பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராமனுக்கு ஆலயம்

தமிழ் இலக்கியத்தின் தனிபெரும் அடையாளம் கம்பராமாயணம் கம்பன் எனும் தமிழ்கவிஞனே ராமனின் புகழை பாடித்தான் அழியா புகழ்பெற்றிருக்கின்றான் ராமரை எல்லாம் கொஞ்சகாலம் தமிழகம் மறக்கடிக்க முயன்றிருக்கலாம் , முற்றிலுமாக மறக்கடிக்கலாம் என்றால் நிச்சயம் முடியாது. ராமனும் கண்ணனும் இந்நாட்டின் மாபெரும் அடையாளங்கள். அதனை எல்லாம் ஒழித்துவிட யாராலும் முடியாது. புத்தமும், சமணமும், ஆப்கானிய மன்னர்களும் செய்யமுடியாததை திராவிட கருஞ்சட்டைகளும் செய்துவிட முடியாது. இதனை புரிந்து அரசியல் கட்சிகள் பேசுவது நல்லது, நாத்திகவாத காலமெல்லாம் கடந்துவிட்டது, அந்த மண்குதிரை […]

இந்து கிறிஸ்தவ சர்ச்சைகள்

ஏதோ இந்து கிறிஸ்தவ சர்ச்சைகள் இன்றுதான் தமிழகத்தில் முளைக்க தொடங்கி இருப்பது போலவும், அதற்கு முன்பு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மிக அமைதியாக இருந்தது போலவும் பலர் பேசிகொண்டிருக்கின்றார்கள் கிறிஸ்தவம் இந்தியாவில் 1900 ஆண்டுகளுக்கு முன்பே அரேபிய கேரள தொடர்பால் கேரளாவிற்கு வந்தது ஆனால் பெரிதாக பரவவில்லை. காரணம் வந்தது சீரிய கத்தோலிக்க சபை அதன் பின் 1500களில் வாஸ்கோடகாமா வந்தபொழுது கிறிஸ்தவம் வந்தது, போர்த்துகீசியரின் கோவாவில் அது பரவிற்று, கேரளாவிலும் பரவிற்று ஆனால் வலுகட்டாயமாக அல்ல. கடலோரங்களில் […]

இங்கே ஆளாளுக்கு கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் வாழ்க என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

இங்கே ஆளாளுக்கு கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் வாழ்க என சொல்லிகொண்டிருக்கின்றார்கள், டிரம்ப் கூட ஜெருசலேமிற்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றுவேன் என சொல்லிகொண்டிருக்கின்றார் ஆனால் அங்கே நிலை என்ன? கிறிஸ்துவை யூதர்களுக்கு கொஞ்சமும் இன்றுவரை பிடிக்காது, அவர் தங்கள் பெருமையினை கெடுக்க வந்த கோடாரி காம்பாகவே கருதுகின்றார்கள். தாங்கள் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் இயேசு எனும் குட்டிசாத்தானே முழு காரணம் என்பது அவர்களின் மனமார்ந்த நம்பிக்கை அதனால் ஜெருசலேமில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களை எல்லாம் கண்டுகொள்வதில்லை, சிலவற்றை பல்லை கடித்துகொண்டு பொறுத்துகொள்கின்றார்கள் […]

காஞ்சி பீடத்தின் உச்ச குருவான சங்கராச்ச்சாரியார் மரணம்

இது துயர அதிர்ச்சி செய்திகள் வரும் வாரம் போலிருக்கின்றது, காஞ்சி பீடத்தின் உச்ச குருவான சங்கராச்ச்சாரியார் மரணம் அடைந்துவிட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன‌ இந்துக்களின் மிக புனிதமான , உயரமான பீடம் அது. அந்த பாரம்பரியமிக்க‌ பீடத்தின் அதி உச்ச குருவாக இருந்து வழிநடத்தியவர் சங்கராச்சாரியார். அவர் மீது கொலை சர்ச்சைகளும் வந்தன. ஆனானபட்ட போப் ஆண்டவர் கூடத்தான் அக்காலத்தில் சிலுவை போரை ஆரம்பித்து ரத்த ஆறு புனிதமான ஜெருசலேமில் ஓட காரணமாயிருந்திருக்கின்றார், அவர் கொலையாளி என […]

அயோக்கிய சாமியார்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றார்கள்

கேரளாவில் தாமஸ் என்றொரு பாதிரி இருந்திருக்கின்றார், அவர் இணையத்தில் நற்செய்தி சொல்ல முகநூல் எல்லாம் வந்திருக்கின்றார் வங்கதேச பெண்ணொருத்திக்கு இவர் நற்செய்தி சொல்ல முயன்றபொழுது மன்மதன் எங்கிருந்தோ அம்புகளை ஏவி விட்டிருக்கின்றான், ஏனோ கடவுள் அதை தடுக்கவில்லை அப்பெண்ணும் இவரை சந்திக்க வந்திருக்கின்றாள், கனி கையில் கிடைத்த ஆதாம் போல இவரும் விழுங்கிவிட்டாராம் , என்ன இருந்தாலும் பைபிள் படித்தவர் அல்லவா? அதனால் இனி துறவறம் கலைந்து இல்லறம் புகுவோம் , இப்போதைக்க் வங்கம் போ என […]

இன்று கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன்

இன்று கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் அதாகபட்டது கிறிஸ்து இயேசு சிலுவலையில் அறையபட்ட வெள்ளிக்கு முன்பாக 40 நாள் விரதம் இருப்பது கிறிஸ்தவ சம்பிரதாயம், ஏன் என்றால் கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்தார், அதனால் இந்த 40 நாளாவது நமது பாவங்களை நினைத்து மன்னிப்பு கேட்டுவிடலாம், என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ மரபு அடுத்தால் செய்யபோகும் பாவத்திற்கு அடுத்த வருடம் 40 நாட்கள் மற்ற கிறிஸ்தவர்களில் சிலர் அனுசரிப்பார்கள், சிலர் பைபிளை படித்து, கரைத்து, உலுக்கி , கொட்டி பார்த்துவிட்டு […]

சிவன் தத்துவமும், மிக்கேல் அதிதூதர் தத்துவமும் ஒன்றே

கன்னியாகுமரி பக்கம் இப்படி ஒரு படம் வருவதாக செய்திகள் சொல்கின்றன‌ அப்படி வந்திருந்தால் , இது உண்மையான செய்தி என நிரூபிக்கபட்டால் நிச்சயம் செய்தவனுக்கு மிக கடுமையான தண்டனை கொடுத்தாக வேண்டும் என்ன செய்திருக்கின்றான்? விஷயம் வில்லங்கமானது அதாவது கத்தோலிக்க / யூத வழிபாட்டில் புனித மிக்கேல் அதிதூதர் என்பவர் முக்கியமானவர். அவர் சாத்தானை சண்டையிட்டு காலில் போட்டு மிதித்தார் என்பது நம்பிக்கை, அதனால் அவர் சிலை இருக்குமிடமெல்லாம் சாத்தானும் காலில் இருக்கும் குமரி மாவட்டம் ராஜாவூர் […]

முருக பக்தர்கள் இன்று தை பூசத்தை கொண்டாடுகின்றார்கள்

உலகெல்லாம் வாழும் முருக பக்தர்கள் இன்று தை பூசத்தை கொண்டாடுகின்றார்கள் நட்சத்திர மண்டலத்தின் 8ம் நட்சத்திரமான பூசம், தைமாதத்தில் பவுர்ணமி திதியோடு கூடிவரும் நாளில் தைபூசம் கொண்டாடபடும் முருகனுக்கு உகந்த நட்சத்திரங்களில் பூசமும் ஒன்று. இந்நாளில்தான் அன்னை பார்வதி அசுரரை அழிக்க முருகனுக்கு வேல் கொடுத்தார் என்கின்றது புராணம் இந்நாளுக்காக மார்கழி மாதமே முருக பக்தர்கள் விரதம் ஆரம்பிப்பார்கள், அது துளசி விரதம் என அழைக்கபடும். நாளெல்லாம் கந்த சஷ்டி கவசம் எல்லாம் பாடி அவரை தொழுவார்கள், […]

பொங்கல் மதங்களை தாண்டியது

கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கலை கொண்டாடுவது ஏதோ ஆச்சரியம் போல சிலர் பேசிகொண்டிருக்கின்றார்கள் இதில் என்ன ஆச்சரியம்? கத்தோலிக்கம் உலகம் முழுக்க அந்தந்த மக்கள் தங்கள் கலாச்சார அடிப்படையில் கிறிஸ்துவத்தை பின்பற்ற அனுமதிக்கின்றது கோவிலில் கொடிமரம் வைத்தல், தேர் இழுத்தல், முளப்பாரி, தவில் , நாதஸ்வரம், சந்தணம், மாலை சாற்றுதல் என எல்லா தமிழர் கலாச்சாரத்தில் இணைந்துதான் இங்கு அது நிலைத்திருக்கின்றது ஆக அந்த ஆலயங்களில் பொங்கல் விழா நடப்பது ஆச்சரியமே அல்ல, நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம் […]

வைரமுத்து தமிழ்பெண்ணான ஆண்டாளை பற்றி …

மிஸ்டர் வைரமுத்து தமிழ்பெண்ணான ஆண்டாளை பற்றி அமெரிக்க நூல் சொன்னதைத்தான் சொல்வீரா? தமிழக இலக்கியம் சொன்னதை சொல்ல மாட்டீரா? அதே அமெரிக்க ஆய்வாளர்கள் தமிழகத்தில் சிலரை பற்றி என்னவெல்லாமோ சொல்லியிருக்கின்றார்கள், திராவிட அரசியலுக்கு அமெரிக்க ஆதரவு உண்டு என்பதெல்லாம் பேசபட்டவை எழுதபட்டவை அண்ணாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கிய ஏல் பல்கலைகழக சர்சை, சென்னை கோட்டையில் ஏல் பற்றிய கோப்பு காணாமல் போன சர்ச்சை என ஏராளம் உண்டு திராவிடம் பேசும் தமிழரும் , ஈழத்தவரும் சேர்ந்து பெரும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications