பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திய பயணம் இனிதாகவே முடிந்தது…

அவிழ்த்து விடபட்ட கன்று ஒன்று தொழுவத்தில் கட்டபட்டாயிற்று, செக்கு மாட்டின் கழுத்தில் நுகத்தை பொருத்தியாயிற்று அதாவது சங்கம் இந்திய பயணத்தை முடித்துவிட்டு திரும்பிவிட்டது. எத்தனையோ பயணங்களை செய்தாலும் இப்பயணம் வாழ்வில் மறக்க முடியாது, அந்த அளவு நண்பர்கள் நெகிழ செய்திருக்கின்றார்கள், சிறிய கொடியில் பெரும் பூசனி காய்ப்பது போல இந்த முகநூல் எனும் சிறிய முயற்சி ஏராளமானவர்களை பெற்று கொடுத்திருப்பது அங்கு சென்றபின்புதான் தெரிந்தது நண்பர் Kennedi M G விமான நிலையத்திற்கே வந்திருந்தார், அவர் இல்லத்திற்கு அழைத்து அற்புதமான […]

தாய் மண்ணிற்கு வர காத்திருப்பது ஒருவிதமான வலி

தாய் மண்ணிற்கு வர காத்திருப்பது ஒருவிதமான வலி, அதுவும் டிக்கெட் வந்துவிட்டால் அதன் பின் உண்ண தோன்றாது, உறக்கம் வராது நினைவுகள் அங்கே சுற்றிகொண்டே இருக்கும் ஒவ்வொரு முறையும் கிளம்பும்பொழுது ஆயிரம் திட்டம் இருக்கும், இம்முறை பலரை சந்திக்கவேண்டும் பல இடங்களை பார்க்க வேண்டும் என கடும் திட்டமிடல் உண்டு செங்கோட்டை முதல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைவரை குறித்து வைத்துவிட்டுத்தான் வருவது, ஆனால் வந்து தாயின் முகம் கண்டுவிட்டால் எல்லாம் மறந்துவிடும், ஒரு அடி நகர மனம் வராது, […]

முகநூலில் காதல் திருமணம் என ஆசைகாட்டி மோசம் செய்யும் கோஷ்டி….

முகநூலில் அப்பெண்ணின் ஐடி மைதிலி என்றிருந்திருக்கின்றது, ஆளாளுக்கு முதலில் லைக் போட்டிருக்கின்றார்கள், பின் இன்பாக்ஸில் ஹாய் போட்டிருக்கின்றார்கள் அந்த ஐடியோ மிக நுட்பமாக வடிகட்டியிருக்கின்றது யாரெல்லாம் வெளிநாட்டில் இருக்கும் சம்பாதிக்கும் பேச்சுலர் என உறுதிபடுத்தி அங்கு வலையினை வீசியிருக்கின்றது முதலில் பழகுவது பின் படங்களை அனுப்புவது பின் பேசுவது அதன் பின் திருமணம் என பேச்சை தொடங்குவது என பெரும் நுட்பமான திட்டமெல்லாம் வைத்திருக்கின்றது அந்த ஐடி இதில் வசமாக சிக்கி இருக்கின்றனர் தமிழக வாலிபர்கள் பலர், […]

பண்டிகை காலங்கள் உலகம் முழுக்க சிக்கலாகிவிட்டன

உலகில் தற்காலிகமாக நடைபெறும் மனித இடப்பெயர்வில் எது மிகபெரியது என்ற ஆய்வில் சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி மக்கள் ஓடி பின் திரும்புவது என அறியபட்டது அந்த அளவு ஏராளமான மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களில் இருக்கின்றார்கள், அப்பண்டிகைக்காக கிராமங்களுக்கு செல்ல அத்தனை கோடி பேர் தயாராவார்கள், புல்லட் ரயில் உட்பட பல விஷயங்களை செய்திருந்தாலும் அந்நேரத்தில் சீனா திணறத்தான் செய்யும் பொது பேருந்து என்றால், கார் வைத்திருப்பவர்கள் எல்லாம் சாலையில் அணிவகுத்தால் என்ன […]

பிள்ளை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்

காலையில் இட்லி சாப்பிட்டுகொண்டிருந்தால் அருகில் வந்த மகளுக்கு சட்னியினை பார்த்ததும்  திடீர் ஞானம் வந்தது. “ஏம்பா சட்னி ஊத்தி சாப்பிடுறீங்க, ஒரு அங்கிள் பீர் ஊத்தி சாப்பிடுவார்லா, அப்படி சாப்ட்டா நல்லா இருக்கும்ல..” என்றாள். பிள்ளை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் எல்லாம் டிவியில் சாமி படம் பார்த்த எபெக்ட் “ராசாத்தி எனக்கு மட்டும் ஆசை இல்லையா இதனை அப்படியே உங்க அம்மா கிட்ட சொல்லும்மா..” என அனுப்பினால் இன்னும் பதில்வரவில்லை. எப்படியோ சும்மாவே குஷ்பு […]

என்னையும் ஒரு எழுத்தாளனாக மதித்து….

சங்கம் வைத்து குஷ்பு புகழ் வளர்த்தும் அவர் வீட்டு வாட்ச்மேன் கூட , அட அவன் கால் ஷூ கூட‌ கண்டுகொள்ளா உலகில், என்னையும் ஒரு எழுத்தாளனாக மதித்து , வோட்டு கேட்கும் அளவிற்கு சென்றுவிட்ட பிள்ளாய், நீர் யாரென தெரியவில்லை உன் நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது சாமி….நீ ரொம்ப நல்லா இருப்பப்பா.. நல்லா இருப்ப‌ என் கல்லீரல் கிட்னி எல்லாம் உனக்குத்தாம்பா, எது வேணுமோ எடுத்துக்க‌    

தூக்கு தண்டனை என்பது அரசே செய்யும் கொலை : கவுசல்யா சங்கர்

தூக்கு தண்டனை என்பது அரசே செய்யும் கொலை, அது கூடாது : கவுசல்யா அரைகுறை போராளி எப்படி இருப்பார்கள் என்றால் இப்படித்தான் கொல்லபட்ட கணவனுக்கு நீதிவேண்டும் என கொடிபிடித்தவரும் இவர்தான், இப்பொழுது தந்தைக்கு தூக்கு என்றவுடன் தூக்கு வேண்டாம் என்பவரும் இவர்தான் தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்கள், எதுவும் ஆடட்டும் அது அவர் விஷயம் ஆனால் என்ன சொல்ல வருகின்றார் அம்மணி? கணவன் கொல்லபட்டது குற்றமாம், ஆனால் குற்றவாளி தூக்கில் போடபட கூடாதாம் அப்படியானால் சிறையா? […]

வம்பிழுக்கும் ஒரு சீன நண்பர்….

ஒரு சீனன் வம்பிழுத்துகொண்டே இருக்கின்றான். அடிப்படையில் அவன் நல்லவன் ஆனால் படுபயங்கர ஸ்ட்டிரிட் பேர்வழி, வேலை தவிர ஏதும் தெரியாது . அதுதான் அவனுக்கும் எனக்கும் சிக்கல் நாம் ஒன்று கேட்டால் அவன் ஒன்று சொல்வான் இருவரும் பேசினால் செவிடர்கள் பேசியது போலவே இருக்கும் , இருக்கும் டென்சனில் பல இடங்களில் உரசிகொண்டே இருக்க்கின்றது மனிதனை எங்கு அடிக்கலாம் என்றால் ஒரு வழியும் இல்லை. அந்த அளவு வேலையிலும் மற்ற பழக்க வழக்கங்களிலும் சுத்தம் எந்த பலம் […]

நானும் தேடிகொண்டே இருக்கின்றேன் 17 வருடமாக…

அது கல்லூரி பருவகாலம், 1990களின் கிரிக்கெட்டை தவிர ஒரு மண்ணாங்கட்டி விளையாட்டும் தெரியாத சராசரி இந்திய‌ இளைஞர்களில் ஒருவனாகிவிட்டபடியால் அதனை விளையாடியே ஆகவேண்டிய கட்டாயம். ஆனாலும் சர்வகிராம போட்டிகளில் ஒரு போர் கூட அடித்தவனோ அல்லது ஒரு கேட்ச் எடுத்தவனோ அல்ல. கிரிக்கெட்டின் பெரும் சுவாரஸ்யமே அடுத்தவன் விளையாடுவதை பார்ப்பது, அதுவும் சச்சின், ஜடேஜா போன்றவர்கள் பின்னி எடுத்தகாலம், ஆஸ்திரேலியாவின் வார்ன்,ஸ்டீவ் வா,மெக்ரத். பாகிஸ்தானின் இன்சமாம்,முஷ்டாக் என பல ஜாம்பவான்களை ரசித்தகாலம். பாலா சினிமா போல தனியாக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications