பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பக்ரீத் எனும் பொதுபண்டிகை இஸ்லாமிய பண்டிகையாக மட்டும் அறியபடுகின்றது

அந்த பெரியவர் இன்றைய பாக்தாத் பக்கத்தில் ஊரில் வாழ்ந்துவந்தார், குழம்பவேண்டாம், அந்த ஊரின் பெயர் “ஊர்” தான். மிக‌ நிச்சயமாக தமிழ்பெயர்தான், அந்த பகுதி கஸ்திம் அல்லது கல்தேயா, ஹீப்ரு மொழியின் மூலபிரதி அப்படித்தான் சொல்கிறது, நமது பகுதியில் பல ஊர்கள் இருப்பது போல, அது கஸ்திம் ஊர் அல்லது ஊர் கஸ்திம். அவரும் எதற்காகவோ அந்த பகுதியினை விட்டு விலகி வெகுதொலைவில், அதாவது இன்றைய துருக்கியில் அன்று ஹாரன் என அழைக்கபட்ட இடத்திற்கு வந்தார், அதாவது […]

கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தேவமாதா பரலோக மாதா

கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தேவமாதா வழிபாட்டில் நிறைய மாதாக்கள் உண்டு, இப்பொழுது பார்க்கபோவது பரலோக மாதா. அதாவது இயேசுவின் தாய் மரியாள் அப்படியே பரலோகம் ஏறி சென்றார் என்பது அவர்கள் நம்பிக்கை. இன்றும் மரியாளுக்கு கிறிஸ்து போலவே கல்லறை ஏதுமில்லை, அவர் விண்ணகம் ஏறி சென்ற நிகழ்வு ஆகஸ்ட் 15ம் தேதி நடந்ததாக கத்தோலிக்க கிறிஸ்தவம் சொல்லிவிட்டதால், அந்நாளில் பரலோக மாதா திருவிழாக்கள் கொண்டாடபடும் தமிழகத்தில் இரு ஆலயங்கள் பரலோக மாதாவிற்கு பிரசித்தி பெற்றவை, பாரம்பரியம் மிக்கவை முதலாவது […]

அன்னை மரியாளின் திருவிழா பனிமாதா திருவிழா

அன்னை மரியாளின் திருவிழா ஒன்று கொண்டாடபட்டுகொண்டிருக்கின்றது, பனிமாதா திருவிழா என பெயர், கத்தோலிக்கத்தில் பிரதானம் பிரிவினைகள் இந்த‌ ஆலயங்களை அனுமதிக்குமா? இல்லை இல்லை இது மோசடி என சபைகள் வாதிடும், அது அவர்கள் நம்பிக்கை. கேட்டால் இயேசு ஒருவர்தான் நமக்காக சிலுவையில் தொங்கினார் என்பார்கள், இல்லையே கூட இருவர் தொங்கினார்கள் என்றால் முறைப்பார்கள் இயேசு பாடுபட்டு நம்மை மீட்டார் என்பார்கள், பரபாஸ் எனும் கள்ளனையும் விடுதலை செய்தார் என்றால் “அப்பாலே போ சாத்தனே” என ஒரு மாதிரி […]

வாழ்க கொடை விழாக்கள்

ஆனி ஆடி மாதங்களில் தமிழகத்தின் கொடை காலங்கள், கொண்டாட்ட மாதங்கள், திரும்பும் பக்கமெல்லாம் ஒலிபெருக்கியில் “ஆத்தாடி மாரியம்மா” என எல்.ஆர் ஈஸ்வரி அம்மனை அழைப்பார், மண்கட்டை சுவரிலும் கோயில் கொடை விளம்பரங்கள் இருக்கும் . இரவில் 9 மணிக்கு மேல் வில்லுபாட்டு கேட்கும்,திடீர் கடைகள், ஒளிவெள்ளம், இன்னும் ஏராளம். பொதுவாக சுபகாரியங்கள் ஏதும் செய்யமாட்டார்கள், சுத்தமாக தெய்வத்திற்கு அர்ப்பணிக்கபட்ட மாதம் ஆடி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் 10நாள் விழா நடக்கும், படு விமரிசையாக கொண்டாடுவார்கள், தென்னக‌ கத்தோலிக்கர்களுக்கு […]

போதகர் திருமணம் செய்தால் என்ன?

போதகர் திருமணம் செய்தால் என்ன? திருமணம் செய்துவிட்டு கிறிஸ்தவ ஊழியம் செய்ய முடியாதா? என‌ கேட்டு பிரிந்தான் மார்ட்டின் லுத்தர் கிறிஸ்தவ ஊழியகாரனுக்கு குடும்பம் பிள்ளைகள் என வந்தால் என்னாகும் என்பதற்கு இதுதான் சான்று இதனை சொன்னால் நம்மை ஆர்.எஸ்.எஸ் என்பார்கள், கிறிஸ்தவ எதிரி என்பார்கள் கிறிஸ்தவ போதகர்கள் குடும்ப ஆதிக்கமும், அந்த புனிதமான சேவை பணம் கொட்டும் தொழிலாகவும் மாறிபோனதே இந்த அடிதடிக்கெல்லாம் காரணம் இவர்களை விட காசுக்கு ஆசைபட்டு இயேசுவினை காட்டி கொடுத்து பின் […]

சபரி மலை பெண் அடிமைதன அடையாளமல்ல

சபரிமலை இந்து மத நண்பர்களின் மத அடிப்படை நம்பிக்கை. அதில் அவர்களின் ஆதார நம்பிக்கைகளை நொறுக்கும் வண்ணமோ, மனம் புண்படும்படியோ கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அவர்கள் சமய ஆன்றோர்கள் முடிவுபடி செயல்படலாம், காலமாற்றம் எனின் அது நடைபெறலாம். அய்யப்பன் மலைமீது இருக்கும் சுவாமி, தன் பக்தர்கள் தன்னை காண எவ்வளவு இடர்களை தாண்டி வருவார்கள் என சோதித்து அறிய காத்திருப்பவர், எதனை எல்லாம் தியாகம் செய்கிறார்கள் என பார்த்து அருள் வழங்குவதில் அவருக்கொரு ஆனந்தம் அதனால் […]

திருப்பதி ஜீயருக்கு சம்பள உயர்வு

திருப்பதி ஜீயருக்கு சம்பள உயர்வு என்றவுடன் ஆளாளுக்கு பொங்குகின்றார்கள் ஆனால் பால் தினகரன் சொத்து கணக்கோ, இல்லை வேறு சாமியார்களின் சொத்து கணக்கை பற்றி எல்லாம் பேசமாட்டார்கள் வாடிகனின் தங்க குதிரை வண்டியில் தங்க கிரீடத்துடன் பவனி வருவார் போப்பாண்டவர், அது பற்றி எல்லாம் சொல்லமாட்டார்கள் அரபு நாடுகளில் மத அறிஞர்களுக்கு இருக்கும் செல்வாக்கும் காணிக்கையும் ஏராளம், ஈரானில் கோமேனிகள் வைத்ததே சட்டம் வேளாங்கண்ணி ஆலயத்தின் காணிக்கை கணக்கு கூட தெரியாத நாட்டில்தான் திருப்பதி ஜீயரின் சம்பள […]

சில பாதிரிகள் தப்பாக இருக்கலாம் ….

வேறு என்ன மண்ணாங்கட்டிக்கு எங்கோ நடக்கும் மாட்டுகறி சர்ச்சைக்கும், மதவெறிக்கும் மொத்த இந்துக்களும் அப்படித்தான் இது இந்துத்வ வெறி, ஆர்.எஸ்.எஸ் சதி என குதிக்கின்றீர்கள்? நித்தி, ஜக்கி போன்ற சில பிராடு சாமிகளுக்காக மொத்த சாமியும் இந்து மதமும் பிராடு என பழிக்கின்றீர்கள்? மோசமானவர்களும் மகா நல்லவர்களும் எல்லா சாதியிலும் மதத்திலும் உண்டு, ஒரு சிலர் செய்வதை வைத்து மொத்த மக்களையும் சாடுவதை இனியாவது பாதிரிகள் நிறுத்தட்டும் “உன் கண்ணிலுள்ள தூசை எடு அதன் பின் உன் […]

கேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை சீரழித்த 5 பாதிரியார்கள்

கேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை சீரழித்த 5 பாதிரியார்கள் மேல் நடவடிக்கை : செய்தி பாவமன்னிப்பு என்பது கத்தோலிக்க திருச்சபையில் மட்டும் நடக்கும் நிகழ்வு, சீரோ மலபார், ரஷ்யன் ஆர்தோடக்ஸ் சபைகளிலும் அதன் சாயல் உண்டு பாவமன்னிப்பினை ஒருவர் பாதிரியிடம் அறிக்கையிட்டால், அது ரகசியமாக வைக்கபடவேண்டும் என்பது திருச்சபை விதி இந்த பாதக பாதிரிகள் அதை வைத்தே அப்பெண்ணை மிரட்டி சீரழித்திருக்கின்றார்கள் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை சிலர் கொல்ல முயன்றபொழுது, உங்களில் குற்றமில்லாதவன் முதற்கல்லை எறியட்டும் என […]

ரமலான் வாழ்த்துக்கள்

உலகம் கொண்டாடும் சில விழாக்களில் ரமலான் பண்டிகையும் ஒன்று, நிச்சயம் இது உலக‌ பெருநாள் இந்நாளை கொண்டாடும் எல்லா இஸ்லாமிய நண்பர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம் நோன்பு பெருநாள் என்பது இஸ்லாமியர் கொண்டாடும் நாளாக இருந்தாலும் எல்லோரும் அவர்களோடு செர்ந்து கொண்டாடலாம், அவர்களும் அதனை உள்ளன்போடு வரவேற்கின்றார்கள், வல்ல இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும், இவ்வுலகிற்கு சாந்தமும் அமைதியும் கிடைக்கட்டும் இந்த விடுமுறை காலத்தில் பாதுகாப்பான பயணமும், ஆரோகியமான உணவும் மகா முக்கியமானது, அதுதான் கொண்டாட்டங்களின் அடிப்படை நண்பர்கள் அதனை பின்பற்றி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications