பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு தமிழனுக்கு சிங்களன் குரல் கொடுக்கின்றான்

இலங்கையில் தமிழனுக்கு ஒரு அநீதி நடந்திருக்கின்றது, இங்கு தட்டிகேட்பார் யாருமில்லை அதாவது பந்துவீச்சில் சாதனை படைத்த தமிழன் முத்தையா முரளீதரன். அவர் விளையாண்ட காலம் எல்லாம் அவர் பந்து எதிரிக்கு சிம்ம சொப்பணம். இலங்கைக்கு உலக‌ கோப்பை பெற்று தந்ததில் முரளிதரனின் பங்கு அதிகம். இன்றும் அதிக விக்கெட்டுகள் வீசிய சாதனை அவர் வசமே இருக்கின்றது. அவரை முடக்கி ஷேன் வார்ணேயினை உயர்த்திவிடும் எல்லா ஆஸ்திரேலிய திட்டங்களும் தவிடுபொடியாயின‌ இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கிரிக்கெட்டர்களில் முரளிதரனும் […]

இந்தியா பாகிஸ்தானுக்கு விளையாட வரவேண்டும் : பாகிஸ்தான் கேப்டன் அழைப்பு

இனியாவது இந்தியா பாகிஸ்தானுக்கு விளையாட வரவேண்டும் : பாகிஸ்தான் கேப்டன் அழைப்பு எப்படி எல்லாம் இந்திய அணியினை கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்? எல்லாம் அஸ்வினும், ஜடேஜாவும் இருக்கும் தைரியம் யோவ், மனசாட்சியே இல்லாமல் இப்படியா கலாய்ப்பது, பாவம் அவர்களே நோந்துபோய் இருக்கின்றார்கள். இந்திய அரசு பாகிஸ்தானோடு சுட்டு விளையாடுவதை தவிர வேறு விளையாட்டு இல்லை என சொல்லிவிட்டது, அப்படி சொல்லி இந்திய அணியினை காப்பாற்றியிருக்கின்றது ஆனால் இந்தியர்களின் ஆசை என்னவென்றால் அவர்களை கொண்டு போங்கள், கதற கதற கிரிக்கெட் […]

இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது

இரு நாட்களுக்கு முன்பு, ஒரு தொப்புள் கொடி உறவு என சொல்லிகொள்ளும் இலங்கையர் ஒருவர் புன்னகை பூக்க சொன்னார், “எப்படி பார்த்தீயளே, இந்தியாவினை விரட்டி போட்டோம், இனி கிண்ணம் எங்கட நாட்டுக்குத்தான், கோப்பை கிடைக்காமல் போனாலும் உங்கள ஜெயிச்சு போட்டோம் பாத்தியளே” என கடும் உற்சாகத்தில் சொன்னார் “பொறுத்து பாரும், கடைசியில் உங்களை அடித்து விரட்டிவிட்டு கோப்பையினை வென்று காட்டுவோம்” என சொல்லிவிட்டு வந்தேன். சொன்னபடி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. அவரிடம் போட்ட சவாலில் பாதி வென்றாகிவிட்டது, […]

தெருமுனையில் கிரிக்கெட் ஆடும் பொழுது….

அக்காலத்தில் தெருமுனையில் கிரிக்கெட் ஆடும் பொழுது, பந்து அங்கு திண்ணையில் இருக்கும் கிழவிகள் தலையினையோ அல்லது வீட்டு ஓட்டையோ தாக்கும் உடனே அந்த கிழவிகள் கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு அடிக்க ஓடிவருவார்கள், அது கம்போ, உலக்கையோ அல்லது ஆட்டுக்கு வைத்திருக்கும் இலை குழைகளோ எதுவோ ஒன்று அதனை கையில் வைத்து கொண்டு தை தை என‌ ஆடுவார்கள் இந்த ஐபிஎல்லின் சியர்ஸ் கேர்ல்ஸ் ஆட்டத்தை பார்க்கும் பொழுது அந்த கிழவிகளின் ஆக்ரோஷ ஆட்டம்தான் நினைவுக்கு வருகின்றது […]

ஐபிஎல்: தமிழக வீரர் நடராஜ்..

எத்தனை வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடினாலும் யானை கலை மடக்கி மிதிப்பதை போல, காலை மடக்கி சிக்சர் அடிக்கும் டிவில்லயர்ஸை பார்க்க அழகாகத்தான் இருக்கின்றது, அப்படி மிக துல்லியமாக கணித்து விளாசுகின்றார், மிக சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை தமிழக வீரர் நட்ராஜின் பந்துவீச்சை பார்ப்பதற்காக காத்திருந்தேன், மிக மிக வறிய குடும்பத்தில் பிறந்து, தெருமுனையில் ஆடி இந்திய கிரிக்கெட்டில் குறிப்பிட்ட இடம் பிடித்தவர் அவர், அவர் மேல் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் நேற்று அவருக்கு ஒரு […]

ஐபிஎல் போட்டிகளை நேரம் கிடைத்தால் பார்க்கலாம்…

ஐபிஎல் போட்டிகளை நேரம் கிடைத்தால் பார்க்கலாம், சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றது நேற்றைய போட்டியில் குஜராத்தும், கொல்கத்தா அணியும் மோதின, இரு அணியிலும் பவுலர்கள் சரியில்லை அதுவும் குஜராத் அணியின் பவுலர்கள் இன்னும் மகா மோசம், குறிப்பாக ஒரு ஸ்பின் பவுலரை கொண்டுவந்திருந்தார்கள், அவரும் மிக சரியாக சிக்சர் அடிக்குமாறு வீசி கொடுத்தார். அவர் பந்துவீச வந்தவுடன் அம்பையர் இரு கைகளை தூக்கிகொண்டே நிற்க தயாராகும் அளவு நிலமை இருந்தது ஒரு பவுலர் கூட விக்கெட் எடுக்கும் வெறியில் பந்து […]

விராட் கோஹ்லிக்கு பத்மஷ்ரி விருது

விராட் கோஹ்லிக்கு பத்மஷ்ரி விருது கோஹ்லி திறமையான ஆட்டக்காரர், ஆனால் ஏன் இவரை விட சிறந்த ஆட்டக்காரரான டோனிக்கு அந்த விருது ஏன் கிடைக்க்கவில்லை? டோனிக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஏதோ உரசல் இருப்பது அவ்வப்போது தெரிகின்றது, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு, கேப்டன் பதவியிலிருந்து விலகல் என அந்த விஷயங்களில் நன்றாக தெரிகின்றது டோனியின் காலங்கள் இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவ் காலத்திற்கு அடுத்த பொற்காலம் என்பதனை பின்பு வரலாறு சொல்லும்.. டோனிக்கும் ஒரு பத்மஷிரி கொடுத்திருக்கலாம், நிச்சயம் கொடுத்திருக்க […]

ஹேப்பி பர்த்டே விவியன் ரிச்சர்ட்ஸ்

கிரிக்கெட்டை நேசித்தால் அவரையும் நிச்சயமாக நேசித்தே தீரவேண்டும் இன்றைய டி20 மேட்ச்களை அன்றைய டெஸ்ட் மேட்சிலே ஆடியவர், அதுவரை ஸ்டைலாக மெதுவாக ஆடவேண்டிய ஆட்டம் என்றிருந்த கிரிக்கெட்டினை அதிரடி ஆட்டத்திற்கு மாற்றி காட்டியவர் அவர் ஆட வந்தபின்புதான் உலகம் கிரிக்கெட்டை ரசிக்க முடிந்தது, அவரை முன்மாதிரியாக கொண்டுதான் ஸ்ரிகாந்த், டெண்டுல்கர், லாரா மியான்டட், உல்ஹக், டோனி, கெயில் என எல்லோரும் உருவானார்கள் கம்பீரமான உருவத்துடன் கையில் மட்டையுடன் அவர் களமிறங்கினால், அவர் உருவத்திற்கு அது குச்சி போலிருக்கும், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications