பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிரபாகரனின் தம்பி என்றால் சும்மாவா?

அந்த பிரபாகரனுக்கு அப்பொழுது 14 வயது இருக்கும், அப்பொழுதே அவர் போராளி. சிங்கள அரசினை எதிர்க்க ஒரு பஸ்ஸை எரிக்க வேண்டும் என அவரும் கூட்டாளிகளும் முடிவெடுத்தனர், ஆனால் பஸ் வந்ததும் ஓடிவிட்டனர் ஆனால் அமைதியாக திட்டமிட்டபடி வெகு சிலரோடு பஸ்ஸை எரித்துவிட்டு திரும்பினார் பிரபாகரன், போலிஸ் விசாரித்து வீட்டுக்கே வந்தது பின் வாசல் வழியாக தப்பி ஓடினார் பிரபாகரன், அதற்கு முன்பு என்ன செய்திருந்தார் என்றால் போலிஸ் தன் படத்தினை கைபற்ற கூடாது என முன்யோசனையில் […]

ஈழத்தில் சாதிக் கொடுமை….

ஈழம், யாழ்பாணம் தமிழர் தொப்புள் கொடி இன்னபிற விஷயங்களுடன் கலைஞரும் திமுகவும் அவருக்கு துரோகம் இழைத்தது என சொல்லிகொண்டிருப்பவர்கள் இதனை கவனிக்கலாம் யாழ்பகுதியில் கண்ணகை ஆலயம் உள்ளது, அங்கு நடந்திருக்கும் சம்பவம் அப்படி கண்ணகை என்பது கண்ணம்பாள் சாமி வகையறா, கண்ணகிக்கு வேறு இடங்களில் அங்கு கோவில் உண்டு இங்கு திருவிழா கொண்டாடி இருக்கின்றார்கள், சிக்கல் சாதி வடிவில் வந்திருக்கின்றது ( சாதிய வன்மங்களுக்கு தமிழகத்தை விட தீபற்றி எரியும் பகுதி அது, புலிகள் ஈழத்தையே எரித்ததால் […]

ஜூன் 5 : ஈழ முதல் போராளி சிவகுமார் நினைவுநாள்

அது 1974ம் ஆண்டு, தமிழர்களை சிங்கள அரசுகள் ஒடுக்க ஆரம்பித்த நேரம். வஞ்சகமாக இந்திய மலையக வம்சாவழிதமிழரில் பெரும்பான்மையினரை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு (அப்பொழுது ஒரு ஈழதமிழரும் அதனை கண்டிக்கவில்லை,எதிர்க்கவில்லை என்பதுவேறுகதை ) ஈழதமிழரை குறிவைத்து காய்களை நகர்த்தியது. இறுதியாக ஒரு திட்டத்தினை கொண்டுவந்தது. அது சிறிமாவோ பண்டாரநாயக அரசு, ஒரு யானைகுட்டியை கொடுத்து கச்சதீவை வாங்கியர் (அதாவது கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டபொழுது இந்திராவுக்கு இவர் ஒரு யானைகுட்டி பரிசளித்தார்) என சிங்களர்களால் கொண்டாடபட்ட சிறீமாவோ ஒரு கடும் […]

ஜூன் 4 ராஜிவின் மாபெரும் துணிச்சல் தெரிந்த நாள்

இலங்கையில் வடமாராட்சி என்றொரு பகுதி உண்டு, அன்று புலிகளின் கோட்டை அது அப்பொழுது இருந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆப்பரேஷன் லிபரேஷனை தொடங்கினார், அதாவது புலிகளை முற்றிலும் ஒழிப்பது பிரபாகரனின் ஏ1 முகாம் உட்பட பல்லாயிரம் தமிழரோடு அப்பகுதியினை வளைத்தது சிங்களபடை, புலிகள் அப்பொழுது தற்கொலை தாக்குதல் வேறு நடத்தியதில் சிங்கள படை கொலை வெறியில் இருந்தது மில்லர் எனும் புலி நடத்திய தாக்குதலில் பல ராணுவத்தார் கொல்லபட சீறி நின்றது சிங்கள தரப்பு இனி பொறுப்பதில்லை, […]

புத்தகம் இல்லா நூலகம், தெய்வம் இல்லா ஆலயம்

37ஆண்டுகளுக்கு முன்பாக இந்நேரம் யாழ்பாணத்தில் அந்த நூலகம் எரிய ஆரம்பித்தது, தரப்படுத்துதல் எனும் இடஒதுக்கீட்டினை எதிர்த்து ஈழமாணவர்கள் போராடிகொண்டிருந்த நேரம் அது, தனிஈழம் மட்டுமே தீர்வு என சொல்லி அரசியல்வாதிகளும் தூண்டிவிட்ட காலம் அது, தேர்தல் கால பிரச்சார கூட்டத்தில் சில போலிசார் கொல்லபட அது கலவரமாக வெடித்தது. அக்காலத்தில் யாழ்பாண தமிழரின் அறிவின் அடையாளமாக அந்நூலகம் இருந்தது. அங்கிருந்த புத்தகங்கள் அரியவை இனி கிடைக்காதவை. வாசலில் சரஸ்வதி சிலையும் அழகான கட்டிடமாக பெரும் அறிவு பொக்கிஷமாக […]

ஆளாளுக்கு முள்ளிவாய்க்கால் என கதறுங்கள்

ஆளாளுக்கு முள்ளிவாய்க்கால் என கதறுங்கள், அலறுங்கள், பிரபாகரன் மீன்பிடித்து பொரித்து கொடுத்தான் என கதையும் விடுங்கள் ஆனால் இனி ஈழம் அழியும் என கண்ணால் கண்ட சாட்சிகள் மிக சில, தமிழகத்தில் இதனை பற்றி பேசும் ஒரே தகுதி கொண்டவர் மிக சிலர், சில‌ர் மகா முக்கியமானவர்கள் ஆனால் அவர்கள் வாய்திறப்பதில்லை பண்ருட்டி ராமசந்திரனும் ப.சிதம்பரமும் அதில் முக்கியமானவர்கள். ப.சிதம்பரம் பிரபாகரன் இந்தியாவில் பயிற்சிபெறும்பொழுது அவனை தன் பாதுகாப்பிலே வைத்திருந்தார், திராவிட கும்பலோடு பழகிய பிரபாகரன் சிதம்பரத்திடம் […]

பிரபாகரன் திருந்தவில்லை, பாலசிங்கம் விலகினார், அப்படியே மரணமடைந்தார்

இந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்பதே கலைஞரையும் காங்கிரசையும் திட்டுவதற்கு என்றே நடத்தபடுகின்றது, நடக்கட்டும் இதில் 2005ல் நடந்த சம்பங்கள் , 2009க்கு எப்படி வழிவிட்டது என்பதை மட்டும் எல்லோரும் மறக்கின்றார்கள், உண்மையில் புலிகள் ராஜிவ் கொலையில் சாகவில்லை. அவர்கள் செய்த ஏகபட்ட அட்டகாசங்களுக்காக சாகவில்லை 2001ல் உலகளாவிய தீவிரவாதிகள் நெட்வொர்க்கை பின்லேடன் அட்டகாசத்தையொட்டி அமெரிக்கா தேட தொடங்கியபொழுது பல்வேறு தீவிரவாதகுழுக்களுடன் புலிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது உச்சமாக வடகொரியாவிடம் இருந்தும் எல்லா தீவிரவாதிகளுக்கும், புலிகளுக்கும் ஆயுதம் வருவது […]

துரியோதனன் வீரசுவர்க்கம் அடைந்ததுபோல் அவன் அடையட்டும்

பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடும் பூரா பயலும் அவர் இறந்தநாளான இன்று ஒரு அஞ்சலியும் செலுத்தவில்லை பிரபாகரன் இல்லை என்பதே உண்மை, இலங்கை அரசு கடந்தவருடம் குண்டுதுளைக்கா கார்களை, பாதுகாப்பு வாகனங்களை எல்லாம் கடலில் தள்ளியது அதற்கு இரு காரணம், பராமரிப்பு செலவு அதிகம் விற்றுவிட்டால் ரவுடிகள் வாங்கி தங்கள் பாதுகாப்பிற்கு வைத்துகொள்வார்கள் என்பதால் அம்முடிவு எடுக்கபட்டது அதாவது இனி கொழும்பு அரசதந்திரிகளுக்கு ஆபத்து இல்லை என்பதை சொல்லிவிட்டது இதனால் பிரபாகரன் வைகோவின் கார் டிக்கி, சீமான் […]

நீ முள்ளிவாய்க்கால் படம் போட்டுகொண்டே இரு

ஆங்காங்கே என்னையும், கலைஞரையும், இந்தியாவினையும் திட்டிகொண்டிருக்கும் சைமனின் தும்பிகளுக்காகவும், குபீர் தமிழுண்ர்வு போராளிகளுக்காகவும், இந்தியா ஈழதமிழரை கொன்றது என சொல்பவர்களுக்காகவும் சொல்லிகொள்வது.. கடவுள் மனிதனை மண்ணிலிருந்து படைத்தாராம், ஆனால் உங்கள் மண்டைகளில் ஏன் அந்த மண் அப்படியே இருக்கின்றது என தெரியவில்லை, ஏதோ ஈழத்தில் சண்டை 2006ல்தான் வந்தது போலவும், பிரபாகரன் பெரும் உத்தமன் என்பது போலவும், 2009ல் இந்தியா அவனை கொல்ல முன்னின்றது என்பது போலவும் எத்தனை பொய்கள்? எத்தனை புரட்டுகள் சரி, என்னை திட்டுமுன் […]

இன்று பிரேமதாசா நினைவு தினம்

இலங்கை மிகசிறிய தீவு, சிங்கள எண்ணிக்கையும் அதிகம் அல்ல ஆனால் மிக சிறந்த ராஜ தந்திரிகள் எல்லாம் அங்கு உருவானார்கள் தங்கள் நாட்டுக்கு ஆபத்து வந்தபொழுதெல்லாம் அற்புதமாக முறியடித்தார்கள். அவர்கள் வரம் அப்படி. பண்டாராநாயக காலத்திலிருந்து புலிகளை வீழ்த்திய ராஜபக்சே வரை அவர்களின் நாட்டுபற்று துணிவும் அலாதியானது ஜெய்வர்த்தனே என்பவரெல்லாம் யூதர் போன்றே நரிமூளைக்காரர். இலங்கையில் இந்தியாவின் ஆட்டத்தை தன் அபார அணுகுமுறையால் கத்தியின்றி ரத்தமின்று முடித்து வைத்த வித்தகர் அந்த வரிசையில் ஒருவர் பிரேமதாச‌ மிக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications