பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விவேகானந்தரின் ராமபிரான்

சுவாமி விவேகானந்தர் தன் அமெரிக்க சொற்பொழிவில் ராமனை ஏன் இந்துமதம் கொண்டாடுகின்றது, ராமன் பெருமையினை கேட்போர் மனம் உருகச் சொன்னார், அந்த உரை மஹா ஞானமானது, பரிபூரண ஞானிக்கு மட்டுமே சாத்தியமானது. “ஓ உலகத்தீரே, எங்களுக்கு இரு இதிகாசங்கள் இரு கண்கள் போன்றவை, அந்த இதிகாசங்கள் எங்கள் உயர்ந்த வேத வடிவின் வடிவங்கள். வேத நெறிகளை வாழ்க்கை முறையாக வாழ்வது எப்படி, தர்மப்படி அறத்தின்படி வாழ்ந்து பின் முக்தி அடைவது எப்படி என்பதை போதிப்பவையே எங்கள் இதிகாசங்கள். […]

கக்கன்

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு காலத்தில் தூய்மையான தியாகிகளும், மக்களை தவிர ஏதும் சிந்தியா மகா உத்தமர்களும் இருந்தார்கள், அப்படியும் ஒரு பொற்காலம் இருந்தது அப்படி ஒரு குறையும் சொல்லமுடியாத தூய்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்தான் கக்கன் , காந்தி, சாஸ்திரி, காமராஜரை போலவே மகா தூயவாழ்வு வாழ்ந்த அரசியல் மகான் அவர் சுதந்திரபோராட்ட தியாகி, வெள்ளையனிடம் சிறையில் சித்திரவதை பட்டவர்களில் அவரும் உண்டு, கடுமையான அடிகள் அவை சுதந்திர இந்திய பொதுதேர்தலில் மதுரை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர். […]

கள்ளமவுனம்

நிச்சயம் அவன் இந்த தேசத்து மாபெரும் சுதந்திர வீரன், அவனைபோல் ஒருவனை இத்தேசம் கண்டதுமில்லை காணபோவதுமில்லை அவனது மைசூர் சமஸ்தானம் இன்றைய ஜெர்மனுக்கு ஈடான பொருளாதாரத்தை கொண்டிருந்தது அதை குறிவைத்தே வெள்ளையன் போர் நடத்தினான் புகழ்பெற்ற தன் முதல் இரு போர்களில் ஆங்கிலபடைகளை கதறவைத்திருந்தான் அவன், பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் வலிய சொன்னான் “என்னை போல் ஒருவனை வரலாற்றில் திப்பு வடிவில் காண்கின்றேன்” , திப்புவுக்கு படை அனுப்ப நெப்போலியன் முடிவும் செய்திருந்தான் அந்த பாழாய்போன நெல்சன் […]

பசவண்ணா என்றொரு புரட்சியாளர்

இங்கு பாரதி , பெரியார் பிற்காலத்தில் பேசிய பெண்விடுதலையினை அன்றே கன்னடத்தில் சொன்ன பசவண்ணா என்றொரு புரட்சியாளர் இருந்தார் அவர் இந்திய வரலாற்றில் முக்கியமானவர், லிங்காயத் பிரிவு அவரால் தொடங்கபட்டது, பெரியாருக்கு 700 ஆண்டுகள் முன்பு பிறந்த பசுவண்ணா பல புரட்சி செய்தார் பசவண்ணாவினை பெரியாருடன் ஒப்பிட்டால் பசவண்ணா இந்திரா காந்தி, பெரியார் மோடி, இதற்கு மேல் நீங்களே முடிவு செய்யுங்கள் அப்படி என்ன செய்தார் என்றால் ஏகபட்ட சீர்திருத்தங்களை அன்றே செய்தார், ஆச்சரியமான புரட்சியாளர் அவர், […]

டாக்டர் சாந்தா

தமிழகக பெண்களில் மிகபெரும் பிம்பம் அவர், அரசியலுக்கு கலைஞர் என்றால் சந்தேகமின்றி சொல்லலாம் தமிழக‌ புற்று நோய் ஆராய்ச்சிக்கு அவர்தான் மிகபெரும் தொண்டாற்றியிருக்கின்றார் டாக்டர் சாந்தா அவரின் குடும்ப பாரம்பரியமே மிக பெரிது, நோபல் பரிசு பெற்றவர்களான சர் சிவி ராமனும், சந்திரசேகரும் அவரின் முன்னோர்கள் அவர்கள் இயற்பியலில் பிரகாசித்தது போலத்தான் இவரும் பிரகாசிக்க வேண்டும் என வளர்க்கபட்டார். இது குலகல்வி முறை அல்ல, குலபெருமையும் அல்ல மாறாக முன்னோர் சாதித்ததில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு […]

எல்லைகாந்தி

அன்று பிரிட்டிஷ் இந்தியாவில் கபார் கான் என்றொருவர் இருந்தார், காந்தியின் நெருங்கிய நண்பர் அவர், ஆப்கன் எல்லை பக்கம் பிறந்து வளர்ந்தவர், அவரின் தேசாபிமானம் மிக சிலாகிப்பானது யாருக்கும் குறையாத சுதந்திர போரட்ட வரலாறு அவருக்கும் உண்டு. காந்தியோடு சிறைசென்று போராடினார். பிரிவினை வந்தபொழுது அது முடியாது என மல்லுகட்டியவர் அது முடியாத பொழுது “காந்தி எங்களை கைவிடாதீர்கள், அந்த நரகத்தில் எங்களை தள்ளிவிடாதீர்கள் என கண்ணீர் விட்டு அழுதார்.” எங்களுக்கு தனி இந்தியா அமைத்து கொடுங்கள் […]

சந்திரசேகர் ஆசாத்

எண்ணற்ற தியாகிகளை சுதந்திரத்திற்காக கொடுத்தது இத்தேசம், அதுவும் இளம் தியாகிகள் ஏராளம் அவர்களில் ஒருவர்தான் சந்திரசேகர் ஆசாத். அவர் பெயர் சந்திரசேகர் , 15 வயதானபொழுது சத்தியாகிரகத்திற்காக கோர்ட்டில் நிறுத்தபட்டார், தான் யாருக்கும் அடிமை இல்லை என சொல்லி ஆசாத் சந்திரசேகர் என முழக்கமிட்டார் அன்றிலிருந்து சந்திரசேகர ஆசாத் என அறியபட்டார் காந்தி மேல் இளையொருக்கு வருத்தங்கள் வந்த காலமது, பிரிந்து சென்றவர்கள் இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்றொரு அமைப்பினை ஏற்படுத்தி வெள்ளையனை தீவிரவாதம் மூலம் விரட்ட […]

பொறுப்பான நல்ல இந்திய தலைவர்

“இந்திய விமானப்படை விமானிகளுக்கு என் வணக்கம்” – ராகுல் காந்தி துளியும் அரசியலில்லை, கொஞ்சமும் குற்றம் சாட்டவில்லை இது மோடியின் பதவி நீட்டிப்பு தந்திரமென்றோ இல்லை வேறு அரசியல் ஒப்பாரியுமில்லை ஆம் தீவிரவாதத்தால் பாட்டியினையும், தந்தையினையும் இழந்த வலி அவரிடம் இருக்கின்றது அன்றே ஈழத்து பிரபாகரனின் ஏ1 முகாமினை இந்திய விமானபடை தகர்த்திருந்தால் ராஜிவினை இத்தேசம் இழந்திருக்காது அன்று புலிகளுக்கு எதிராக இந்திய விமானபடையினை களமிறக்காதது மாபெரும் தவறு இந்த வலிகளால் வளர்ந்த ராகுலுக்கு தேசத்தின் நலமும், […]

ஒப்பற்ற தியாகி கஸ்தூரிபாய்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்பும் ஒரு பெண் இருப்பாள் என்பது பொதுவான நியதி, ஆனால் பெரும் தியாகிகளின், போராளிகள் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பது அபூர்வம் மார்க்ஸுக்கு ஜெனி போல மிக சிலருக்கே அந்த யோகம் கிடைத்திருகின்றது, அதில் ஒருவர்தான் தேசப்பிதா மகாத்மா காந்தி 13 வயதில் அவருக்கு கஸ்தூரிபாயினை திருமணம் செய்துவைத்தார்கள். கஸ்தூரி சாதாரண குடும்பத்து பெண் அல்ல, சிலப்பதிகாரத்தில் கண்ணகி போல பெரும் வியாபார குடும்பத்து வாரிசு அக்கால வழக்கபடி கஸ்தூரி கல்வி […]

சரோஜினி நாயுடு

இந்திய மகளிர் தினம் அன்று இந்திய சமூகத்தில் பெண்கள் நிலை அடக்கித்தான் வைக்கபட்டிருந்தது, மிக சில பெண்களே அந்த காலகட்டத்திலும் தங்கள் எதிர்காலம் , சமூகம் போன்ற கட்டுபாடுகளை தகர்த்து பிரகாசித்தனர், அவர்களில் ஒருவர் சரோஜினி நாயுடு அவர் வங்க‌ பிராமண குடும்பத்து பெண், ஆனால் ஆந்திராவில் பிறந்தவர் அதன் பின் அன்றே கலப்பு திருமணமாக நாயுடு ஒருவரை திருமணம் செய்து சரோஜினி நாயுடு என மாறினார் அவர் திருமணம் சென்னையில்தான் நடந்தது. மிக சிறந்த படிப்பாளி […]