பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வள்ளுவன் ஒரு சுத்தமான இந்து

வள்ளுவன் ஒரு சுத்தமான இந்து என்பதை எவ்வளவோ வழிகளில் சொல்லமுடியும். அதை தயக்கமின்றி விளக்கலாம். “ஆதி பகவன்” என்பது இந்துக்களின் சிவனையும் சக்தியினையும் குறிக்கும் சொல். இன்றும் “பகவதி” என்றே அன்னை ஆதி தமிழான மலையாளத்தில் அழைக்கப் படுகின்றார். “ஓம் நமோ பகவதே” என்பதே இந்து மந்திரங்களின் மூல மந்திரம், தொடக்க மந்திரமாக இன்று வரை உள்ளது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றையும் ஆதிபகவன் பெயரைச் சொல்லி அழைத்து தொடங்குவது இந்துக்கள் மரபாய் இருந்தது, வள்ளுவன் ஒரு இந்துவாக அதைச் […]

கி.வா. ஜ(கந்நாதன்)

தமிழக எழுத்துலகில் மாபெரும் அடையாளங்கள் கொண்ட பல இருந்தார்கள். அவர்களின் தமிழும் சுவையும் அது சொல்லப்பட்ட அழகும் அவ்வளவு சிலாகிப்பானது. அவர்களைப் போல எழுதவும் சொல்லவும் இன்னொருவர் வரமுடியாது எனும் அளவு மேதைகள் அவர்கள். இன்று நினைத்தாலும் மனம் சிலிரிக்கும் எழுத்து அவர்களுடையது. புதர்மண்டிக் கிடக்கும் கானகத்திலே மறைந்திருக்கும் கல்வெட்டாக அவர்களை தேடித்தான் படிக்க வேண்டியிருக்கின்றது. புதைந்து கிடக்கும் பூம்புகார் இந்து நாகரீகம் போல அவர்கள் புதைக்கப் பட்டிருக்கின்றார்கள். அப்படியும் சில உன்னதமான எழுத்தாளர்கள் இருந்தார்கள் என […]

இரும்பு மனிதன் – சர்தார் வல்லபாய் பட்டேல்

இது ஒரே இந்துஸ்தானாக இருந்த தேசம். அதனை மொகலாயம் சிந்து நதி தொடங்கி கன்னியாகுமரி வரை தன் ஒற்றை ஆட்சியில் வைத்திருந்தது. இங்கு எப்போதும் ஒரு பேரரசு இருப்பதும் அதற்கு சிற்றரசுகள் வரிகட்டுவதும் வழமையாய் இருந்தது. அப்படித்தான் 16ம் நூற்றாண்டில் மொகலாயம் உச்சத்தில் இருந்தது. அதை எதிர்த்து பெரும் போர் தொடுத்து இனி இங்கு இந்து அரசு, ஒரே இந்துப் பேரரசு என எழும்பினான் வீரசிவாஜி. ஆனால் காலம் அவனுக்கு கருணை காட்டவில்லை. எனினும் அவன் எழுப்பிய […]

தேவர்பிரான் – தென்னாட்டு நேதாஜி, பாண்டிநாட்டுச் சிங்கம் பசும்பொன் தேவர்

தமிழகத்தின் தனிபெரும் தெய்வம் முருகப்பெருமான். அந்த திருமுருகப்பெருமான் இங்கு அரசியல், ஆன்மீகம் என எவ்வகையில் ஆபத்து வந்தாலும் தன் அடியார்கள் மூலம் இந்த மண்ணை மீட்டெடுக்க அருள்புரிவான். இதனைக் காலம் காலமாக வரலாற்றில் காணலாம். சூரபத்மன் காலத்தில் இருந்து பின் எத்தனையோ குழப்பமான காலம், சமணர் காலம், பவுத்த காலம், ஆப்கானியர் காலம் என ஒவ்வொரு காலத்திலும் முருகப்பெருமானின் அடியார்கள் மன்னர்களாக, அடியார்களாக, வீரர்களாக, சீடர்களாக வந்து இந்த மண்ணை காப்பார்கள். ஆழ கவனித்தால் இந்த மண்ணுக்கு […]

மருது பாண்டியர்

24 / 10 / 2023 மருதுபாண்டியர் நினைவுகள் எப்போதும் கண்ணீர்வர வைப்பது, அவர்களின் வாழ்வும் போராட்டமும் கலங்க வைப்பது என்றால் அவர்கள் தியாக வரலாறு கடுமையாக மறைக்கபட்டது என்பது இன்னும் அதிர்ச்சி தரும் செய்தி ஆம், இங்கே ஜாலியன் வாலாபாக்கில் செத்தவர்கள் தெரியும், ஆனால் மருதுபாண்டியரோடு கொல்லபட்ட 800 பேர் பற்றி வரலாறு பேசாது அப்படி ஒரு பெரும் கொடுமை நடந்திருக்கின்றது, சிவகங்கையில் 800 பேரை ஒரே நேரம் பிரிட்டிசார் கொடுமையாக கொன்றொழித்த கொடுமை மருதுபாண்டியரோடு […]

ராஜராஜ சோழன்

25 / 10 / 2023 சிவன் தன் அடியாரை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அவனை விடமாட்டார்.  அவன் எங்கிருந்தாலும் என்ன நிலையில் இருந்தாலும் அப்படித்தான் தேடி வந்து ஆட்கொள்வார். சுந்தமூர்த்தி நாயனாரை அப்படித்தான் மணமேடையில் ஆட்கொண்டார், சமணராக அப்பர் சுவாமிகளை ஆட்கொண்டார், இன்னும் யார் யாரையெல்லாமோ எதிர்பாரா நேரம் ஆட்கொள்வார். தான் ஒருவனை குறித்துவிட்டால் எத்தனை பிறவிகள் என்றாலும் அவனை விடாமல் பிடித்து கொள்வார், தன் அன்புகுரியவன் என்னென்ன இந்த உலகத்துக்கு தன்மூலம் செய்யவேண்டுமோ அதை சரியாக […]

மானிட சாதியின் தனி மனிதன்… அடால்ஃப் ஹிட்லர்

பல்லாயிரம் பேர் அனுதினமும் வந்து பிறக்கும், இறக்கும் உலகில் ஒரு சிலரின் கர்மா வரலாற்றை மாற்றிவிடுகின்றது, கோடியில் ஒருவருக்கு அந்த வரம் கிடைக்கின்றது மானிட இனத்தின் பல பலவீனங்களாலும் அதன் லவுகீக மயக்கங்களாலும் போர்களே உலக வரலாற்றை மாற்றும், போரும் அதுகொடுக்கும் விளைவும் பயமும் அந்த ஆபத்தை களைவிக்க செய்யும் முயற்சிகளும் தயாரிப்பும் விஷத்துக்கு விஷமே முறிவு என்பது போல் பல திருப்பங்களை கொடுக்கும் அது மானிட இனத்தால் புரிந்துகொள்ளமுடியா சூட்சுமாம் புராணகாலத்தில் அசுரர்களை ஆடவிட்டு அந்த […]

பாண்டித்துரை தேவர்

ச‌ங்கம் வைத்து தமிழ்வளர்த்த நகரம் மதுரை, அதுவும் ஞானமுனி அகத்தியனும் ஞானகுரு முருகனும் தெய்வீக கவியான அவ்வை மாதரசியும் இணைந்து தமிழ் வளர்த்த இடம் மதுரை கூடவே அன்றைய மதிப்பிலே லட்ச ரூபாய் கொடுத்தார் அந்த ஆலவாய் நாதனின் ஆலயம்தான் தமிழ் சபையாயிற்று, சிவன் உருவாக்கிய தமிழ்மொழியின் சங்கம் அந்த சிவாலயத்தில்தான் தொடங்கிற்று பின்னாளில் மதுரைக்கான அம்மனான மீனாட்சி அம்மன் கொண்டாடபட்டு அந்த ஆலயம் மீனாட்சி அம்மன் ஆலயம் என உருவானானும் தமிழ்சங்கம் அங்குதான் நடந்தது சிவன் […]

கேசவராம் பலிராம் ஹெட்கேவர்

எக்காலமும் அந்நியருக்கு எதிர்ப்பை கொடுத்துகொண்டே இருக்கும் இந்துஸ்தானம் மொகலயாயரை தொடர்ந்து அதே எதிர்ப்பை வெள்ளையனுக்கும் இந்தியா காட்டி கொண்டே இருந்தது, ஆனால் தன் சாதுர்யமான தந்திரத்தாலும் பிரித்தாளும் சூழ்ச்சியாலும் அவன் அதை அடக்கி கொண்டே இருந்தான் அவனை எதிர்ப்போரை மக்களிடம் இருந்து தனிமைபடுத்தி வீழ்த்துவது அவன் தந்திரொபாயங்களில் ஒன்று, ஆச்சரியமாக இந்திய மக்களும் பெரும் எதிர்ப்பினை திரண்டு காட்டவில்லை, கட்டபொம்மன் முதல் பலர் தூக்கிலிடபடும் பொழுதெல்லாம் தேசமெங்கும் ஒரு ஒற்றுமையான எதிர்ப்பு இல்லை 1857 முதல் விடுதலைபோர் […]

ஜாலியன் வாலா பாக்.

அக்காலகட்டம் வெள்ளை அரசு ஆடிகிடந்தது, காரணம் 1917 அதாவது 1919ன் ஈராண்டுகளுக்கு முன்னர்தான் ஜார் மன்னனை வீழ்த்தி புரட்சியாளன் லெனின் ரஷ்யாவில் ஆட்சி அமைத்திருந்தார், அது உலகெங்கும் உரிமைக்காக போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிற்று, ஏகாதிபத்தியம் அச்சமுற்ற நேரம். உலகின் சரிபாதியினை ஆண்டுகொண்டிருந்த ஏகாதிபத்திய ஆங்கிலேயன் அச்சமுற்று, இதனை தடுக்க ரவுலட் என்பவர் தலமையில் குழுபோட்டு ஆலோசித்தான், முடிவில் அது சட்டமாயிற்று. கொடுமையான சட்டம் அது, “ம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்.” என்ற வசனத்தின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications