காளிதாசனின் மேகதூதம் : 12
பதினோறாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே, நீ என் காதலி தூங்கிகொண்டிருக்கும் போது சென்றால் அவளை எழுப்பிவிடாதே, அவள் விழிக்கும் வரை அருகில் காத்திரு. காரணம் கனவில்தான் அவள் என்னை கண்டு என் கழுத்தினை அவள் தன்கொடி போன்ற கரங்களால் வளைத்து தழுவி மகிழ்ந்து கொண்டிருப்பாள், அவள் மகிழ்வாக இருக்கும் மிகச்சிறிய நேரம் அதுதான், அதனை நீ கெடுத்துவிட கூடாது அதனால் பொறுமையாக காத்திருப்பாய். மேகமே அவள் கண்விழிக்கும் நேரம், நீ உன் நீர்திவலைகளுடன் கூடிய குளிர்ந்த காற்றை […]