பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேவி மாஹாத்மியம் : 10 / 13 – சும்ப நிசும்ப வதம்

த்யானம் – தேவி துதி “ஓம். முக்கண் உடையவளும், சாம்பல் நிறமான பந்தூக புஷ்பத்தின் நிறத்துடன், உருக்கிய தங்கமாய் ஜொலிப்பவளும், கைகளில் பாசம், அங்குசம், புஷ்பபானம் கொண்டு அபய முத்திரையுடன், அந்த அர்த்தநாரீஸ்வரரின் பாதியாகவும், மூன்று கண்களுடன் பிறை சந்திரனையே தன் ஆபரணமாக்கி கொண்ட என் தாயை இரவு பகலுமாக எந்நேரமும் போற்றி வணங்குகிறேன். ஓம். தீயில் சுடப்பட்ட பசும்பொன்னாய் மிளிர்ந்து, சூரியன், சந்திரன், அக்னி ஆகிய தேவர்களையே தன் முக்கண்களாய் கொண்டு, அழகிய கரங்களில் பாசம், […]

தேவி மாஹாத்மியம் : 09 / 13 – ரக்த பீஜ வதம்

த்யானம் – தேவி துதி “செந்நிற மேனி கொண்டு அலை அலையாய் கருணை பொழியும் ப்ரகாசத்துடன் கூடிய மிக அழகான கண்களைக்கொண்டு, கையில் பாசம், அங்குசம், வில், மலர் அம்புகளை ஏந்தி, தன் கிரணங்களாலேயே அனைவரையும் கவர்ந்து, அனிமா, மகிமா போன்ற அஷ்டமா ஸித்திகளை தன்னுள் நிறுத்தி என்னுள் நிறைந்த பைரவியை நான் வணங்குகிறேன்” சண்டனுங் கொல்லப்பட்டு முண்டனும் வீழ்த்தப் பட்டு, சைனியமும் வெகுவாக நாசமாக்கப்பட்டபின் பிரதாபம் மிக்க அசுர ராஜனான சும்பன் கோபத்தால் மதிகெட்டு, அசுரர் […]

தேவி மஹாத்மியம் : 08 / 13 – சண்ட முண்ட வதம்

த்யானம் – தேவி துதி “சிரசில் பிறை சந்திரனை சூடியவளும், நெற்றியில் கலை நுட்பத்துடன் கூடிய திலகம் அணிந்தவளும் மென்மையான மதத்துடன் கூடிய புன்சிரிப்பு தவழும் அழகிய முகம் உடையவளும், உடலோடு ஒட்டிய சிவந்த நிற பட்டாடை, ஆம்பல் பூமாலை தரித்தவளும், கையில் சங்கு பாத்திரத்துடன், தாமரையின் மீது காலை பதித்தபடி கிளிகளின் இனிய மொழியை கேட்டவாறே கைகளால் வீணையை வாசித்துக் கொண்டு, நவரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அம்ருதமயமான ராஜமாதங்கியை நான் த்யானிக்கிறேன்.” அங்ஙனம் கட்டளையிடப்பட்ட சண்டமுண்டர்கள் […]

தேவி மஹாமித்யம் : 07 / 13 – தூம்ரலோசன வதம்

த்யானம் – “நாகங்களின் தலைவனான நாகராஜனை குடையாகக் கொண்டவளும், தனது கொடி போன்ற மேனியில் விலைமதிப்பற்ற நாகரத்தினங்களாலான நாகாபரணங்களை அணிந்தவளும், சூரிய கதிர்களை போல் ஒளிரும் முக்கண்களை உடையவளும், ஜெபமாலை, அமிர்த கலசம், கபாலம் மற்றும் தாமரையைக் கைகளில் ஏந்தியவளும், தலையில் பிறை சந்திரனை சூடியவளும், தர்பையை ஆசனமாக கொண்ட பைரவரின் மடியில் அமர்ந்து காட்சியளிப்பவளுமான பத்மாவதி தாயை நான் தியானிக்கிறேன்” தேவி சும்பனுக்கு கூறிய பதிலை தூதன் சென்று தெரிவித்தான், தேவி தங்களை போருக்கு அழைத்தது […]

தேவி மஹாமித்யம் : 06 / 13 – தேவீ தூத ஸம்வாதம் (தூதனுடன் உரையாடல்)

“மஹாஸரஸ்வதீ தியானம்” மணி, சூலம், கலப்பை, சங்கம், உலக்கை, சக்கரம், வில் அம்பு ஆகியவற்றைத் தனது தாமரைக் கைகளில் தரிப்பவளும், மேகத்திடை விளங்கும் குளிர்ந்த சந்திரனைப் போன்ற பிரபையுடன் பிரகாசிப்பவளும், கௌரியின் தேகத்திலுதித்தவளும், மூவுலகிற்கும் ஆதாரமாகியவளும், அபூர்வ வடிவினளும், சும்பன் முதலிய அசுரர்களை நாசஞ் செய்தவளும் ஆகிய மஹா ஸரஸ்வதியைத் தியானிக்கின்றேன். முன்னொருகால் சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களால் இந்திரனுடைய மூவுலக ஆட்சியும் யஜ்ஞபாகங்களும் பலத்தாலும் கொழுப்பாலும் அபகரிக்கப்பட்டன. சூரியன், சந்திரன், குபேரன், யமன், வருணன் முதலியோருடைய […]

தேவி மஹாத்மியம் : 05 / 13 – தேவி துதி (அபராஜித ஸ்துதி)

“முப்பத்து முக்கோடி தேவர்களால் சூழப்பட்டவளும், ஜயத்தை விரும்பும் பக்தர்களால் ஆராதிக்கப்பட்டவளும், தனது ஒளியால் மூவுலகங்களிலும் இருளை அகற்றுபவளும், தனது கடைக்கண் பார்வையால் எதிரிகளின் மனதில் அச்சத்தை உண்டாக்குபவளும், தீயனவற்றை தூசு போல சுட்டெரித்து ஒளிர்பவளும், கரங்களில் சங்கு, சக்கரம், வாள், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி, சிரசில் பிறைசந்திரனை சூடியவளும், மூன்று கண்களையுடையவளும், சிங்கத்தின் மீது அமர்ந்தவளுமான ஜயா என்ற பெயருடைய துர்க்கையை நான் தியானிக்கிறேன்” வீரியம் மிக்கவனாயினும் துராத்மாவாகிய அம்மஹிஷாசுரனும் அவ்வசுரச்சேனையும் தேவியால் அழிக்கப்பட்ட பின் தேவேந்திரனும் […]

தேவி மஹாத்மியம் : 04 / 13 – மஹிஷாசுர வதம்

// தேவி மஹாத்மியத்தின் நான்காம் அத்தியாயம் அதாவது மகிஷாசூர வதத்தை படிப்போரின் குடும்ப வினை தீரும், ஜென்ம சாபம் தீரும், பித்ரு சாபம், கடன் தொல்லை, தீரா பரம்பரை சிக்கல் எல்லாம் தீரும், எதிரிகள் அழிவார்கள் என்பது நம்பிக்கை நவராத்திரியின் ஐந்தாம் நாளில் இதனை படிக்கலாம், நிச்சயம் பலன் உண்டு // அன்னை துதியினை முதலில் சொல்ல வேண்டும், அதனை சொல்லி அவளை வணங்க வேண்டும் “ஓம்,ஆயிரம் கோடி உதயசூரிய செங்கிரணங்களின் ஒளியால் ஜொலிப்பவளும், தாமரை மேல் […]

தேவி மாஹாத்மியம் : 03 / 13 – மஹிஷாசுர சைன்ய வதம்

தேவி மஹாமித்யம் சொல்லும் முதல் பகுதி மகா காளிக்கானது, அடுத்த பகுதி மஹா லட்சுமிக்கானது, அந்த மஹாலட்சுமிதான் மகிஷாவர்த்தினியாக அவதரித்து மகிஷனை சங்காரம் செய்தாள் அவள் ஆவேசமான நிலையில் துர்க்கை,அமைதியான நிலையில் மஹாலஷ்மி, அவள் சிந்திக்கும் நிலையில் சரஸ்வதி என அவளுக்கு பல வடிவங்கள் உண்டு அமைதியாக இருக்கும் மஹாலட்சுமி எப்படி ஆவேசமாக உருவாகி மகிஷ படைகளோடு மோதினாள் என்பதை மகாமித்தியத்தின் இரண்டாம் பகுதி சொல்கின்றது இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் எல்லா தேவர்களும் தங்கள் சக்தியினை வழங்கி […]

தேவி மாஹாத்மியம் : 02 / 13 – ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகி

“தேவி மாஹாத்மியம்” நூலிலிருந்து சாரமான ஏழு ஸ்லோகங்களை எடுத்து “ஶ்ரீ துர்கா ஸப்தஶ்லோகீ ” என வகுத்துள்ளார்கள். ஆம், ஸ்ரீ தேவி மாஹாத்மியத்தில் இருக்கும் எழுநூறு ஸ்லோகங்களின் சாரமே, ‘ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகி”. இதை பாராயணம் செய்தால், ஸ்ரீ தேவிமாஹாத்மியம் பாராயணம் செய்த முழுப் பலனும் அடையலாம். அதுவும் அன்னைக்கு உகந்த நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். தன்னை ஜபம் செய்வோர்க்கு, ஸ்ரீ துர்க்கா ஸப்த ச்லோகீ விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் […]

தேவி மஹாத்மியம் 01 / 13 : மதுகைடப வதம்

மார்க்கண்டேய மஹரிஷி கூறினார் “எவர் சூரிய குமாரனோ, எவர் ஸாவர்ணி என்கிற எட்டாவது மனுவாக கூறப்பட்டுள்ளானோ, அந்த மனுவினுடைய சரிதத்தை விரிவாகச் சொல்கிறேன், கேட்பீராக. ஸாவர்ணி மனு, மஹாமாயையினுடைய கருணையால் அனைத்து மந்வந்த்ரங்களுக்கும் அதிபரானார். முன்பு ஸ்வாரோசிஷன் என்ற மனுவின் கால முடிவில் சைத்ர வம்சத்தில் உதித்த, ஸுரதன் என்னும் அரசன் இப்பூமண்டலம் முழுமைக்கும் தலைவனாயிருந்தான். நாட்டு மக்களை தன் குழந்தைகளைப் போல பாதுகாத்து ஆட்சி புரிந்து வந்த பொழுது கோலாவித்வம்சிகள் எனப்பட்ட க்ஷத்திரிய குல எதிரி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications