பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திலீபன் ஏன் சாகடிக்கபட்டான்

  திலீபன் உண்ணாவிரதம் இருந்தான் செத்தான், கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார் சாகவில்லை என சில பதர்கள் கிளம்பியிருக்கின்றன‌ காரணம் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த நாளாம் இன்று திலீபன் உண்ணாவிரதத்தின் கள்ளதனம் என்ன என்பது, நுட்பபமாக கவனித்தால் அன்றி விளங்காது அன்று அமைதி ஒப்பந்ததை எங்கள் வசூல் பாதிக்கபடும் இன்னபிற சிக்கல்கள் உண்டு ஆயுதங்களை கீழே வைக்கமாட்டோம் மாதம் 50 லட்சம் வேண்டும் என்றெல்லாம் சொல்லியே ஏற்றுகொண்டனர் புலிகள், அவர்கள் மனதில் யுத்தம் தொடங்கும் நோக்கமே இருந்தது ராஜிவ் […]

போராளி ஆக அனுதாபம் மட்டும் போதாது அறிவும் வேண்டும்

சாதியால் கணவனை இழந்தவள் எல்லாம் போராளியாகவேண்டுமென்றால் முதுகுளத்தூரிலும், நெல்லையிலும், விழுப்புரத்தில் இருந்தும் பெரும் போராளி பெண்படையே வந்திருக்க வேண்டும் போராளி ஆக அனுதாபம் மட்டும் போதாது அறிவும் வேண்டும் இந்த கவுசல்யா என்னவெல்லாமோ பேசுகின்றது, 2009ல் ஈழவிவகாரத்தில் திமுக நிலை கேள்விக்குறியாம் அம்மா உனக்கு என்ன தெரியும்? 1978முதல் 1990 வரை திமுக ஈழபோராளிகளுக்கும் ஈழமக்களுக்கும் செய்த விஷயம் தெரியுமா? ஈழவிவகாரத்திற்காக இருமுறை ஆட்சி இழந்தும் 1991ல் படுதோல்வியுற்ற கதை தெரியுமா? நீ அப்பொழுது பிறக்கவே இல்லையம்மா, […]

2002 பேச்சுவார்த்தைக்கு பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது

2002 பேச்சுவார்த்தைக்கு பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது. முன்பே நாம் சொன்ன விஷயம்தான் ஆனையிறவின் மகத்தான வெற்றிக்குபின்னும் புலிகள் யுத்தத்தை தொடரவில்லை. காரணம் ஆட்கள் பற்றாகுறை யாழ்பாணத்தார் வசதியானவர்கள் என்பதால் புலிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு ஐரோப்பா , கனடா என தப்ப புலிகளின் ஆள்திரட்டல் குறி வறுமையான கிழக்கும் பக்கம் பதிந்தது இந்நிலையில் நார்வே வேறு பேசிகொண்டிருந்தது, இம்முறை புலிகள் முடிவிற்கு வந்தே தீரவேண்டும் என கட்டளை இட்டன மேற்குலக நாடுகள் பிரபாகரனோ நார்வேக்கு போக்குகாட்டிவிட்டு […]

“கந்தன் கருணை” படுகொலை

அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம் அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம் இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது “கந்தன் கருணை” என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று […]

சிங்களர்களால் தாக்கபட்டதை கண்டித்து இலங்கை தூதரகம் முன் போராட்டம் : சீமான்

இலங்கையில் தமிழ் பேசும் இஸ்லாமியர் சிங்களர்களால் தாக்கபட்டதை கண்டித்து இலங்கை தூதரகம் முன் போராட்டம் : சீமான் இதே இஸ்லாமிய தமிழர்களை 1991ல் மசூதிக்குள் புகுந்து புலிகள் தொழுகை நேரத்தில் கொன்றபொழுது, 200 இஸ்லாமியர் 20 குழந்தைகள் உட்பட கொடூரமாக சாகும்பொழுது 500ரூபாய் மட்டும் எடுத்துகொண்டு இஸ்லாமியர் அனைவரும் அகதிகளாக ஓடவேண்டும் என பிரபாகரன் ஆயிரகணக்கானவரை விரட்டி அடித்தபொழுது அங்கிள் சைமன் பாரதிராஜாவின் கேமராவிற்கு பின்னால் இருந்து தொழில் கற்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது சிங்களன் அடித்தால் […]

இலங்கை மறுமுறையும் எரிய தொடங்கிவிட்டது

இலங்கை மறுமுறையும் எரிய தொடங்கிவிட்டது, இம்முறை சிங்களருக்கும் இஸ்லாமியருக்கும் சண்டை அவர்கள் தமிழ்பேசும் இஸ்லாமியர். ஆனால் தமிழரில் சேரமாட்டார்கள். ஈழதமிழரிடம் கேட்டால் அவர்கள் பாகிஸ்தானிய அனுதாபி என்பார்கள், சரி இந்தியா எதிரி யார்? ராஜிவினை கொன்றது யார்? என கேட்டால் பதில்வராது இலங்கை சுதந்திரத்திற்கு முன்பு ஈழதமிழரும் சிங்களனும் சேர்ந்து இஸ்லாமிய தமிழனையே அடித்தார்கள் சுதந்திரத்திற்கு பின் ஈழதமிழனுக்கும் சிங்களனுக்கும் முட்டியது, புலிகள் ஒழிக்கபட்டபின்பு மறுபடியும் சிங்களம் இஸ்லாமியரை உரச ஆரம்பித்தது பற்பல சிக்கல்கள் வந்துகொண்டே இருந்தன‌ […]

இலங்கை கண்டி மாவட்டத்தில் கலவரம்

இலங்கை கண்டி மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டாயிற்று, அடிதடி சாவு, ஊரடங்கு உத்தரவு என்ற நிலை வந்தாயிற்று. வழக்கமாக இலங்கையில் யாரும் தும்மினாலே இங்கு “டண்டனக்கா “ஆடுபவர்கள் யாரும் இப்பொழுது சத்தம் இல்லை ஏன்? இந்த சண்டை தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் சிங்களர்களுக்குமானது இவர்கள் இருவரையும் ஈழதமிழர்களுக்கு பிடிக்காது அதனால் இங்கு பூரண அமைதி இனி தமிழக‌ இஸ்லாமிய இயக்கங்கள் அவர்களுக்காக கொடிபிடிக்கலாம், பெரும் ஆர்பாட்டம் நடத்தலாம் அதற்கு இலங்கை தமிழரிடமிருந்து சுத்தமாக ஒரு வரவேற்பும் இருக்காது இவ்வளவிற்கும் […]

இலங்கையின் 70ம் நாள் சுதந்திர தினவிழா

இலங்கையின் 70ம் நாள் சுதந்திர தினவிழா கொண்டாடபட்டிருக்கின்றது இலங்கை மிக சிறிய தீவுதான், அதன் மக்கள் தொகை 2 கோடிதான் ஆனால் தந்திரங்களிலும் அசாத்திர ராஜவியூகத்திலும் அந்நாடு பொல்லாதது தமிழர்கள் வாழ்ந்த தீவு பின் சிங்கள குடியேற்றம் நடந்தது அதன் பின் புத்தம் தளைத்தது, பின்னாளில் இஸ்லாமும் கிறிஸ்தவமும் வளர்ந்தன. போர்த்துகீசியர் அங்கு காலடி வைக்கும்வரை அந்நாட்டின் அழகும் வளமும் வெளிதெரியவில்லை, பிரிட்டிசார் அந்நாடு ஒரு சொர்க்கம் என கண்டனர். அட்டகாசமான துறைமுகம், மழை வளம், மண் […]

ஆக செத்தான் ராஜபக்சே ஹஹஹஹா.

“சந்திரிகா மேடம், அந்த சீமான் இப்போ தெலுங்கில் எல்லாம் வோட்டு கேட்கின்றாராம், இனி சிங்களத்தில் வோட்டு கேட்க எவ்வளவு நேரம் ஆகும்? அதனால் அடுத்த தேர்தலுக்கு ராஜபக்சேவினை எதிர்த்து அவரை சிங்களம் பேச வைத்து பிரச்சாரத்திற்கு இழுத்துவிடலாம் யெஸ் ரனில், ஏற்கனவே சிங்கள நடிகையினை எல்லாம் அவர் படத்தில் நடிக்க வைத்திருப்பதால் சிங்களம் ஓரளவு தெரியும் என செய்திகள் உறுதிபடுத்துகின்றன‌ ஆக செத்தான் ராஜபக்சே ஹஹஹஹா..”  

புலிகள் இயக்கத்து இயக்கமே பொட்டு அம்மான்

ஒரு விஷயம் சலசலக்கின்றது, அந்த விஷயத்திற்கு போகுமுன் ஒரு முன்னோட்டம் பார்க்கவேண்டும் புலிகள் இயக்கம் மீது ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் அதில் இருந்த பிராதான வித்தகர்களின் திறமைகள் கொஞ்சம் அல்ல, ஜெகஜால கில்லாடிகள் எந்த முற்றுகையினையும் உடைக்கும் பால்ராஜ், வளைத்து அடிக்கும் கருணா, எந்த நாட்டில் இருந்தும் அசால்ட்டாக ஆயுதம் கடத்தி வந்த கே.பி. மிக மிக கவனமாக செயல்பட்ட கிடைக்கும் ஒற்றை நொடியில் பெரும் திருப்பங்களை கொடுக்கும் பொட்டு அம்மான் என்னும் சன்முகலிங்கம் சிவசங்கரன் எனும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications