காளிதாசனின் ரகுவம்சம் : 08
காளிதாசனின் ரகுவம்சம் : 08 சிம்மம் திலீபனிடம் பேசத் தொடங்கிற்று. “மன்னனே, காற்று இம்மலையினை அசைக்குமோ சொல்? அப்படி உன் அஸ்திரங்களெல்லாம் என்னை வென்றுவிடமுடியாது. நீ வலிமையுடவன் என்றாலும் என்னிடம் உன் வலிமை நில்லாது. நான் யார் என்பதை முதலில் அறிந்துகொள் மன்னா. நானே கும்போதரன், வெண்மையான விடையின் மேல் அந்தப் பரமசிவன் ஏறும் போது என் முதுகின் மேல் தன் பாதம் பதித்தே ஏறுவார். ஆம், பரமனின் பாதங்களைத் தினமும் தாங்கும் பேறுபெற்றவன் நான் அதனால் […]