பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈஸ்டர் கொண்டாடும் எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

நேற்று கதற கதற சிலுவையில் கொல்லபட்ட இயேசு இன்னும் சில நிமிடங்களில் உயிர்க்க போகின்றார், அது ஈஸ்டர் என கொண்டாடபடும் ஈஸ்டர் என்றால் என்ன பொருள்? பைபிளிலும் இருக்காது, எந்த குருவிடமும் பதில் இருக்காது ஈஸ்டர் என்பது மேற்காசியாவில் கொண்டாடபட்டுகொண்டிருந்த வசந்த கால திருவிழா அது, நமது ஊர் இசக்கி அம்மன் போன்ற இசிதோர் அல்லது ஈஷ்தோர் என அழைக்கபட்ட தெய்வத்தின் பெயரால் அழைக்கபட்ட பண்டிகை அது முட்டை கொடுப்பது போன்ற கலாச்சாரங்கள் அவர்களிடமிருந்தே வந்தது கிறிஸ்தவம் […]

பங்குனி உத்திர நாளுக்கு தமிழகத்திற்கு தனி சிறப்பு உண்டு

பங்குனி உத்திர நாளுக்கு தமிழகத்திற்கு தனி சிறப்பு உண்டு. பங்குனி என்றால் வடமொழியில் “உச்சம்” என்று பொருள், சமஸ்கிருத கலப்புள்ள மலாய் மொழியிலும் உச்சிற்கு பங்குனி என்றே பெயர். சூரியன் உச்சிக்கு வரும் மாதம் பங்குனி,பொதுவாக வெயில் அதிகம். இம்மாதம் அது தலையின் உச்சியில் இறங்குகின்றது என்கின்றார்கள் நிலா களங்கமுள்ளது என கம்பன் முதல்,வைரமுத்துவரை பாடினாலும், பங்குனி உத்திர பௌர்ணமி களங்கம் இல்லாதது என்பது ஐதீகம்,சூரியன் உச்சத்தில் இருப்பதாலும் உத்திர நட்சத்திர அமைவிடத்தாலும் அந்த நிலவு சற்று […]

இன்று புனித வெள்ளி : கவுரவ கொலை நடந்த நாள்

12 வயது சிறுவனாக இயேசு ஜெருசலேம் கோயிலில் அவர் யூத சட்டங்களை விவாதித்தபொழுது உச்சிமுகர்ந்த குருமார்களின் மொத்த கூட்டமும், 30 வயதில் அவர் போதிக்க தொடங்கியவுடன் முறைக்க ஆரம்பித்தது. கடும் சட்ட திட்டங்களும், இறுக்கமான வாழ்க்கை முறையும் கொண்ட சமூகமாக அது அன்று விளங்கிற்று, வாழ்வது கடவுளுக்காக, அந்த கடவுள் வாழ்வது ஜெருசலேம் ஆலயத்தில். அவரை எப்படி அந்த ஆலயத்திலே தொடர்ந்து வசிக்க வைப்பது? அவரின் எல்லா கட்டளைகளையும் தவறாமல் கடைபிடிக்கவேண்டும் என்பதை தவிர எந்த சிந்தனையும் […]

பழனி நவபாஷாண சிலை தமிழரின் தனிபெரும் அடையாளம்

பழனி நவபாஷாண சிலை தமிழரின் தனிபெரும் அடையாளம் பழனி கோவிலும் அந்த நவபாஷான சிலையும் போகர் எனும் மாபெரும் மருத்துவ சித்தர் அமைத்த சிலை அது, 9 கடும் விஷங்களை கொண்டு அமைக்கபட்ட சிலை அது அதில் ஊற்றபடும் பால் ஆனால் அருமையான மருந்து போகர் எனும் சித்தர் அந்த மாபெரும் ரகசியத்தை தன் குடும்பத்திற்காவோ தனக்கு வேண்டியவர்களுக்காகவோ விட்டு செல்லவில்லை எல்லா மக்களும் பலன் பெறும் பொருட்டு சுவாமியின் சிலையாகவே அந்த ரகசியத்தில் உருவான சிலையினை […]

இன்று பெரிய வியாழன்

இன்று பெரிய வியாழன் , அதாவது இயேசுபிரான் தான் மரணிக்கபோவதை உணர்ந்து தன் சீடர்களுக்கு பிரியாவிடை கொடுத்த நாள். அன்று தன் கடைசி நாளில் சீடர்களின் கால்களை தானே கழுவினார், அப்படி இன்று கத்தோலிக்க ஆலயங்களிலும் அச்சடங்கு நடக்கும், போப் ஆண்டவரே தன் சீடர்களின் பாதங்களை கழுவுவார் கடைசி பிரியாவிடையினை இயேசு அற்புதமாக செய்தார், விவேகானந்தர் வாழ்வின் கடைசியிலும் இந்த சாயல் உண்டு இந்த பெரிய வியாழன் பொதுவாக கத்தோலிக்க ஆலயங்களிலே சிறப்பு, இந்த பிரிவினைகள் எல்லாம் […]

இன்று மகாவீரரின் பிறந்தநாள்

பண்டைய இந்தியாவில் அவ்வப்போது சில மகான்கள் உதித்தார்கள். உலகம் நிலையற்றது என்பதனையும் , வாழ்க்கை தத்துவத்தையும் வாழும் முறையையும் சொல்லி கொடுத்தார்கள். அவர்களில் ஒருவர்தான் வர்த்தமானர், 24ம் தீர்த்தங்காரர் அல்லது மகாவீரர் என்று அழைக்கபடும் மகான். உயிர்பலி அற்ற, எந்த உயிரையும் துன்புறுத்தாத , மிக அமைதியான வாழ்க்கைக்கு போதித்த அந்த மகாவீரரின் தாக்கம் இந்திய வரலாற்றில் சாதாரணம் அல்ல. அந்த மகாவீரரின் சமணமும் தமிழருக்கும், தமிழுக்கும் ஆற்றிய தொண்டு சாதரணம்ல்ல, அவர் ஒன்றும் ஆள்திரட்டி அடித்து […]

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது மகா சுவாரஸ்யமானது

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது மகா சுவாரஸ்யமானது, கிறிஸ்தவ நம்பிக்கை அங்குதான் தொடங்குகின்றது என்ன நடந்தது? இயேசு சிலுவையில் மரித்ததும் அவர் மலையில் குடைந்த கல்லறையில் அடக்கம் செய்யபட்டார், துணி சுற்றி கல்லறையில் வைத்து வாசலில் கல்லும் வைத்து அடைக்கபட்டது யூதர்கள் கோரிக்கைபடி அதில் ரோம அரசின் முத்திரை இடபட்டு காவலாளிகளும் நிறுத்தபட்டனர் இதுவரை 4 நற்செய்தியும் சரியாக சொல்கின்றது அதன் பின் 4 நற்செய்தியும் மாற்றி சொல்கின்றன‌ அதாவது வானதூதர் வந்து கல்லை புரட்டினார், காவலர் […]

இயேசு உயிர்த்தெழுந்தார் என நம்புவது கிறிஸ்தவர் மட்டுமே

இயேசு உயிர்த்தெழுந்தார் என நம்புவது கிறிஸ்தவர் மட்டுமே உண்மையில் கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சியினை கண்டவர் யாருமில்லை, பகிரங்கமாக மக்கள் முன் வரவுமில்லை, ஆனால் தன் சீடர்களுக்கு அதன் பின் காட்சி கொடுப்பதும் மறைவதுமாக மாய வாழ்க்கைத்தான் நடத்தினார் ஆனால் இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதுதான் கிறிஸ்தவ நம்பிக்கை, அடிப்படை விசுவாசம் கூட . அதை நம்பினால் அவன் தான் கிறிஸ்தவன் நான் கூட அதனை நம்பும் கிறிஸ்தவன், கிறிஸ்து உயிரோடு எழும்பினார் என நம்புகின்றேன், இல்லாவிட்டால் சிலுவையில் கொல்லபட்ட […]

அது என்ன குருத்தோலை ஞாயிறு?

ஓய்வுநாளில் மனிதன் ஓய்ந்திருக்க வேண்டும் என்பது கடவுள் கொடுத்த கட்டளை அதன்படி யூதர்கள் இன்றும் சனிகிழமை அதிகம் நடக்க கூட மாட்டார்கள், இன்றும் இஸ்ரேலில் கட்ட லிப்டுகளில் கூட சனிகிழமை தானே நின்று செல்லும் லிப்டுகள் உண்டு ஆம் பட்டனை தொட்டால் வேலையாம் அப்படி ஓய்வுநாளை மிக நுணுக்கமாக அனுசரிக்கின்றார்கள் இந்த கிறிஸ்தவமும் இருக்கின்றதே, இம்சைபிடித்தது. ஓய்வு நாளிலும் காலையில் எழு சர்ச்சுக்கு போ, மதியம் வரை விழுந்து கிட என பெரும் அழிச்சாட்டியம் செய்கின்றது கர்தரின் […]

இந்த கைலாச மலை சீனாவில் இருக்கே?

“ஏம்பா பக்தாஸ் இந்த பாபர் மசூதி இடிச்சிட்டு ராமர் கோவில் கட்ட ரத ஊர்வலம் போறேள் சரி இந்த கைலாச மலை சீனாவில் இருக்கே? ரதம் ஏறி அதனை மீட்கும் திட்டெமல்லாம் இல்லியா? சிவன் வாழும் அந்த புனிதமான மலைக்கு சீனா எப்படி உரிமை ஆகலாம் பக்தாளுக்கு விசா தருவேன், தரமாட்டென்னு சொல்ல அவன் யார்? ஏன் அதற்கெல்லாம் ஊர்வலம் போக மாட்டேங்கிறேள், ஏன் கைலாச உச்சியில் காவிகொடி பறக்காதா? அங்கெல்லாம் போறதில்லை, இங்கே செங்கோட்டை பக்கம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications