம் கணக்கில் காட்டமுடியா பணம். காட்டினால் சிறைக்கு செல்ல வைக்கும் பணம் கருப்பு பண வேட்டை அதிகாரிகளுக்கு எளிதாகி போனது, இப்பொழுதெல்லாம் குப்பை தொட்டி, கூவநதி கரை, சாலையோரம் என சாவகாசமாக அள்ளிகொண்டு அரசு கஜானாவில் சேர்த்துவிடுகின்றார்கள் ஹாயாக அலுவலகத்தில் இருந்த வருவாய் சம்பந்தபட்ட அதிகாரிகளை எல்லாம் குப்பை பொறுக்க […]

டிரம்ப் வெற்றியிலிருந்து தமிழர்கள் பாடம் படிக்கவேண்டும் : பெ.மணியரசன்

டிரம்ப் வெற்றியிலிருந்து தமிழர்கள் பாடம் படிக்கவேண்டும் : பெ.மணியரசன் அதாகபட்டது டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கருக்கே என பேசினாராம், அமெரிக்கர் நலம் காப்பேன் என சவால் விட்டாராம், அதனால் அமெரிக்கர்கள் அவரை வெற்றிபெற வைத்தார்களாம், அப்படி தமிழர்களும் தமிழ் உணர்வில் பொங்கி எழுந்து தமிழ்தேசம் கோரி இறையாண்மை காக்கவேண்டுமாம் கோமாவில் இருந்து திடீரென கண்விழித்த ஒருவனாலோ அல்லது கட்டு கட்டாய் ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாமல் கிடக்கும் அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கபட்டவனாலோ மட்டுமே இப்படி எல்லாம் சிந்திக்க முடியும் […]

வெள்ளையன் நாடு பிடிப்போம் என கனவில் கூட நினைக்கவில்லை!

வெள்ளையன் சாக்கினை தூக்கிகொண்டு முதலில் மிளகோ, கிராம்போ வாங்கத்தான் இந்தியாவிற்கு கப்பல் ஏறினான், நாடு பிடிப்போம் என கனவில் கூட நினைக்கவில்லை… முதலில் சமத்தாக வியாபாரம் செய்தவனை, சண்டைக்கு உதவிக்கு அழைத்து, அவனுக்கு எல்லாம் சொல்லிகொடுத்து அவர்கள் இந்நாட்டை ஆளலாம் எனும் அளவிற்கு அவனை கெடுத்தது இந்நாட்டு மக்கள் சத்தியமாக அவர்களே.. வரலாறு அப்படித்தான் சொல்கிறது, அப்பாவியாக வந்த வெள்ளையனுக்கு இப்படி எல்லாம் செய்யலாம் என ஆசைகாட்டி ஆளவைத்தது சாட்சாத் இந்தியர்களே பின் வெள்ளையர்கள் வெளியேற 300 […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications