பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தீபாவளி வாழ்த்துக்கள்!!!

https://youtu.be/9NOPgZcxrOc தீதீ தீதீ தீதீ தீபாவளி  போடு தீதீ தீதீ தீதீ தீபாவளி    தீபாவளி இந்தியாவின் நம்பர் ஒன் பண்டிகை, ஆயிரம் பண்டிகைகள், தேர்தல் போன்ற திருவிழாக்கவள் போல நிறைய வந்தாலும் வந்தாலும் தீபாவளிக்கு போட்டி தீபாவளி மட்டுமே. மகா முக்கியமான காரணமாக சொல்லபடுவது பகவான் நாராயணன் நரகாசுரனை வதம் செய்தார் என்பது மகா ஆதாரமான நம்பிக்கை என்பது முதலாவது. இன்னும் பல வகையான காரணங்களை சொல்வார்கள், ராவணனை வதைத்த ராமபிரான் அயோத்தி திரும்பியபொழுது மக்கள் […]

நரகாசுரன் சிறப்புப் பதிவு

  கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி, முட்டாள், மடையன், கடவுள் இல்லவே இல்லை என சொல்வார்கள். ஆனால் அதே கடவுளால் கொல்லபட்ட நரகாசுரனை நம்புவன் சுயமரியதைக்காரன், திராவிடன், பகுத்தறிவுவாதி, இன உணர்வாளன், அறிவுள்ளவன் எனவும் சொல்கின்றார்கள் எப்படி இருக்கின்றது திராவிட கொள்கை? வீரப்பன் நல்லவன், அவனை கொன்ற ஜெயலலிதா அவனை விட நல்லவர் என்ற வித்தியாசமான சிந்தாந்தமும் நம் சிற்றறிவுக்கு எட்டாது. இப்படி அரிய தத்துவங்களை உலகிற்கு சொல்லிக்கொண்டிருக்கும் இயக்கம் இது. இன்னும் என்னென்ன தத்துவங்களை சொல்லபோகின்றார்களோ?? வருங்காலத்தில் […]

இந்திய ராணுவ பலம் பற்றிய தகவல்கள்…

சில வித்தியாசமான தகவல்கள் முகநூல் முழுக்க வலம் வருகின்றது, அதாவது இந்திய ராணுவ பலம் பற்றிய தகவல்கள். அதிலும் சில விழுந்து விழுந்து சிரிக்க கூடியவை, கொஞ்சமேனும் யோசிக்காலம் படித்ததில் பிடித்தது என பகிர்ந்துவிடுகின்றார்கள், அதில் பலபேர் வாவ் என பாராட்டி வேறு மோடி படத்தினை பார்த்து மகிழ்கின்றார்கள் இல்லாத பலத்தினை இருப்பதாக செய்திபரப்புவதும் வதந்தியே, அப்படி ராணுவ வதந்தியில் இந்த செய்திகள் வரும். அப்படி என்ன என்கின்றீர்களா? பிரம்மோஸ் ஏவுகனைபோன்று அமெரிக்காவிடமே இல்லை, சீனாவிடமும் இல்லை […]

இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது

“இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது” : பிரதமர் மோடி பெருமிதம் அண்ட புளுகு, ஆகாச புளுகு வரிசையில் இனி மோடி புளுகினையும் சேர்த்துவிடலாம் இஸ்ரேலின் சாமர்த்தியம் என்ன? அஞ்சாமல் அது செய்யும் அட்டகாசம் என்ன? ஒரு வீரனை இழந்தால் அது சகட்டுமேனிக்கு 100 தீவிரவாதிகளை அசாட்ல்டாக தூக்கும் துணிச்சல் என்ன? எல்லாவற்றிற்கும் மேல் எல்லாவற்றையும் செய்துவிட்டு அச்செய்திகள் வெளிவரா வண்ணம் பார்த்துகொள்வதென்ன? இன்றும் உலகில் அபாயகரமனா அணுஆயுதம் அவர்களிடம் உண்டென்றாலும், என்றாவது அவர்கள் சோதித்தார்கள் […]

இந்திய உளவுதுறை சகல இடங்களிலும் இப்பொழுது கால்பதிக்கின்றது

எல்லை தாண்டும் இந்திய மீணவர்கள் வடிவில் இந்திய உளவாளிகள் , கைது செய்த மீணவர்களில் எத்தனை உளவாளிகள் என தெரியாமல் கடும் அதிர்ச்சியில் இலங்கை இது புதிய இந்தியா, இந்திரா காலத்திற்கு பின் இப்பொழுது உளவுதுறையில் கவனம் செலுத்துகின்றது, சர்ஜிக்கல் ஆப்பரேஷனில் அதன் பங்கு அதிகம் இலங்கையில் புடவை, புண்ணாக்கு வியாபாரிகளாக இந்திய உளவாளிகள் புகுந்துவிட்டனர் என ஏற்கனவே அலறிய இலங்கை இப்பொழுது மீணவர் வடிவிலுமா? என அலறுகின்றது. ஆனால் இலங்கையரே, உளவுதுறை வைத்தெல்லாம் உங்களை உளவுபார்க்கும் […]

எல்லை தாண்டி தாக்கியது இந்திய ராணுவம்

எல்லை தாண்டி தாக்கியது இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி : கடும் பதட்டத்தில் எல்லைபகுதி இந்தியா தனது தாக்குதலை தொடங்கிவிட்டது என ராணுவ தளபதி அறிவித்திருக்கின்றார், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் ராணுவ சீருடையிலும், இந்திய காஷ்மீரில் தீவிரவாதிகளாகவும் அலையும் ஏராளமான பாகிஸ்தானியர் கொல்லபட்டிருக்கின்றனர் அதிர்ச்சியில் இருக்கும் பாகிஸ்தான் 2 வீரர்கள் செத்ததாக ஒப்புகொண்டிருக்கின்றது. அதற்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை ஒரு பலசாலி தன்னால் முடிந்தமட்டும் பார்த்துவிட்டே தன் பலமிக்க ஆயுதத்தை இறுதியாக எடுப்பான், இந்தியா அப்படித்தான் […]

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியும் நடைபெறவில்லை நடந்தவரைக்கும் ஒரு அறிக்கையுமில்லை. கேட்டால் பதில் இருக்காது, கம்மென்று இருப்பார்கள். நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரில் கிடைக்கபெற்றது என சில பொருள்களை பார்த்த நினைவு உண்டு அவ்வளவுதான். சென்னை எழும்பூர் மியூசித்தில் சில பொருட்கள் உண்டு. அவ்வளவுதான் ஆதிச்சநல்லூர் ஆராய்சி. பொருளாவது மிஞ்சி இருக்கின்றது. பண்டைய மதுரை பற்றி ஏற்கனவே குறிப்புகள் உண்டு, இப்பொழுது இருப்பது பண்டைய மதுரை அல்ல, அது சற்று தள்ளி வேரொரு இடத்தில் இருந்தது, பின்னாளில் அது அழிந்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications