பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதுதான் குஷ்பூ, இந்த தைரியம்தான் குஷ்பூ

மோடியின் அறிவிப்பால் எல்லோரும் என்ன பேச என தெரியாமல் முழித்துகொண்டிருக்க, மிக தைரியமாக ஒரு குரல் வந்திருக்கின்றது அதுவும் எதிர்கட்சியிலிருந்து வந்திருக்கின்றது அது குஷ்பூவின் குரல் இது வரவேற்கதக்க நடவடிக்கை, கருப்பு பணத்தினை முடக்கும் நடவடிக்கை என சொல்லியிருக்கும் குஷ்பூ, அன்றாடம் உழைக்கும் மக்களின் நிலையினை அரசு கவனிக்கதவறிவிட்டது என்றும் அழுத்தமாக சொல்லியிருக்கின்றார். நாட்டின் பெரிய உயிர்க்கொல்லி நோய் கருப்பு பணம் எனும் குஷ்பூவின் வார்த்தை மிக சரியானது அதாவது நிச்சயமாக செய்யவேண்டிய விஷயம் ஆனால் இந்த […]

புதிது புதிதாக ஆடை அணிகின்றார், புதிது புதிதாக கரன்சி அடிக்கின்றார்

நாட்டின் பொருளாதாரத்தை மாற்றுவது என்றால், கரன்சியினை மாற்றுவது என யார் சொல்லிகொடுத்தார்களோ தெரியவில்லை புதிது புதிதாக ஆடை அணிகின்றார், புதிது புதிதாக கரன்சி அடிக்கின்றார், அடுத்து என்ன புதுப்பிப்பார் என தெரியவில்லை சரி இந்திய பணமதிப்பு சர்வதேசத்தில் எப்படி இருகின்றது என்றால் சரிந்துகொண்டே இருக்கின்றது புது கரன்சிக்கு இந்தியா மாறிவிட்டது என்பதற்காக டாலருக்கு நிகரான மதிப்பு குறையவா போகின்றது?? விலைவாசி குறையவா போகின்றது? கோடாரியினை கூர் திட்ட வேண்டும் என்று சொன்னால், அதன் கைபிடிக்கு பல வண்ணம் […]

ஏய் 1000 ரூபாய் எடு, 500 எடு கணக்கினை காட்டு!!!

இந்தியா அல்லோலபட்டு கொண்டிருக்கின்றது, மக்கள் அல்லாடிகொண்டிருக்கின்றார்கள்,தமிழகமும் பணபரிவர்த்தனை பிரச்சினையில் தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றது, ராஜபக்சே சென்னை வந்து, தன் கொச்சை தமிழில் “தும்பி இந்தே ச்சைமேன் வூடு, விய்ய்கோ வூடு எங்கூ இர்க்க்கு” என கேட்டால் கூட பிரச்சினை இல்லை, அதுவும் நாம் தமிழர் அமைப்பினரிடம் கேட்டால் கூட கண்டுகொள்ளமாட்டார்கள், அவ்வளவு பரபரப்பு கனிமொழியும் ராசாவும் அந்த 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயினை எப்படி மாற்றபோகின்றார்கள் என பார்க்க ஆவலாய் இருக்கின்றதாம் திமுகவின் எதிரி கூட்டம். […]

ரூ 500, 1000 நோட்டு செல்லாதாம் :இது ஒருவகை எமர்ஜென்ஸி நிலை

பெரும் குழப்பத்தினை ஆரம்பித்துவிட்டது அரசு, இனி கொஞ்சநாளைக்கு மக்களின் இயல்புநிலை நிச்சயம் பாதிக்கபடும் இது ஒருவகை எமர்ஜென்ஸி நிலை எப்படிபட்ட குழப்பமெல்லாம் மக்களை பாதிக்கபோகின்றது என விரைவில் தெரியும் இந்திய மக்கள் தொகை என்ன? புழங்கும் பல்லாயிரம் கோடிகள் என்ன? மக்களுக்கும் பொதுதுறை வங்கிகளுக்கும் உள்ள விகிதாச்சாரம் என்ன? எப்படி மிக விரைவில் மக்களால் மாற்றமுடியும்? எத்தனை பேர் அட்டை கொண்டு பண பரிவர்த்தனை செய்கின்றார்கள்? மிக முன்னேறிய தேசமென்றால் எல்லா பரிவர்த்னையும் டிஜிட்டல் முறையில் நடக்கும் […]

புதிய ₹ 2000 நோட்டு

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கதை என்னவென்று தெரியவில்லை, அதில் காந்தி இருக்கின்றாரா இல்லையா எனும் சர்ச்சை ஒருபுறம். இருப்பார் என நம்புவோம். அதனை விட முக்கியம் இந்திய சின்னமான 4 சிங்க அசோக முத்திரை இருக்கின்றதா? இல்லை அதிலும் ராமரின் வில்லும், கிருஷ்ணனின் சக்கராயுதமோ புல்லாங்குழலா இருக்கின்றதா என்பது. சொல்லமுடியாது, அண்டார்ட்டிக்கா பென்குயின்களிடம் பேசமுடியாது என்பதால் மற்ற எல்லா நாடுகளுக்கும் சென்று பாரதபெருமை பேசியிருப்பவர் பிரதமர் மோடி, இனி எங்கள் பணத்தில் இப்படி அடையாளம் இருக்கும், ஏற்றுகொள்வீர் […]

கீர்த்தி சுரேஷுக்கு கோயில்

கீர்த்தி சுரேஷுக்கு கோயில் கட்டபோவதாக செய்தி # எவரெஸ்ட் சிகரத்தில் எத்தனை பேர் கொடி நாட்டினாலும் டென்சிங்கிற்கு இருக்கும் வரலாறே தனி, எத்தனை கப்பல் இந்தியா வந்தாலும் வாஸ்கோடமாகா கப்பலுக்கு இருக்கும் மரியாதையே தனி எத்தனை டோனி வந்தாலும் முதலில் கோப்பையினை வென்ற கபில்தேவின் முத்திரையே தனி அப்படி எத்தனை நடிகைகளுக்கு கோயில் கட்டினாலும், குஷ்பூவிற்கு நிலைத்து நிற்கும் புகழே தனி எத்தனை கோபுரங்கள் கட்டபட்டாலும் ராஜகோபுரம் நிச்சயம் குஷ்பூவே கோயில் கட்டபட்ட நடிகை எல்லாம் குஷ்பூவாக […]

கீழடி பொருட்களை மைசூருக்கு கொண்டு செல்கின்றார்களாம்

கீழடி பொருட்களை மைசூருக்கு கொண்டு செல்கின்றார்களாம், கீழடியில் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒன்றும் இல்லை என சொல்லிகொள்கின்றார்கள் இப்படி பல ஆயிரம் கால வரலாற்று இடம் என சொன்னால் யார் செல்வார்கள்? யார் பாதுகாப்பார்கள் ஆனால் பலகோடிரூபாய் பெறுமான இடம் என்றால் பிளாட் போட்டு விற்றுவிட்டு அமைதியாக இருப்பார்கள் அப்படிபட்ட தமிழகம் இது அதனை இது பழம்பெருமை மிக்க இடம் என சொன்னால் தமிழன் பாதுகாப்பானா? நெவர். மாறாக என்ன செய்ய வேண்டும், அருமையான யோசனை என்னவென்றால் […]

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் – அதே தயக்கம்

One Rank One Pension (OROP) ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் – அதே தயக்கம் வெள்ளையர் ஆண்ட காலத்திலே இந்தியாவில் ராணுவம் உண்டு, அது இந்தியர்களை அடக்கி வெள்ளையரை காப்பாற்ற வைக்கபட்டிருந்த அமைப்பு, பின்னாளில் 1947க்குபி அந்தபடை அப்படியே இருந்தது, இந்தியாவுடன் இணையமறுத்த சின்ன சின்ன சமஸ்தானங்களை இணைப்பதில் அதுதான் உதவியது, இல்லை என்றால் ஐதரபாத் சமஸ்தானம் இணைந்திருக்காது, கோவா சேர்ந்திருக்காது. அப்படியே காஷ்மீரால் பாகிஸ்தானுடன் மோதிகொண்டே ஒரு சராசரி ராணுவமாக இருந்தது இந்தியராணுவம். காரணம் […]

தமிழுக்கு தனி மாநில அந்தஸ்து கிடைத்ததை கொண்டாட யார் இருக்கின்றார்?

பல மாநில அரசுகள் தங்கள் மாநிலம் உருவான நாள் என கொண்டாடிகொட்டிருக்கின்றன‌ அதாவது பல நூறு ஆண்டுகள் கழித்து இது இந்தமொழி பேசும் மக்களின் மண் என ஒரு அங்கீகாரம் கிடைத்ததாகவே கருதுகின்றன‌ கோரி காலம், மொகலாயர் காலம் , பிரிட்டிசார் காலம் என பல கடந்து வந்த அங்கீகாரம் அவை, சுதந்திர இந்தியாவில்தான் சாத்தியமாயிற்று அது உண்மையும் கூட, அதாகபட்டது இம்மொழி பேசும் மக்களின் தாயக பூமி இது என பட்டா போட்டு கொடுத்தது போன்ற […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications